- Friday
- November 21st, 2025
இனஅழிப்புக்கான பரிகாரநீதித் தேடலிலும், தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களுடைய அரசியல் விருப்பினை வென்றெடுப்பதற்கும், சனநாயக வழிமுறையில் மக்களை அணிதிரட்டி, ஒருமித்த கருத்துருவாக்கத்தினை ஏற்படுத்துகின்ற செயற்பாடாகவே, தமிழ் மக்கள் பேரவையின் தோற்றத்தினை அவதானிப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொது விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...
தென்பகுதி கடற்தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற கடற்பாதுகாப்பு அங்கி வடபகுதி கடற்தொழிலாளர்களுக்கு வழங்கப்படாததாலேயே அனர்த்தங்களின் போது கடற்தொழிலாளர்களது உயிர்கள் காவுகொள்ளப்படுவதாக யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனம் குற்றஞ்சாட்டியுள்ளது. யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளன அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலே சங்கத்தின் உபதலைவர் தவச்செல்வன் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும்...
நெடுந்தீவு சிறுமி கொலை செய்யப்பட்டமை தொடர்பாக சில இணையத்தளங்களில் வெளியாகிய செய்திகள் தொடர்பாக மீண்டும் ஒருமுறை விளக்கத்தைக் கொடுக்க வேண்டிய நிலையில் இவ்மறுப்பறிக்கையை வெளியிடுகின்றேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின் (உதயன்) குறித்த செய்தி தொடர்பாக விடுத்துள்ள ஊடகச் செய்தியில் தெரிவித்துள்ளார். குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள...
தமிழ் மக்கள் பேரவை பரந்துபட்ட அளவில் மக்கள் பங்குகொள்ளும் அமைப்பாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. இது மக்களின் அபிப்பி்ராயங்களைப் பெற்றுக் கொண்டு தீர்வை ஏற்படுத்துகின்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே தற்போது உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பில் நாங்கள் மிகத் தெளிவான நிலைப்பாட்டிலேயே இணைந்து கொண்டிருக்கிறோம் என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையில்...
நேற்று காலை 8 .30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் பல பகுதிகளில் கடும் மழை பெய்துள்ளது. இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் அதிக மழை வீழ்ச்சியாக 103.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதேவேளை, பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இத்தாவில் கோவில் காடு பகுதியில் அண்மையில் வீசிய பலத்த காற்றினால் 12 வீடுகள் சேதமடைந்தன....
அண்மையில் உருவாகியுள்ள தமிழ் மக்கள் பேரவைக்கும், வடக்கு மாகாண சபைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என, மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பேரவை என்ற சொல்லை கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை அலுவலகத்துடன் தொடர்புபடுத்தி பொது மக்கள் நோக்குகின்ற நிலை காணப்படுகின்றது. இது தொடர்பாக...
குண்டசாலை மற்றும் மெததும்பர பிரதேச செயலகப் பகுதிகளிலுள்ள சில இடங்களில் சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். திகன, அம்பகோட்டை, குபுக்கந்துர, செனரத்வெல, மாபேரிதென்ன, நிதுலேமட ஆகிய பகுதிகளிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 10.15 - 10.45 அளவிலான காலப் பகுதியில் பாரிய சத்தத்துடன் நிலம் அதிர்ந்ததாக மக்கள்...
அண்மையில் இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் குறித்து தான் வௌியிட்ட கருத்து தொடர்பில் இணையத்தில் சேறு பூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இவ்வாறு சேறு பூசுவதால் தனக்கு ஏதும் நேராது என சுட்டிக்காட்டிய அவர், இந்த...
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கலப்பு தேர்தல் முறை மூலம் எதிர்வரும் ஜூன் மாத முதல் வாரமளவில் இடம்பெறும் என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
எதிர்வரும் ஒரு சில தினங்களில் முதற்கட்டமாக பட்டதாரிகள் 5000 பேருக்கு புதிய நியமனங்கள் வழங்கவுள்ளதாக தொழில் மற்றும் தொழில் சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ. டி.ஜே. செனவிரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...
அண்மையில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையில் தாங்கள் உரிய முறையில் உள்வாங்கப்படவில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவைக் கூட்டங்களில் கலந்து கொண்ட தமது உறுப்பினர்கள் மூன்று பேரும் நிர்வாகத்தின் அனுமதி இன்றியே அந்த கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பு தெரிவித்துள்ளது....
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவ அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகளில் 700 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட வறுத்தலைவிளான் மற்றும் அதனை அண்டிய கிராமங்களிலும், வளலாய், பலாலி கிழக்கு ஆகிய பிரதேசங்களில்...
நாளை (30)தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் சந்திக்கவுள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் கூட்டமைப்பு தரப்பில் அதன் தலைவர் சம்பந்தன் , மாவை சேனாதிராஜா , சுமந்திரன் , செல்வம் அடைக்கலநாதன் , சிறீதரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர் என கூட்டமைப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இது வரை கிடைத்த செய்திகளின் படி...
பஸ்ஸில் பயணிகளின் பணப் பை மற்றும் கைபைகளில் இருந்து பணத்தை திருடிய நபரை பிடித்து பயணிகள் நையப்புடைத்து கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவமொன்று திங்கட்கிழமை (28) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமத்துக்கு செல்லும் பஸ்ஸில் பயணித்த குறித்த நபர், பயணிகளின் பணப்பை மற்றும் கைபைகளில் இருந்து பணத்தை திருடியுள்ளார். இதனை அவதானித்த சக பயணிகள்...
பருத்தித்துறை முனைப்பகுதியிலிருந்து திங்கட்கிழமை (28) அதிகாலை கடலுக்குச் சென்று காணாமற்போன மீனவர், முனை வெளிச்ச வீட்டுக்கு அருகிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை, சடலமாக மீட்கப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். முனைப்பகுதியைச் சேர்ந்த எஸ்.ஜோர்ஜ் (வயது 42) என்பவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. முனைப் பகுதியிலிருந்து 3 மீனவர்கள் படகொன்றில் கடலுக்குள் சென்ற போது, கடும் கடற்கொந்தளிப்பால்...
வலிகாமம் வடக்கில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பிரதேசங்களில் நெல்சிப் திட்டத்தின் ஊடாக 96 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு வலிகாமம் வடக்கிலிருந்து வெளியேறிய குடும்பங்கள் நலன்புரி நிலையங்கள், உறவினர்கள் வீடுகள் மற்றும் வாடகை வீடுகளில் வசித்து வந்தனர். அவர்களின் காணிகள் இராணுவத்தினரால் உயர்பாதுகாப்பு வலயங்களாக ஆக்கப்பட்டன. இந்நிலையில் யுத்தம்...
தனிநபர்கள் மற்றும் அமைப்புக்கள் சார்ந்து அவதூறான செய்திகளை சில இணையதளங்கள் வெளியிட்டுவிட்டு, அவற்றை அந்த பக்கங்களில் இருந்து நீக்குவதற்காக சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து கப்பம் கோரும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தி.துவாரகேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...
வட மாகாணசபையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட வைத்தியசாலைகளில் வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள் மற்றும் தாதியர்கள் என அனைத்து துறைகளிலும் ஆளணி பற்றாக்குறை நிலவுவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் அமைந்துள்ள 110 வைத்தியசாலைகளில் 102 வைத்தியசாலைகளே செயற்படுவதாகவும், அவற்றில் 29 வைத்தியசாலைகளில் ஒரு வைத்தியர் கூட கடமையில் இல்லாத நிலைமையே காணப்படுவதாகவும் அவ்...
அளவெட்டி பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றிரவு துப்பாக்கி சகிதம் உள்நுழைந்த ஆயுதக்குழு பெரும் அட்டகாசம் புரிந்து விட்டு தப்பி சென்றுள்ளது. அளவெட்டி ஜெயா பிறஸ் சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு ஞாயிறு இரவு 7.30 மணியளவில் துப்பாக்கி , வாள் , இரும்பு கம்பிகள் , பொல்லுகளுடன் நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினர் ஐன்னல்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தொடர்பாக விசாரணை ஒன்று முன்னெடுக்க வேண்டும் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மவை சேனாதிராஜா தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மவை சேனாதிராஜா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையிடம் கோரியுள்ளது. புளொட்...
Loading posts...
All posts loaded
No more posts
