சம்பந்தனுக்கு “வாழும் வீரர்” விருது வழங்கி மதிப்பளித்தது கனடிய தமிழர் பேரவை!

கனடிய தமிழர் பேரவை நடத்திய பொங்கல் விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,“வாழும் வீரர்” (Living Hero Award) என்ற விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டார். திரு சம்பந்தன் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்திரு ம.ஏ.சுமந்திரன், விருதைப் பெற்றுக் கொண்டார். இந்த விழாவுக்கு கனடிய வெளியுறவு அமைச்சர் ஸ்ரபேன் டிஒன் (Stephane Dion), குடிவரவு, ஏதிலிகள் மற்றும்...

யாழில் சைவசித்தாந்த, திருமந்திரப் பயிற்சி நெறி

அகில இலங்கை சைவ மகா சபை, இந்தியா தருமபுரம் ஆதீனத்தின் அனுசரணையுடன் சைவ சித்தாந்தம் மற்றும் திருமந்திர பயிற்சி நெறியை யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது. அண்மையில் இந்தியாவுக்கு சென்ற சைவ மகா சபையின் பிரதிநிதிகள் தருமபுரம் மற்றும் திருவாவடுதுறை ஆதீனங்களின் குரு முதல்வர்களுடன் கலந்துரையாடியதன் பேரில் யாழ்ப்பாணத்தில் இந்தப் பயிற்சி நெறி...
Ad Widget

இளவயதினர் போதைக்கு அடிமையாகுதல் அதிகரிப்பு

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இளவயதினர் போதைப்பொருளுக்கு அடிமையாகும் நிலையானது நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். 21 வயதுக்குட்பட்டவர்களே, அதிகளவில் போதைப்பொருள் பாவனை, மதுப்பழக்கம் புகைத்தல் ஆகியவற்றுக்கு அடிமையாகியுள்ளனர். கடந்த கால யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வையடுத்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்;தீவு மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மதுபான உற்பத்தி,...

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீநிக சஞ்ஜீவ ஜெயக்கொடி, சிலாபம் பொலிஸ் பிராந்தியத்துக்குட்பட்ட வென்னப்புவ பொலிஸ் நிலையத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை முதல் இடமாற்றம் பெற்றுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு புதிய பொறுப்பதிகாரியாக கந்தாணை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.கஹந்தவெல, கோப்பாய் பொலிஸ்...

விடுவிக்கப்பட்ட காணிகளின் இயற்கை வளங்களை அபகரிக்கும் திருடர்கள்! அதிகாரிகள் பாராமுகம்!!

அண்மையில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பலாலி வயாவிளான் மற்றும் தையிட்டி பகுதிகளில் உள்ள மக்கள் தமது காணிகளில் உள்ள இயற்கை வளங்களை கூட பாதுகாக்க முடியாத நிலமையில் காணப்படுகின்றார்கள். கடந்த இருபத்தைந்து வருடங்களாக இடம்பெயாந்து தமது வீடு வாசல்களை இழந்து சொத்துக்களை இழந்து பல்வேறு துன்ப துயரங்களுக்கும் உள்ளாகிய...

பருத்தித்துறை – திருகோணமலைக்கு மேலும் இரு புதிய பஸ் சேவைகள்!

பருத்தித்துறையிலிருந்து திருகோணமலைக்கு மேலும் இரு புதிய பஸ் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பருத்தித்துறை இ.போ.ச சாலை முகாமையாளர் கே.கந்தசாமி தெரிவித்துள்ளார். ஏற்கனவே தினமும் காலை 4.30 மணிக்கு பருத்தித்துறையிலிருந்து திருகோணமலைக்கு ஒரு பஸ் சேவை நடைபெற்று வருகின்றது. இதனைவிட இனிமேல் காலை 7.45 மணிக்கும், பிற்பகல் 3 மணிக்கும் பருத்தித்துறையில் இருந்து திருகோணமலைக்கு புதிய சேவைகள் இடம்பெறவுள்ளன....

புதிய அரசியல் சீர்த்திருத்தங்கள் தொடர்பாக வட மாகாணத்தில் செயலமர்வு

புதிய அரசியல் அமைப்பின் சீர்த்திருத்தங்கள் தொடர்பாக வட மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு ஒன்று நேற்று யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன் போது புதிய அரசின் அரசியல் அமைப்பிற்க்கும் மக்களுக்கும் இடையில் காணப்படும் அதிகரித்துள்ள தொடர்பாடல்கள், சமூக இனங்களின் ஒற்றுமைக்கான வழிகள், மற்றும் பிரதேச...

யாழ். மேல் நீதிமன்றம் மூன்று பேருக்கு மரண தண்டனை விதித்தது!!

மிருசுவில் பகுதியில் நபர் ஒருவரை உலக்கையால் அடித்துக்கொலை செய்த மூன்று பேருக்கு மரண தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு மார்கழி மாதம் முருகேசு சத்தியநாதன் என்பவரே அவரது வீட்டில் வைத்து இவ்வாறு அடித்துக்கொலை செய்யப்பட்டவராவார். கொலை சம்பவத்தினை புரிந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில், அதே...

சகல சமயத் தலைவர்களிடமும் ஜனாதிபதி கோரிக்கை

நாட்டிலுள்ள அனைத்து மக்களின் அச்சம், சந்தேகங்களை நீக்கி சமாதானம் மற்றும் சகோதரத்துவத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத் திட்டங்களை முன்னோக்கி கொண்டு செல்ல முன்வருமாறு சகல சமயத் தலைவர்களிடமும் கோரிக்கை விடுப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிடையே சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது, நீதி அல்லது புதிதாக நிறைவேற்றப்படும் சட்டமூலங்களால் மட்டுமே இயன்றதல்ல...

கனடா உறங்கா விழிகளினால் 125,000 பெறுமதியான உதவிகள் வழங்கல்

கனடாவைத் தளமாகக் கொண்டியங்கும் உறங்கா விழிகள் தன்னார்வத் தொண்டு நிறுவனம் தாயகத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இம்மாதம் (2016 சனவரி) 125000 பெறுமதியான உதவிகளை வழங்கியுள்ளது. மேற்படி உதவிகள் உயர்கல்வி மற்றும் பாடசாலைக்கல்வி, மருத்துவ சிகிச்சை, வாழ்வாதாரம் போன்ற தேவைகளுக்கான மாதாந்த கொடுப்பனவுகளுக்காகவும் மற்றும் இலவசக் கல்வி நிலைய ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளுக்காகவும் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி உதவிகள்...

மன்னார் ஆயர் தொடர்பான தவறான செய்தியால் மக்கள் சஞ்சலம்

மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலையிலுள்ள ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை சம்பந்தமாக ஊடகம் தவறான செய்திகளை பிரசுரிப்பதால் பொதுமக்கள் பலர் சஞ்சலங்களுக்கு உள்ளாகி வருவதாக மன்னார் ஆயர் இல்ல வட்டாரம் கவலை தெரிவிக்கின்றது. கடந்த வாரம் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை தனது 23 வருட ஆயர் பணியிலிருந்து ஓய்வு...

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்!!

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.சிங்கள பத்திரிகையொன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில்.. நாடாளுமன்ற வளாகத்திற்குள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒழுக்கத்துடன்...

மரணத்தில் சந்தேகம்! இறுதிக் கிரியைக்கு தயாரான நிலையில் சடலம் பொலிஸாரால் வைத்தியசாலையில் ஒப்படைப்பு

இறுதிக் கிரியைக்கு தயாராக இருந்த சடலத்தில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. காரைநகர் வாரிவளவைச் சேர்ந்த 48 வயதுடைய கார்த்திகேசு தவராசா என்பவரின் சடலமே இவ்வாறு மீண்டும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் வவுனாவில் கடையொன்றில் சிப்பந்தியாக கடமையாற்றியுள்ளார். இவர் கடந்த 10ஆம் திகதி...

காணாமற்போனவர்கள் குறித்த ரணிலின் கருத்துக்கு மன்னார் பிரஜைகள் குழு கண்டனம்!

போர்க்காலத்தில் காணாமல்போனவர்களில் பலர் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் உரையாற்றியபோது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ள கருத்தை மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு கண்டித்துள்ளது. பிரதமரின் இந்தக் கருத்தை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்திருப்பதாக மன்னார் பிரஜைகள் குழுவின் இணைப்பாளர் அந்தோனி சகாயம் பிபிசியிடம் கூறினார்....

மகிந்தவின் பெயர் பொறித்த நினைவுக்கல்லை வேறிடத்துக்கு மாற்றக் கோருகிறது தந்தை செல்வா அறங்காவலர் குழு!

தந்தை செல்வா சதுக்கத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள, வீதி புனரமைப்பு தொடர்பான மகிந்த ராஜபக்சவின் பெயர் பொறித்த நினைவுக் கல்லை வேறிடத்துக்கு மாற்றுமாறு தந்தை செல்வா அறங்காவல் குழு, வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு யாழ். காங்கேசன்துறை வீதி புனரமைப்பு செய்யப்பட்ட போது இந்த நினைவுக் கல் அமைக்கப்பட்டது. இந்த நிலையில்,...

மயிலிட்டித் துறைமுகத்தை விடுவிக்க அரசாங்கம் மறுப்பு!

யாழ்ப்பாணத்தில் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீனவர்களின் பயன்பாட்டுக்கு விடுவிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார். பலாலி படைத்தலைமையகத்தில் நேற்றுமுன்தினம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடந்த உயர்மட்டப் பாதுகாப்பு மாநாட்டில், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை படையினர் விடுவிக்க வேண்டும் என்று பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்தார். அந்தக் கோரிக்கையை...

அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரத போராட்டம்! – சட்டத்தரணி கே.வி. தவராசா

அரசியல் கைதிகளின் விவகாரம் சரியான முறையில் கையாளப்படவில்லை என சட்டத்தரணி கே.வி. தவராசா குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டில் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு சுமூகமான சூழல் நிலவுகின்ற நிலையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசியல் ரீதியான அணுகுமுறை மற்றும் சட்ட ரீதியான அணுகுமுறை என இரண்டு வழிமுறைகள் காணப்பட்டன. இதில் எந்தமுறையூடாக பிரச்சினையை அணுகப் போகின்றோம் என்பதை...

பாடசாலையில் தங்கியிருக்கும் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் அல்-ஹதீஜா மகளிர் மகா வித்தியாலயத்தில் தங்கியுள்ள மக்கள், நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த பாடசாலையில் சுமார் 6 வருடங்களாக தங்கியிருக்கும் தங்களை மாற்று இடமொன்று வழங்காமல் அங்கிருந்து வெளியேற்ற முயற்சிப்பதாகக் கூறியே குறித்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பாடசாலையில் தற்போது 13 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். 1990ஆம்...

இளைஞர் மீது வாள்வெட்டு

யாழ்ப்பாணம், இராசாவின் தோட்டப் பகுதியில் சனிக்கிழமை (16) இரவு, இளைஞனொருவர் இனந்தெரியாத நபர்களினால் மேற்கொண்ட வாள்வெட்டில், படுகாயங்களுக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் தர்மிகன் (வயது 21) என்ற இளைஞனே இவ்வாறு வாள்வெட்டுக்குள்ளாகியுள்ளதாக யாழ். குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். கொட்டடி பகுதியில் உள்ள...

இலங்கையின் அபிவிருத்திக்கு பங்களிக்க சர்வதேச மட்டத்தில் போட்டி நிலவுகிறது

புதிய அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களுக்கு நாட்டிற்குள் எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் தற்போது அனைத்து உலக நாடுகளினதும் ஆசீர்வாதம் கிடைத்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதன் காரணமாக அரசியல் சந்தர்ப்பவாதிகளின் விமர்சனங்களுக்கு பதில் வழங்கிக் கொண்டிருக்காமல், நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் பொறுப்பேற்ற வேலைகளை சரிவர நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். பொலன்னறுவை நகரத்தின் சுற்றுவட்டப் பாதையின்...
Loading posts...

All posts loaded

No more posts