Ad Widget

கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டம் கிளிநொச்சியில்! – முக்கிய விவகாரங்கள் குறித்து ஆராயத் திட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் பங்கேற்கும் உயர்மட்டக் கூட்டம் கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், இரா. சம்பந்தன் தலைமையில், கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் எதிர்வரும், 21ம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பாகவும், மாற்றியமைக்கப்படவுள்ள அரசியலமைப்பு தொடர்பில், தமிழ் அரசியல் கைதிகள் விவகாரங்கள் தொடர்பிலும் இந்தக் கூட்டத்தில் பேசப்படவுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம் பற்றியும் இதில் விவாதிக்கப்படலாம் எனவும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.

Related Posts