Ad Widget

இராணுவ வீரரின் சடலமா? விஸ்வமடுவில் திடீர் அகழ்வு!

விஸ்வமடு பகுதியில் இன்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் முல்லைத்தீவு பதில் நீதவான் பரஞ்சோதியின் அனுமதியோடு இராணுவ வீரரின் சடலம் என சந்தேகித்து அகழ்வு நடைபெற்று வருகின்றது.
இது குறித்து தெரிய வருவதாவது,

குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படியே அகழ்வு நடைபெறுவதாக கூறப்படுகிறது.

நிட்டம்புவ அல்கம பகுதியைச் சேர்ந்த ஒருவர் இராணுவ சிவில் படைப்பிரிவில் விஸ்வமடுவில் கடமையாற்றி இருந்ததாகவும் குறித்த நபர் கடந்த 2010.02.02 அன்றிலிருந்து காணாமல் போயிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த சடலம் அவருடையதாக இருக்கலாம் என சந்தேகித்து அவரது அம்மா மற்றும் உறவினர்கள் வரவழைக்கப்பட்டு இந்த அகழ்வு நடை பெற்று வருகின்றது.

குறித்த அகழ்வில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts