இ.போ.ச. பஸ்கள் மீதான தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து யாழ். நகரில் கண்டனப் பேரணி!

இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை கண்டித்தும், தாக்குதல்களை மேற்கொள்வோரை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரியும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நேற்று வெள்ளிக்கிழமை காலை கண்டனப் பேரணி ஒன்றை நடத்தினர். யாழ்.மத்திய பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமான பேரணி ஆஸ்பத்திரி வீதி வழியாக கண்டி வீதியை அடைந்து , கண்டி வீதி...

20 மைக்ரோன் இற்கும் குறைவான பொலித்தீன் பாவனைக்கு தடை

20 மைக்ரோன் இற்கும் குறைவான அளவுடைய பொலித்தீன் பாவனைக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக உணவு வகைகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் வகைகளின் மைக்ரான் அளவு 20க்கும் குறைவாக காணப்படுகின்றது. இவ்வாறான பொலித்தீன் வகை தயாரிப்பு, விற்பனை மற்றும் பாவனை போன்றவற்றிற்கு எதிராக இன்று முதல் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள இருப்பதாக...
Ad Widget

தனியார் துறை ஊழியர்களின் சம்பள உயர்வு சட்டமூலம் இம்மாதம் பாராளுமன்றில்

தனியார் துறை ஊழியர்களின் ஊதியத்தை 2500 ரூபாவினால் அதிகரித்தல் மற்றும் அவர்களின் அடிப்படை சம்பளத்தை குறைந்தது 10,000 ரூபாவாக உயர்த்துதல் ஆகிய இரண்டு சட்டமூலங்களையும் இம்மாதத்திற்குள் பாராளுமன்றத்திற்கு சமர்பிப்பதாக தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே செனவிரத்ன தெரிவித்தார். இம்மாதத்திற்கு அந்த சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார். புதிய வருட...

2016 இல் உலகம் எதிர் கொள்ளவுள்ள அழிவு

2016 ம் ஆண்டில் எல் நினோ (கடும் வெப்பம்) சுழற்சியால், உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் பசியாலும், கடுமையான நோயாலும் பாதிக்கப்படுவார்கள் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். வரும் ஆண்டில் உலகம் முழுவதும் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. புவியின் சுழற்சி காரணமாக எல் நினோ (கடும் வெப்பம்), லா நினா...

யாழ் மாவட்டம் பெண்களை பாதுகாக்கும் மாவட்டமாக மாற வேண்டும்

யாழ். மாவட்டம் சுபீட்சமுள்ள, போதைவஸ்துக்கள் இல்லாத பெண்களையும் மாணவிகளை பாதுகாக்கும் மாவட்டமாக மாற வேண்டும் என்று யாழ். உயர் நீதிமன்ற நீதபதி மா.இளஞ்செழியர் தெரிவித்தார். 2016 ஆம் ஆண்டிற்கான அரச உத்தியோகத்தர்களுக்கான சத்தியபிரமான நிகழ்வு யாழ். நீதிமன்ற வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சத்திய பிரமாணத்தினை செய்து கொண்ட பின்னர் உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே...

நாட்டில் புலிப் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க ஆரம்பம்! மகிந்த

மேற்கத்தேய நாடுகளின் உதவியுடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களை தனி அலகுகளாக்கவும், விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்கவும் தமிழர் தரப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், நாம் ஏற்படுத்திக் கொடுத்த மாற்றமும், உருவாக்கிய ஜனநாயகமும் இன்று சீரழிக்கப்பட்டுள்ளன. இந்த ஆட்சி மாற்றம் நாட்டை...

அதிரடியாக அதிகரித்த சிகரட் விலை!

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரட் வகைகள் அனைத்தினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.சிலோன் டொபாக்கோ நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி, பிஸ்டல் (Bristol) ஒன்றின் விலை 1 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 22 ரூபா. கோல்ட்லீப் (Gold Leaf) ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 35...

தேசிய தைப்பொங்கல் விழாவில் பங்கேற்கும் மக்களை பதிவு செய்யுமாறு அறிவித்தல்

பலாலி கன்னார் வயல் ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ள தைப்பொங்கல் தின விழாவில் பங்கேற்கவுள்ள மக்களை முன் பதிவு செய்து கொள்ளுமாறு பலாலி ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோவிலும் இந்துக் கோயில்கள் மற்றும் மீள்குடியேற்ற சபையும் அறிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய தைப்பொங்கல் விழா பலாலி கன்னார் வயல் ஸ்ரீ...

கலாச்சாரம் மற்றும் ஒழுக்கத்தை பாதிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட வேண்டும்!

இலங்கையின் கலாச்சாரத்திற்கு பங்கம் ஏற்படுத்தக் கூடிய வகையிலான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டுமென அகில இலங்கை இந்து காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது விசேட கடிதம் ஒன்றின் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை வாழ் மக்களின் கலாச்சாரம் மற்றும் ஒழுக்கத்தை பாதிக்கும் வகையிலான தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகள்...

கடவுச்சீட்டு கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு!

தேசிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட யோசனைக்கு அமைய, புதிதாகப் பெறப்படும் கடவுச் சீட்டுக்கான கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. வரவுசெலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைய இந்தக் கட்டண அதிகரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார். இதற்கு அமைய, ஒரே நாளில் அனைத்து நாடுகளுக்குமான கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்...

புதிய ஆண்டில் ஈழத்தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைப் போராட்டம் முன்னோக்கி நகரும்! – வி.உருத்ரகுமாரன்

புதிய ஆண்டில் உலகில் தமது உரிமைகளுக்காகப் போராடும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்விலும் முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கையுடனும் ஈழத்தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைப் போராட்டம் முன்னோக்கி நகரும் என்ற எதிர்பார்ப்புடனும் நாம் இப் புதிய ஆண்டை வரவேற்றுக் கொள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அவர்கள் தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார். கடந்த...

தையிட்டியிலும் இராணுவத்தின் வதைமுகாம்!

உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து கடந்த 29ஆம் திகதி இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு, தையிட்டிப் பகுதியில் உள்ள வீடொன்றின் சீலிங், முட்கம்பிகளினால் வேயப்பட்டுள்ளது. இதனால், அந்த வீடு இராணுவத்தினரின் வதை முகாமாக இயங்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாக அங்கு சென்று திரும்பியோர் தெரிவித்தனர். மேற்படி பகுதியில் இராணுவத்தினரின் பயிற்சி முகாம் ஒன்று இருந்துள்ளது. அந்தப் பயிற்சி...

யாழ்.குடாநாடு கடலில் மூழ்கும் ஆபத்து! விஞ்ஞானிகள் எச்சரிக்கை

யாழ். குடாநாடு கடலுக்குள் மூழ்கி விடும் அபாயம் உள்ளதெனவும், யாழ்ப்பாண வாசிகள் அனைவரும் எதிர்வரும் ஐந்து வருடங்களில் கடல்நீரைக் குடிநீராகப் பயன்படுத்தும் அவலம் நேரிடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விஞ்ஞானிகளால் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை தொடர்பில் தெளிவுபடுத்திய வட மாகாணசபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், யாழ்ப்பாண மக்கள், சுற்றுச்சூழல் மீது அக்கறை கொள்வார்களாயின் மேற்கண்ட...

மலரும் புத்தாண்டில் தமிழர் பிரச்சினைகள் நல்லாட்சி அரசில் தீரும் என்பது உறுதி! கூட்டமைப்பு!!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கவும், இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காணவும் நல்லாட்சி அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் மலரும் இந்தப் புத்தாண்டை வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நிலையான சமாதானத்தையும் புரிந்துணர்வையும் நிலைநாட்ட இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் முன்வரவேண்டும் என்றும் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. மலரும் இந்தப் புதிய...

மக்களின் இலட்சியத்தை அடைந்தே தீருவோம்! புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

நாட்டு மக்களின் இலட்சியத்தை அடைந்தே தீருவோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:- "எண்ணற்ற எதிர்பார்ப்புகள் நம் எதிரே சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கின்றன. நாம் கடந்த ஜனவரியில் எங்களுடையதும் எமது பரம்பரையினரதும் வாழ்வை புதியதொரு திருப்புமுனைக்கு இட்டுச்சென்ற ஒரு முக்கியமான பிரவேசத்தின் ஊடாக மிகவும்...

காணி விடுவிப்பை வரவேற்கிறது கூட்டமைப்பு

வலி.வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்த 700 ஏக்கர் காணி மீள்குடியேற்றத்துகென அரசினால் விடுவிக்கப்பட்டமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. காணி விடுவிக்கப்பட்டமையை வரவேற்று அது விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- வலி.வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் இராணுவத்தினர் வசமிருந்த 701 ஏக்கர் காணிகளை அப்பகுதி மக்களின் மீள்குடியேற்றத்துக்கென அரசாங்கம் விடுவித்துள்ளமையை தமிழ்த்...

பிரபாகரன் ஒருவரே தேசியத் தலைவர்! இனியொருவர் உருவாகப் போவதில்லை!!

தேசியத் தலைவர் ஒருவரே, அவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே. இவருக்கு முன்பும் ஒரு தேசிய தலைவர் இருந்ததில்லை. இவருக்குப் பின்னர் இனியொரு தேசிய தலைவர் உருவாகப் போவதில்லை.இவ்வாறு வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்றுப் புதன்கிழமை மாலை நடைபெற்ற கட்சிக்...

வர்ண இரவுகள் விருது வழங்கும் நிகழ்வு

வடமாகாணத்தின் சாதனை வீர வீராங்கனைகளிற்கான வர்ண இரவுகள் விருது வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (30) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. வடமாகாண கல்வி கலாசாரா விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இவ்விழாவை மாகாண அமைச்சர் த.குருகுலராஜா தலைமைதாங்கினார். இந்த வர்ண இரவுகளில் சாதனை வீர, வீராங்கனைகளுக்கான விருதுகளை வடமாகாண முதலமைச்சர்...

மோட்டார் சைக்கிள்களுக்கான பணத்தினை மீளப் பெறவும் – பொதுத்திறைசேரி அறிவிப்பு

அரச அலுவலகங்களில் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம்திகதிக்குப்பின்னர் பணம் செலுத்தியவர்கள் தங்களது பணத்தினை முறையாக மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என பொதுத்திறைசேரியின் தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்தல் விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்,...

தேசிய பொங்கல் விழா யாழில்

தேசிய பொங்கல் விழா, இம்முறை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்படவுள்ளது. யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் குறித்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், வலி வடக்கில் 701.5 ஏக்கர் காணிகளில் மக்கள் மீள்குடியேறவுள்ளதை முன்னிட்டு, வலி வடக்கு இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜைகளும் ஏற்பாடாகியுள்ளன. இந்நிகழ்வில் ஜனாதிபதி...
Loading posts...

All posts loaded

No more posts