Ad Widget

அதிபர் இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

யாழ்.செட்டித்தெரு மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் திருமதி சாந்தினி மாணிக்கத்தின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரி பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

குறித்த பாடசாலை அதிபர் சேவையிலிருந்து ஓய்வு பெற இன்னமும் 3 வருடகாலம் உள்ளது. எனினும் அவருக்கு இடமாற்றம் கிடைத்துள்ளதால் அவர் இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ளார்.

ஆனால் குறித்த அதிபர் இந்த பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தார் என்று பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளதுடன் அதிபர் சேவையிலிருந்து ஓய்வு பெற இன்னமும் 3 வருட காலம் உள்ளது. அந்த 3 வருடகாலமும் இந்த பாடசாலையிலேயே அவர் அதிபராக பணியாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts