மேலும் சில பட்டதாரிகளை அரசாங்க சேவையில் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் செவ்வாய்கிழமை அலரி மாளிகையில் வைத்து, 2591 பேருக்கு இவ்வாறு பயிற்சியாளர்களுக்கான நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களே இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.