Ad Widget

ஜனாதிபதி, பிரதமரின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு யாழில் நிகழ்வுகள்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவியேற்று ஒரு வருடகால பூர்த்தியினை முன்னிட்டு முக்கிய நிகழ்வுகள் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் தேவநாயகன் தலைமையில் நடைபெற்றது.

புதிய அரசாங்கம், நாட்டின் சமாதானம், நல்லிணக்கத்தின் ஊடான ஒரே தேசம் மாபெரும் பலம் என்னும் தொனிப்பொருளிலேயே நிகழ்வுகள் நடைபெற்றது.

மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசியக்கொடியினை மாவட்ட செயலாளர் நாலிங்கம் தேவநாயகன் எற்றிவைத்ததை தொடர்ந்து, நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டத்திற்கு அரச அதிகாரிகள் உறுதுயாக இருக்கவேண்டும் என மாவட்ட செயல அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

பின்னர் யாழ் பழைய பூங்காவிற்கு அருகாமையில் உள்ள பகுதியில் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.

இதனை மாவட்ட செயலாளர், மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் நாட்டிவைத்தனர். பின்னர் யாழ் அரசடி விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜைகளும், சமய அனுஷ்டானங்களும் இடம்பெற்றன.

Related Posts