Ad Widget

உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் குடிநீர்போத்தல்களை விற்பனை செய்தவருக்கு தண்டம்

உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் குடி நீர் போத்தல்களை விற்பனை செய்த சாவகச்சேரி பகுதியை சேர்ந்த வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி மாவட்ட நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் புதன்கிழமை (06) தீர்ப்பளித்தார்.

சாவகச்சேரி பொதுச்சுகாதார பரிசோதகரால் மேற்கொண்ட திடீர் நடவடிக்கையின் போது, குறித்த குடிநீர் போத்தல்கள் சில கைப்பற்றப்பட்டிருந்தன.

குறித்த விற்பனை நிலைய வர்த்தகருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவர் குற்றத்தினை ஏற்றுக்கொண்டார்.

Related Posts