Ad Widget

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

வட மாகாண சுகாதார திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் குடும்ப நல சுகாதார சேவைகள் உத்தியோகத்தர்கள், தங்களுக்கான இடமாற்றங்களை நியாயமான முறையில் வழங்குமாறு கோரி வட மாகாண சுகாதார திணைக்களத்தின் முன்பாக புதன்கிழமை (06) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

5 வருடங்களுக்கு மேல் பணியாற்றும் மேற்பார்வை குடும்ப நலன் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்காதது ஏன்? திணைக்களத்துக்கு அனுப்பப்பட்ட இடமாற்ற விண்ணப்பங்கள் எங்கே? இடமாற்ற விண்ணப்பத்தின் பிரதி இருந்தும் ஏற்றுக்கொள்ளாததன் காரணம் என்ன ஆகிய காரணங்களை முன்வைத்தே இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தங்களுக்கான உரிய தீர்வு கிடைக்காவிடின் தொடர் போராட்டம் செய்யவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts