Ad Widget

ஊடகவியலாளருக்கு கொலைமிரட்டல்! துவாரகேஸ்வரன் மீது முறைப்பாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் வர்த்தகருமான தி.துவாரகேஸ்வரன், தன்னைக் கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தல் விடுத்ததாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் திங்கட்கிழமை (04) யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அலைபேசியின் தன்னை தொடர்புகொண்ட துவாரகேஸ்வரன், கழுத்தை வெட்டிக் கொலை செய்வேன் என்றும், வீடு புகுந்து தூக்குவேன் எனவும் தன்னை மிரட்டியதாக ஊடகவியலாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts