22 ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டம் அரசியல் கைதிகள் அறிவிப்பு

இரண்டு வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலர் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இவர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். தமக்கான விடுதலையை வலியுறுத்தி இரண்டு தடவைகள் உண்ணாவிரத போராட்டத்தில் அரசியல் கைதிகள் ஈடுபட்டனர். இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசாங்கத்தின் உறுதிமொழி்க்கு அமைய அவர்கள்...

சரணடைந்தவர்களின் பெயர் பட்டியல் உள்ளதா இல்லையா என்பது குறித்து எனக்கு தெரியாது

இறுதிக்கட்டப் போரில் காணாமல் போனவர்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிமன்ற விசாரணைகளுக்கு இராணுவம் பூரணமான ஒத்துழைப்பை வழங்கும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார். இறுதிக் கட்ட யுத்ததில் இராணுவத்தின் 58 ஆவது படைப் பிரிவில் சரணடைந்து காணாமல்போனவர்கள் என தெரிவிக்கப்படும் நபர்கள் தொடர்பில் தெளிவுபடுத்துகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இராணுவப்...
Ad Widget

காணாமற்போனோர் பிரச்சினைக்கு சம்பந்தனின் பிரேரணை நிரந்தர தீர்வு தர வேண்டும்!

அரசியல் கைதிகள் விவகாரம் - காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் எதிர்வரும் 23ம் திகதி -செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை வெறுமனே விவாதத்துடன் முடிவடைந்துவிடக் கூடாது. இதனூடாக ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படக்கூடியதாக இருக்கவேண்டும். என்று தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல்போனோரின் உறவுகள் கோரிக்கை...

தந்தைக்கு எச்ஐவி இருந்ததாக வதந்தி, மகனுக்கு பள்ளிக் கூட அனுமதி இல்லை

குருநாகல் மாவட்டத்தில், நோய் காரணமாக உயிரிழந்த தந்தை ஒருவருக்கு எச்ஐவி இருந்ததாக பரவிய வதந்தி காரணமாக, அவரது 6 வயது மகனுக்கு அந்தப் பிரதேசத்தில் உள்ள பல பள்ளிக்கூடங்கள் அனுமதி மறுத்துள்ளன. பிரதேசத்து கல்வி அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் எதுவும் கிடைக்கவில்லை என்று அந்த சிறுவனின் தாய் கூறினார். இந்த நிலையில், தேசிய மனித உரிமைகள்...

’24’ படம் நிச்சயம் ஒரு திருப்புமுனையையும், மிகப் பெரிய வெற்றியையும் தரும்

'24' படத்தின் மூலம் இழந்த வெற்றியை மீண்டும் மீட்டெடுத்து ஆக வேண்டும் என்று சூர்யா '24' படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறாராம். 'பசங்க 2' படத்தில் அவர் நடித்திருந்தாலும் அது ஒரு சிறப்புத் தோற்றம்தான், அவருடைய ரசிகர்களுக்கான படமாகவும் அந்தப் படம் அமையவில்லை. 'அஞ்சான்' படத்தில் படிந்த அவப் பெயரைத் துடைக்க 'மாசு என்கிற மாசிலாமணி' படத்தையும்...

ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு விடுதலை

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க அவருக்கு எதிராக இடம்பெற்று வந்த வழக்கில் இருந்து விடுதலை பெற்றுள்ளார். தனது சொத்து விபரங்களை சரியான முறையில் வௌிக்காட்டவில்லை எனக்கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கு இன்று (19) கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே முன்னாள் பிரதம...

மீள்குடியேற்றத்தின் பின்னரே அபிவிருத்தி நடவடிக்கைகள்

மீள்குடியேற்றத்தின் பின்னரே சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டுமென்று ஒருமித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.மீள்குடியேற்றம் மற்றும் பலாலி விமான நிலையத்தினை சர்வதேச விமான நிலையமாக்குவது குறித்து மக்களின் கருத்தறியும் கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்...

மாங்குளத்துக்கு எப்போது போவீர்கள்? – சுரேஸ் கேள்வி

வடமாகாணத்தின் அரசியல் நிர்வாக கட்டமைப்புக் கொண்ட தளமாக மாங்குளம் மாற்றப்படவேண்டும் எனக் கூறப்பட்ட போதும், அது தொடர்பில் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அவரது இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், வடமாகாணத்தின் கலாசார தளமாக யாழ்ப்பாணத்தையும்...

முழங்காவிலுள்ள 5 குளங்களை பெரிதாக்கினால் குடிநீர்ப் பிரச்சினை தீரும்

முழங்காவிலுக்கும் பூநகரி பிரதேசத்துக்கும் இடையில் இருக்கும் 5 குளங்களையும் பெரிதாக்கி, கடலுக்கு வீணாகச் செல்லும் நீரை அந்தக் குளங்களில் சேகரித்தால் பூநகரி, யாழ்ப்பாணம் ஆகியவற்றின் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அவரது இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்....

மீனவர்கள் மீது தாக்குதல்: கடற்படையினர் இருவர் கைது

தடைச்செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி முழங்காவில் கிரிந்திதீவு கடலில், மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் கை செய்யப்பட்ட மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் முழங்காவில் கடற்படை முகாமையைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமைக்கு பின்னர் முறைப்பாடுகள் ஏற்க்கப்படாதாம்!

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பிலான முறைபாடுகளை அனுப்பி வைப்பதற்கான கால அவகாசம், சனிக்கிழமை (20) வரை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. ஏற்கெனவே, 2015 நவம்பர் 30 திகதிக்கு முன்னர் இது தொடர்பிலான முறைபாடுகளையும் ஆலோசனைகளையும் அனுப்பிவைக்குமாறு பொதுமக்களை அமைச்சு கேட்டுக் கொண்டிருந்த போதும், பலரின் வேண்டுகோளின் பிரகாரம் தொடர்ந்தும்...

பொன்சேகாவுக்ககான நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை எதிர்த்து உயர்நீதிமன்றில் வழக்கு!

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கியமையை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையம் உயர்நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் சட்டமா அதிபர், ஐ.தே.க. பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் ஆகியோர்...

வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராஜா மீது வவுனியாவில் தாக்குதல்!

வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராஜா மீது இனந்தெரியாதவர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்து அவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் வியாழனன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உக்குளாங்குளத்தில் தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்ட வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவியின் மரண வீட்டுக்குச் சென்றுவிட்டு சக மாகாண சபை உறுப்பினராகிய எம்.பி.நடராஜாவுடன் மோட்டார்...

தேசிய வீடமைப்பு அதிகாரசபை மூலம் வீடுகள் நிர்மாணிக்க நடவடிக்கை!

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் இந்தாண்டு யாழ் மாவட்டத்தில் 25 வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார். வீடமைப்பு அமைச்சராக அமரர் பிரேமதாச இருந்த காலத்தில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்னாலைக் கிராமத்தில் 65 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. இந்த வீடுகள்...

இலங்கைக்கு மற்றுமொரு கூகுள் பலூன்

மற்றுமொரு கூகுள் பலூனை விண்ணில் செலுத்தவுள்ளதாக, இலங்கை தகவல் தொழில்நுட்ப மற்றும் தொடர்பாடல் பிரதிநிதிகள் நிறுவனத்தின் வேலைத்திட்ட முகாமையாளர் கவாஸ்கர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுபோன்று மேலும் சில கூகுள் பலூன்களை அந்த நிறுவனம் இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கூகுள் நிறுவனத்தினால் அதிவேக இணைய வசதியை ஏற்படுத்தும் நோக்கில், முன்னதாக பரிட்சார்த்தமாக செலுத்தப்பட்ட பலூன்...

மாங்குளத்தில் விபத்து: அறுவர் படுகாயம்!!

மாங்குளம் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் அறுவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த வான் ஒன்று ஏ-09 வீதி மாங்குளம் பகுதியில் இன்று அதிகாலை வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதுண்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த அறுவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட...

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரமலிங்கம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் பொலிசார் விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளனர். நேற்றைய தினம் இரவு பரமலிங்கம் தனது வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு வீடுசெல்வதற்கு ஆயத்தமான போதே காரில் வந்த மர்ம நபர்கள் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் கையில்...

யாழ். வானில் வட்டமிட்ட கிபிர் விமானங்கள் : அஞ்சவேண்டாம் என்கிறது இராணுவம்

யாழ்ப்பாண மாவட்ட கடலோர வான்பரப்பில் கடந்த மூன்று தினங்களாக கிபிர் ரக போர் விமானங்களின் பயணங்களால் மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது. குடா நாட்டு வான்பரப்பில் கடந்த 7 வருடங்களாக கிபிர் ரக போர் விமானங்கள் பறக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 3 தினங்களாக கிபிர் ரக விமானங்கள் பாரிய இரைச்சலுடன் வட்டமிட்டிருக்கின்றமை குடா நாட்டு...

யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் போராட்டம்!

யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஒரு மணிநேர அடையாள போராட்டத்தை இன்று யாழ்.பல்கலைக்கழக முன்றலில் முன்னெடுத்தனர். குறித்த அடையாள போராட்டம் நண்பகல் 12மணி தொடக்கம் 1 மணிவரை இடம்பெற்றது. ஓய்வுதிட்டத்தினை மறுபரிசீலனை செய்க, ஓய்வுத்திட்டத்தில் பாரபட்சம் காட்டக்கூடாது, சகல பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் பொது காப்புறுதி திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், மொழிக் கொடுப்பனவு மீள வழங்கல், சொத்துக் கடன்...

பூநகரியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க முடியும்

வடக்கில் சர்வதேச விமான நிலையம் அமைக்க விரும்பினால், பூநகரிக்கும் முழங்காவிலுக்கும் இடையிலுள்ள பகுதியில் அமைக்க முடியும். சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான விசாலமான காணிகள் இந்தப் பிரதேசத்திலுள்ளன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அவரது இல்லத்தில் இன்று வியாழக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து...
Loading posts...

All posts loaded

No more posts