5000க்கு மேற்ப்பட்ட ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள திட்டம்!!

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும், விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கில ஆகிய 5 ஆயிரத்து 315 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, தேசிய பாடசாலைகளுக்காக அமைச்சு மட்டத்திலும், மாகாணங்களுக்குட்பட்ட பாடாசலைகள் அந்தந்த மாகாணங்கள் ஊடாகவும் நிரப்பபடவுள்ளன. இந்த ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான இறுதிப்படுத்தல் செயற்பாடுகள் எதிர்வரும் ஜூன் மாதம் 6 ஆம்...

ராஜித சேனாரட்ன மேலதிக சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார்

சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன மேலதிக வைத்திய பரிசோதனைகளுக்காக இன்று காலை சிங்கப்பூரிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இன்று காலை 9.25 மணியளவில் விஷேட விமானம் ஒன்றில் அவர் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் மேலும் 06 பேர் கூட சென்றுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் கூறினார். சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன...
Ad Widget

ஒரு வாரத்திற்கு மட்டும் பாணின் விலை குறைப்பு!!

ஒரு இறாத்தல் பாணின் விலையானது நான்கு ரூபாவினால் குறையும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திட்டமானது எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். நுகர்வோர் வாரம் காரணமாகவே பாணின் விலையை குறைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விலை குறைப்பானது குறிப்பிட்ட ஒரு வாரத்திற்கு...

யாழ்.மாவட்டத்தில் போதைவஸ்து பாவனை அதிகரிப்பு

யாழ். மாவட்­டத்தில் போதை­வஸ்துப் பாவனை அதி­க­ரித்து வரு­கின்­றது. குறிப்­பாக தீவ­கத்தில் அதன் பயன்­பாடு அதி­க­மாக காணப்­ப­டு­கி­றது. இதனை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு விசேட கவனம் செலுத்தி விழிப்பு குழுக்கள் நிய­மித்து செயல்­பட வேண்டும் என யாழ். மாவட்ட ஒருங்­கி­ணைப்பு குழுவின் தலை­வர்­களில் ஒரு­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை­ சே­னா­தி­ராசா தெரி­வித்தார். வேலணை பிர­தேச செய­ல­கத்தின் ஒருங்­கி­ணைப்புக் குழுவின் கூட்டம்...

முச்சக்கர வண்டி இறக்குமதிகளை வரையறுக்குமாறு கோரிக்கை

முச்சக்கர வண்டி இறக்குமதிகளை வரையறுக்குமாறு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன கோரியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முச்சக்கர வண்டி இறக்குமதிகளை அரசாங்கம் வரையறுக்காவிட்டால் நாட்டின் பொருளாதாரத்தில் பாதக விளைவுகள் ஏற்படக் கூடும். பாடசாலைகளிலிருந்து வெளியேறும் இளைஞர்கள் முச்சக்கர வண்டிகளை செலுத்தும் துறையை தேர்வு...

ராஜபக்சக்களினால் எனது உயிருக்கு ஆபத்து – சந்திரிகா

தனக்கும், தனது குடும்பத்தினரின் உயிருக்கும் ராஜபக்சக்களினால் ஆபத்து இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், சுதந்திரக் கட்சியை விட்டு மஹிந்த ராஜபக்ச பல தடவை வெளியேறியிருந்தார்....

திருக்கேதீஸ்வரத்தில் மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெறும்: வதந்திகளில் உண்மை இல்லை

மன்னார் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 7ம் திகதி மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெறும் என அதன் செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரிய தெரிவித்தார். மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் அதன் செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரிய தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டது. தீருக்கேதீஸ்வரம் திருத்தலத்தில் இந்திய அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் புனரமைப்பு வேலைகள் காரணமாக இம்முறை மகா...

கூகுள் பலூன் குறித்து யாரும் அஞ்சவேண்டாம்! ஹரின் பெர்ணான்டோ

கூகுல் பலூன் வேலைத்திட்டம் சோதனை முயற்சி மாத்திரமே என்ற நிலையில், அது குறித்து யாரும் அஞ்ச வேண்டியதில்லை என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். பதுளையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனை அவர் கூறியுள்ளார். அரசாங்கத்தின் துளியளவு முதலீடு கூட இன்றி இந்த வேலைத்திட்டத்தை அமெரிக்க நிறுவனம் முன்னெடுக்கிறது. கடந்த காலத்தில் பொது மக்களின்...

விடுவிக்கப்பட்ட பகுதிகளை துப்பரவு செய்ய இராணுவம் மறுப்பு

வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 488.5 ஏக்கர் காணிகளில் பெக்ஹோ இயந்திரம் கொண்டு துப்பரவு பணிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை, இராணுவம்வழங்க மறுத்துள்ளதாக வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழுத்தலைவர் சண்முகலிங்கம் சஜீவன் தெரிவித்தார். மேலும், மேற்படி காணிகளை உரிமையாளர்களிடம் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் வரையில் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபடவேண்டாம் என இராணுவம் பொதுமக்களுக்கு கூறி வருகின்றது....

கிழக்கு கடற்பரப்பில் எண்ணெய்? ஆய்வுக்குத் பிரான்ஸ் பல்தேசிய நிறுவனம் தயார்!

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில், எண்ணெய் வள ஆய்வில் பிரான்ஸை தளமாகக்கொண்ட `Total' என்ற பல்தேசிய எண்ணெய் நிறுவனம் ஒன்று ஈடுபடவுள்ளது எனவும், இதற்கான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டுள்ளது எனவும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். பிரான்ஸின் பல்தேசிய நிறுவனத்துக்கும், இலங்கையின் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திச் செயலகத்துக்கும் இடையில் நேற்று இது தொடர்பான கூட்டு...

யோஷித சிறைக்கூடத்தில் கைத்தொலைபேசி நுண்அலைகளைத் தடுக்கும் கருவி!!

வெலிக்கடைச் சிறைச்சாலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்‌ஷ தடுத்து வைக்கப்பட்டுள்ள `ஜே’ விடுதிப் பகுதியில் கைத்தொலைபேசி நுண்அலைகளைத் தடுக்கும் கருவிகள் பொருத்தப்படவுள்ளன. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்‌ஷ, சிறைக்கூடத்தில் கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவதாக எழுந்துள்ள சந்தேகத்தை அடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில், யோஷித ராஜபக்‌ஷ தடுத்துவைக்கப்பட்டுள்ள 'ஜே' விடுதி அருகில்...

கச்சத்தீவு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்

கச்சைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று (20) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. இன்று (20) மாலை 4.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் திருவிழாப்பணிகளைத் தொடர்ந்து நாளை (21) காலை 6.00 மணிக்கு திருச்செபமாலையும், அதனைத் தொடர்ந்து, அதி வணக்கத்திற்குரிய யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் திருவிழா கூட்டுத் திருப்பலி பூசையும்...

ஒன்பதாவது தேசிய சாரணர் ஜம்போரி இன்று யாழில் ஆரம்பம்

ஒன்பதாவது தேசிய சாரணர் ஜம்போரி இன்று (20) யாழ். நகரில் ஆரம்பமாகிறது. “நட்புறவும் தெளிவும்” என்ற தொனிப் பொருளில் எதிர்வரும் 26ஆம் திகதி வரை சாரணர் ஜம்போரி நடைபெறவுள்ளது. 37 சாரணர் மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 10,000க்கும் மேற்பட்ட சாரணர்கள் இதில் பங்குகொள்வர். 05 வெளிநாடுகளிலிருந்து 17 தலைவர்கள், 110 சாரணர்கள் இதில் பங்கு கொள்வரென பிரதான...

மன்னார் புதைகுழிக்கு அருகில் உள்ள கிணற்றை தோண்ட உத்தரவு

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்கு அருகில், மூடப்பட்ட நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படும் கிணறு ஒன்றை தோண்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மன்னார் நீதிமன்றம் பொலிசாருக்கு நேற்று மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த கிணறு மண் நிரப்பி மூடப்பட்டுள்ளதால், போர்க்காலத்தில் காணாமல்போனவர்களின் எலும்புக்கூடுகள் உள்ளே இருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்ட்டுள்ளது. அங்கு கிணறு ஒன்று இருந்ததை...

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் கொலை

அவுஸ்திரேலியாவின் மெல்பேனி நகரில் இலங்கைப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்த நட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. நேற்று முன்தினம் (18) இரவு 8.00 மணிக்கும் 9.25இற்கும் இடைப்பட்ட நேரத்தில் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்ப்பட்டுள்ளது. 48 வயதான பிரசாத் சோமவன்ச என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின்...

வித்தியா படுகொலை சம்பவம்; குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு நீதவான் எச்சரிக்கை

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் இதுவரையில் மேற்கொண்ட விசாரணை அறிக்கையை, அடுத்த வழக்குத் தவணையில் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏம்.எம்.எம்.றியால் நேற்று கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு, நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இந்த வழக்கு...

தமிழரினது எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய ஆளுநர் எமக்கு கிடைத்துள்ளார்: வடக்கு முதல்வர் பெருமிதம்!

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக்கூடிய ஆளுநர் ஒருவர் வட மாகாணத்திற்கு கிடைத்துள்ளார். அதற்கு நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முன்னாள் தெங்கு பயிர்ச்செய்கைக்கான இராஜாங்க அமைச்சர் ரெஜினோல்ட் குரே, வடமாகாணத்திற்கான ஆளுநராக இன்று தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த நிகழ்வில்...

வன்னி பிரதேச பாடசாலை விடுதிகளில் தங்கியுள்ள ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல்

வன்னிப் பிரதேசங்களில் கடமையாற்றுகின்ற பல ஆசிரியர்கள் அங்குள்ள விடுதிகளில் தங்கியிருந்து தமது அர்ப்பணிப்பான சேவையைச் செய்து வருகின்றனர். அதிலும் அனேக ஆசிரியர்கள் பெண்களாகும். இவர்கள் தங்கியுள்ள விடுதிகள் இரவு நேரங்களில் தட்டப்பட்டு அங்குள்ள ஆசிரியர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். இத்தகைய சம்பவம் முழங்காவில் மகாவித்தியாலயத்தில் தங்கியிருந்த பெண் ஆசிரியர்களின் விடுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த விடுதிக்கு அருகில் இராணுவ முகாம்...

வவுனியாவில் தூக்கில் தொங்கியவாறு மீட்கப்பட்ட சிறுமி: துஷ்பிரயோகத்திற்கு பின் கொலை

வவுனியா உக்குளாங்குளம் பிரதேசத்தில் கடந்த 16 ஆம் திகதி தூக்கில் தொங்கி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் 13 வயது சிறுமி,துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக வவுனியா அவசர மரணபரிசோதகர் நேற்று தீர்மானித்துள்ளார். குறித்த சிறுமி கடந்த 16 ஆம் திகதி பாடசாலைக்கு செல்ல முடியாது என கூறி வீட்டில் இருந்துள்ளார்.எனினும் அவரது மூத்த சகோதரன் பாடசாலைவிட்டு வீட்டிற்கு வந்த...

கிளிநொச்சியில் சிறுமி தற்கொலை முயற்சி!!

கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய குறித்த மாணவி நேற்று மாலை தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று வந்த நிலையில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். எனினும் கிணற்றில் மாணவி பாய்ந்த சத்தத்தை அறிந்த அயலவர்கள் அவரைக் காப்பாற்றியுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் கல்விகற்கும் குறித்த...
Loading posts...

All posts loaded

No more posts