Ad Widget

சாவகச்சேரி டச்சு வீதியில் வழிப்பறியில் ஈடுபடும் குழு

சாவகச்சேரி, டச்சு வீதியில், இரவு வேளைகளில், கோடாரி, கத்திகளுடன் திரியும் 7 பேர் கொண்ட குழுவொன்று, வழிப்பறியில் ஈடுபடுவதுடன், அட்டகாசமும் செய்து வருகின்றது.

ஞாயிற்றுக்கிழமை (24) இரவு, மேற்படி கும்பல் மேற்கொள்ளவிருந்த தாக்குதலில் இருந்து தப்பித்து சைக்கிளில் ஓடிய இளைஞர் ஒருவர், நிலை தடுமாறி வீழ்ந்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த இளைஞன், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பணம், அலைபேசி, நகை ஆகியவற்றை குறிவைத்தே இந்தக் கும்பல், வழிபறி செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Posts