Ad Widget

முள்ளியவளையில் உழவர் பெருவிழா ! – கவிஞர் வைரமுத்துவும் பங்கேற்பு

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் உழவர் பெருவிழா நேற்று பிற்பகல் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் நடைபெற்றது.

வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இப்பெருவிழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் சிறப்பு விருந்தினராக தமிழகத்தின் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துவும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த விழாவில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

உழவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக நடைபெறவுள்ள இந்த உழவர் பெருவிழாவில் மாவட்ட ரீதியாக 2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கையாளர்களும், சேதனப் பயிர்ச் செய்கையாளர்களும், கால்நடைப் பண்ணையாளர்களும், கோழிப் பண்ணையாளர்களும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

mulliavalai-pongal-2

mulliavalai-pongal-1

Related Posts