அழகிய தாய்நாட்டை அனைவரும் ஒன்றிணைந்து கட்டியெழுப்புவோம்!

எமது அழகிய தாய் திருநாட்டினை நாம் அனைவரும் ஒன்றிணைந்து கட்டியெழுப்புவோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று(04) இலங்கைத் திரு நாட்டின் 68 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு காலிமுகத்திடலில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். காலிமுகத்திடலில் நேற்று ஏற்பாடாகியிருந்த சுதந்திரதின வைபவத்திற்கு ஜனாதிபதி தம்...

யாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்துலக சைவ மாநாடு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அனைத்துலக சைவ மாநாடு எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது. மெய்ப்பொருள் காண்பது அறிவு எனும் மகுட வாசகத்தை கருப்பொருளாகக் கொண்டு விளங்கும் யாழ் பல்கலைக்கழகத்தின் முதலாவது அனைத்துலக சைவமாநாடே எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். இந்து நாகரீகத்துறையினரின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இம்மாநாடு 12...
Ad Widget

இன்று முதல் நடைமுறைக்கு வரும் யாழ் கொழும்பு யாழ் புகையிரத சேவை நேர அட்டவணை

யாழ் -கொழும்பு புகையிரத சேவை ........................... 1. இன்ரசிற்றி அல்லது நகர்சேர் கடுகதி ........................... புறப்படல் காலை 6.10 மணி கொழும்பை சென்றடைதல் பிற்பகல் 1.05 மணி 2. யாழ்தேவி புகையிரதம் ................. புறப்படல் காலை 9.35 மணி கொழும்பை சென்றடைதல் பிற்பகல் 6.35 மணி 3. குளிரூட்டப்பட்ட புகையிரத சேவை .......................... புறப்படல் பிற்பகல்...

ஸிகா வைரஸ் : இந்த அறிகுறிகள் இருந்தால் வைத்தியரை நாடுங்கள்

ஸிகா வைரஸ் காய்ச்சல் பற்றி பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்ற போதிலும் இது குறித்து அவதானத்துடன் செயற்படுவது சிறந்தது என சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு அறிவித்துள்ளது. ஈட்ஸ் என்ற ஒரு வகை நுளம்புகளினாலேயே இந்த நோய் பரவுகின்றது. தலைவலி, தசைப்பிடிப்பு, கால் வீக்கம், கண்களைச் சுற்றி வலி போன்ற நோய்க் குணங்கள் தொடர்ச்சியாக...

சுதந்திர தினம் ; சமூகவிரோத கைதிகள் விடுதலை, தமிழ் அரசியல் கைதிகளுக்கு மறுப்பு

ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு சில சமூகவிரோத கைதிகளை விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொது மன்னிப்பின் அடிப்படையில், இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த தனசிங்க தெரிவித்துள்ளார். இதற்கமைய உத்தேசிக்கப்பட்டுள்ள சில கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை...

கெஹெலிய வாக்குமூலம் அளிக்கவில்லை

2011ஆம் ஆண்டு காணாமற்போன, முன்னணி சோசலிசக் கட்சி உறுப்பினர்களான லலித்குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு விசாரணை தொடர்பில், யாழ்;ப்பாணம் நீதிமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை ஆஜர்ப்படுத்தப்பட்ட முன்னாள் தொடர்பாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் வாக்குமூலம் பெறப்படவில்லை. நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் நேற்று வருகை தராத காரணத்தினால், இந்த வழக்கை எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதிக்கு...

சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் த.தே.கூட்டமைப்பு பங்கேற்பு!

இலங்கையின் 68ஆவது சுதந்திர தினக் கொண்டாடம் இன்று வியாழக்கிழமை காலிமுகத்திடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஆளும் கட்சி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர். இன்று காலை காலிமுகத்திடலில்...

இறுதிப்போரில் பங்காற்றிய ‘மிக்27’ போர் விமானங்கள் சுதந்திர தின அணிவகுப்பிலிருந்து நீக்கம்!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப்போரில் முக்கிய பங்காற்றிய மிக்27 விமானங்களோ, எம்.ஐ.24 தாக்குதல் உலங்கு வானூர்திகளோ சுதந்திர தின அணிவகுப்பில் இன்று பங்கேற்காது. இந்தத் தகவலை விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் சந்திம அல்விஸ் உறுதிப்படுத்தினார். இலங்கையின் 68ஆவது சுதந்திர தின விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலிமுகத்திடலில் இன்று பிரமாண்டமான முறையில்...

அனைத்து மக்களும் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலில் தொடர்ந்தும் பயணிப்போம்!

எமது எல்லா மக்களும் பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரு சமூக, அரசியல் சூழலை உருவாக்கும் இப்பாதையில் தொடர்ந்தும் பயனிக்க நாம் உறுதியோடு உள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (04) நாட்டின் அனைத்து மக்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வரும் 68 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டே ஜனாதிபதி இவ் வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார். மேலும் இவ்...

பெற்றுக்கொண்ட சுதந்திரத்தினை அர்த்தபூர்வமானதாக மாற்றுவது அனைவரினதும் பொறுப்பாகும்

பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை, நிலையான, மிகவும் அர்த்த பூர்வமான சுதந்திரமாக மாற்றிக் கொள்ளும் பொறுப்பு தற்போது நம் அனைவர் மீதும் உள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (04) நாட்டின் அனைத்து மக்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வரும் 68 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்...

இலங்கையின் 68ஆவது சுதந்திர தினம்

இலங்கையின் 68ஆவது சுதந்திரதினம் தேசிய நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கரமசிங்க ஆகியோரின் தலைமையில் இன்று காலை (4) 8.45 மணிக்கு காலி முகத்திடலில் ஆரம்பமாகவுள்ளது. சுதந்திரத்தின் இதயத்துடிப்பு என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள சுதந்திரத்தின நிகழ்வானது இரு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. காலையில் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் அணிவகுப்புகளும் மாலையில் கலாசார நிகழ்வுகளும் நடைபெறவுள்ளமை...

சுஷ்மாவுடன் வடக்கு முதல்வர் என்ன பேசவுள்ளார்?

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜூடன் மீனவர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 5ம், 6ம் திகதிகளில் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாக வடக்கு முதல்வர் குறிப்பிட்டுள்ளார். மீனவர் பிரச்சினை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தவுள்ளதாகவும்,...

ஒப்பந்தத்தில் கையழுத்திட்ட பொன்சேகா – ரணில்

ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து எதிர்வரும் காலங்களில் செயற்படுவது தொடர்பிலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்றுபிற்பகலில் அலரி மாளிகையில் வைத்து இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

கார்னியா கண் குறைபாடு: இலங்கையின் உலக சாதனை!!, இந்தியாவில் வேதனை?

கார்னியா எனப்படும் கருவிழிப்படலத்தின் மாற்று அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வை இழப்பை தடுப்பதில் இலங்கை உலகநாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது. கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவைப்படும் கருவிழிப்படலங்களை இறந்தவர்களிடம் இருந்து பெற்று அவற்றை தேவைப்படுபவர்களுக்குப் பொருத்துவதில் இலங்கை தன்னிறைவு பெற்றிருப்பது மட்டுமல்ல, தனக்கு மீதமான கண்ணின் கருவிழிப்படலங்களை வேறு நாடுகளுக்கும் கொடுத்து உதவுகிறது. ஆனால்...

யாழ். பலாலி வீதியில் விபத்து!- மூவர் படுகாயம்

தனியார் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டியை மோதித்தள்ளியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்து யாழ்.போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பயணித்த பாடசாலை மாணவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று பி.ப 1மணியளவில் பலாலி வீதி திருநெல்வேலி பகுதியில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, யாழ்ப்பாணத்திலருந்து புன்னாலைகட்டுவன் நோக்கி...

பலாலி விமானநிலைய விஸ்தரிப்புக்கென காணி சுவீகரிக்கும் பணி ஆரம்பம்!

பலாலி விமான நிலையத்துக்குரிய காணிகளைச் சுவீகரிப்பதற்காக நில அளவைச் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்போது வல்லை - அராலி வீதியின் ஒரு பகுதியும் அதனுள் உள்ளடங்கவுள்ளதால் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு, தெல்லிப்பழை பிரதேச செயலாளர் க.ஸ்ரீமோகனன் தெரிவித்தார். மக்களின் காணிகள் 1987ம் ஆண்டு ஜுன் மாதம் 8ம் திகதி சுவீகரிப்புச் செய்யப்பட்டன. இதன்...

யாழ். நீதிமன்றத்தில் கெஹலிய ரம்புக்வெல

முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்டதாக கூறப்படும் லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகன் ஆகியோர் காணாமல் போனமை குறித்து யாழ்ப்பாணம் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர்...

வடபகுதி மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் ; எதிர்க்கட்சி தலைவருக்கு கடிதம்

வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுத் தறுமாறு கோரி எதிர்க்கட்சி தலைவருக்கு வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் கடிதம் அனுப்பியுள்ளார். இந்திய இழுவைப் படகுகள் வடபகுதி கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதனால் வடக்கு மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இதனையடுத்து, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான...

நாட்டுக்கு சுதந்திரம் எமக்கோ கண்ணீர்: காணாமல் போனோர்களின் உறவினர்கள்

மட்டக்களப்பில் இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினத்தன்று காணாமல் போனோர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளனர். வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு காந்திப் பூங்காவின் அருகில் நடாத்தப்படவுள்ள இப் போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர். “நாட்டுக்கு சுதந்திரம் எமக்கோ கண்ணீர் ” என்ற துயர் நிறைந்த...

நீதவானின் வீட்டில் கைக்குண்டு

பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் பெ.சிவகுமாரின் வாசஸ்தலத்தில், இன்று புதன்கிழமை பொலித்தீன் பையில் கட்டிய நிலையில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். நீதவானின் வீட்டில் உள்ள கிணற்றடியில் இருந்தே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
Loading posts...

All posts loaded

No more posts