Ad Widget

உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வு!

நாட்டில் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது உணவு நுகர்வுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாக சனத்தொகை புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மரக்கறி, பச்சை மிளகாய், மீன், அரசி, யோகட், சின்ன வெங்காயம், வெள்ளைப்பூண்டு, முட்டை, தேங்காய் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன.

எவ்வாறெனினும், பெரிய வெங்காயம், தேசிக்காய், உருளைக் கிழங்கு, நெத்தலி, கோழி இறைச்சி, பருப்பு, பால்மா, கடுகு போன்றவற்றின் விலைகள் 2015 நவம்பர் மாதத்தை விடவும் குறைவடைந்துள்ளன.

உணவுப் பொருள் அல்லாதன கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் பேர்து 0.1 வீதத்தினால் உயர்வடைந்துள்ளன.

2015ம் ஆண்டு நவம்பர் மாதத்தை விடவும் டிசம்பர் மாதத்தில் விமானப் பயணக் கட்டணங்களும் உயர்வடைந்துள்ளதாக சனத்தொகை புள்ளி விபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

Related Posts