- Wednesday
- April 29th, 2026
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்து முக்கிய பேச்சுகளில் ஈடுபட்டார். இரண்டு நாட்கள் பயணமாக இலங்கைக்கு நேற்று விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு அலரிமாளிகையில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றது. இதன்போது இந்திய...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் (Zeid Ra'ad Al Hussein) இன்று (06) இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என வௌிவிவகார அமைச்சு தகவல் வௌியிட்டுள்ளது. இன்று நாட்டுக்கு வருகை தரவுள்ள இவர் எதிர்வரும் 09 ஆம் திகதி வரையான சுமார் நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால...
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் அல் ஹுஸைனின் யாழ். விஜயத்தின் போது காணாமல் போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர். அகில் இலங்கை தமிழ் காங்கிரஸின் ஏற்பாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை (07) இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. யாழ். நல்லூர் ஆலய முன்றலில் காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதற்கான...
இலங்கை வைத்தியர்கள் சிலர் நாட்டிற்குள் மேற்கொண்ட சிறுநீரக கடத்தல் சம்பவம் குறித்து தேடிப்பார்ப்பதற்கு நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவினரின் அறிக்கை நேற்று (05) சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினர் கடந்த 23ம் திகதி சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் தனியார் வைத்தியசாலைகள் உள்ளிட்ட இடங்களில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். முன்னதாக 03 தினங்களில் அந்த...
நேற்று நடந்த சம்பவம் மகிழ்ச்சி தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டமை சந்தோசம் சிறிய விடயமாக இருந்தாலும் சிங்கள தமிழ் சகோதரத்துவத்தில் வேறுபாடுகளுக்குள்ளும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது சிங்கள சகோதரர்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் நாங்கள் பத்து அடி எடுத்து வைக்க தயாராக இருக்கிறோம் என வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று(5) பௌத்த விகாரையில் வழிபாடுகளை...
பெங்களூர் ஹேசரகாடாவில் தான்சானிய நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை அடுத்து இலங்கை மாணவர்கள் மத்தியிலும் தாக்குதல் அச்சம் தோன்றியுள்ளது. இந்த செய்தியை த ஹிந்து நாளிதழ் பிரசுரித்துள்ளது. ஆபிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களும் ஏனைய வெளிநாட்டு மாணவர்களும் ஹேசரகாடாவில் தங்கி கல்வியை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் தன்சானியா நாட்டு மாணவர்கள் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டமையை...
ஒரு குழந்தையைக் கைது செய்து அக்குழந்தையின் தந்தைக்கு சிக்கலைக் கொடுக்கும் பழிவாங்கும் அரசியல் என்று ராஜபக்சேவின் மகன் யோசித ராஜபக்சேவைக் கைது செய்ததை விமர்சித்துள்ளார் கோத்தபயா ராஜபக்சே. ஆனால் அவர் போட்ட இந்த டிவிட்டுக்கு பலரும் கடுமையாக பதில் டிவிட் போட்டு கோத்தபயாவை கலங்கடித்து வருகின்றனர். தமிழர்களும், சிங்களர்களும் பாரபட்சமே இல்லாமல் கோத்தபயாவை அவரது டிவிட்டுக்குப்...
தாவடிப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (05) காலை இடம்பெற்ற விபத்தில், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சோ.சுகிர்தன் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னால் சென்ற வான் ஒன்று திடீரென நிறுத்தப்பட்டபோது, இவரது மோட்டார் சைக்கிள் வானுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தின் குடாக்கடல் பகுதியில் தொழில் செய்வதற்கு 45 நாட்கள் தடை விதித்து, மீனின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மீன்களின் இனப்பெருக்கக் காலத்தில் கடலுக்கு 45 நாட்கள் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடாமல் இருக்கும் சட்டம் இந்தியாவில் நடைமுறையில் உள்ளது. தீவுப் பகுதியிலிருந்து பண்ணைப் பகுதி வரையிலும் அதிகளவான கலங்கட்டிகள் போடப்பட்டுள்ளன. இந்தக் கலங்கட்டிகளால் மீன்களின் இனப்பெருக்கமான...
கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று நடைபெற்ற தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், ஆசனத்தில் இருந்து எழுந்திருக்க, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பாரியார் ஹேமா பிரேமதாச உதவியுள்ளார். 68வது தேசிய சுதந்திர தினத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு வந்த போது, அதில்...
ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறும் புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கில் செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள பத்திரிகை ஒன்றின் செய்தியாளரே நாளை ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் முதல் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவானாக வை.எம்.எல்.ரியால் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த...
சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமை பெரிய விடயமல்ல என்று தெரிவித்துள்ளார் எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன். இது புதியதுமல்ல, அதேவேளை ஆச்சரியப்பட வேண்டியதொன்றுமல்ல. ஏனெனில் தேசிய கீதம் ஏற்கனவே சுதந்திர தினத்தில் தமிழில் பாடப்பட்டு வந்த ஒன்றே. இது பெரிதான விடயமல்ல. இதனை மீள நடைமுறைப்படுத்தியதில் அரசாங்கத்திற்கும் நன்மையாகும். அதே போன்று...
புகையிலை செய்கையை தடை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வடமத்திய மாகாணம், இபலோகமவில் அண்மையில் இடம்பெற்ற விவசாய அபிவிருத்தி திட்டமொன்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் வர்த்தக விவசாய செய்கையாக புகையிலையை பயிரிடுவதைத் தவிர்த்து, உணவுப் பொருட்கள் பயிரிடப்படும் என அவர்...
தேசிய வைபவம் காலிமுகத்திடல் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த வைபவ நிறைவின்போது, தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட்டது. வைபவத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனும் கலந்துகொண்டார். தேசிய கீதம், தமிழ்மொழியில் பாடப்பட்டபோது அவரின், கண்களிலிருந்து கண்ணீர் வந்ததாக, இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்த அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின நிகழ்வுகளின்...
வடக்கு மாகாணத்துக்குரிய புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்படவுள்ளார். தனக்கு இவ்வாறானதொரு பதவி கிடைக்கவுள்ளது என அறியக் கிடைத்தது என்று ரெஜினோல்ட் குரேயே உறுதிப்படுத்தியுள்ளார். தற்போதைய வடக்கு மாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிகக்கார இந்த மாத இறுதியுடன் தனது பதவியிலிருந்து ஓய்வுபெறுகின்றார். ஆளுநர் பதவியில் இருந்து விலகிக்கொள்வது குறித்து அவர்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இலங்கையின் சுதந்திர தினமான நேற்று வியாழக்கிழமை கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டிருந்தைக் காணக்கூடியதாக இருந்தது. கைலாசபதி கலையரங்கு மற்றும் நூலகப் பகுதி ஆகிய இடங்களிலேயே கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது.
இலங்கையின் 68வது சுதந்திர தினமான நேற்று காணமால் போனவர்களின் குடும்ப உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். கறுப்பு நிற துணிகளால் தமது வாய்களை அடைத்தவாறு வவுனியா நகர சபைக்கு முன்னாள் பெருந்திரளான மக்கள் ஒன்று கூடி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். போரின் போது இராணுவத்திடம் கையளி்க்கப்பட்ட தமது உறவுகளை எங்கே என்று எழுதப்பாட்ட பதாகைகளை இவர்கள் ஏந்தியிருந்தனர்....
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தலங்களில் வீடியோவை பதிவு செய்த பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். பொதுபல சேனா...
இலங்கையின் சுதந்திர தினமானது தமிழ் மக்களுக்கு சுதந்திரமற்ற தினமாகவே பார்க்கப்படுகின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சி கந்தசாமி கோவிக்கு அருகில் காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் சங்கத்தினால் நேற்று எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. காலை 09.00 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களும்...
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 68 ஆவது சுதந்திர தினத்தையொட்டி யாழ் மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றது. மாவட்டத்தின் பிரதான சுதந்திரதின நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திரு என்.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தேசியக்கொடியை அரசாங்க அதிபர் ஏற்றிவைக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டு சுதந்திரதினம் அனுஸ்டிக்கப்பட்டதுடன் தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு...
Loading posts...
All posts loaded
No more posts
