- Friday
- August 7th, 2026
நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தாலிற்கு தங்களது பூரண ஆதரவை வழங்கிய தனியார் பேருந்துஉரிமையாளர்கள் சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் விசேட நன்றிகளை தெரிவித்து நிற்கின்றார். மேலும் இந்த விடயங்கள் இத்தோடு மறக்கப்பட்டுவிடாது தொடர் நடவடிக்கைகளாக மேற்கொள்ள வேண்டும் என்றும், எல்லோரும் இந்த விடயத்தில் தொடர்ச்சியாக...
பொதுமன்னிப்பு அளித்து தங்களை விடுதலை செய்யுமாறு கோரி மூன்றாவது முறையாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் இன்றும் போராட்டத்தை தொடச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். கொழும்பு – மெகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 14 பேர் இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் கடந்த 22ஆம் திகதி முதல் ஈடுபட்டு வருகின்றனர். இந்த...
இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நாகபட்டினம் – கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு இடையில் இந்த மீனவர்கள் நேற்று புதன்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் இவர்கள் பயணித்த இரண்டு படகுகளையும் இந்திய கடற்படையினர் கைப்பற்றியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 9 மீனவர்களும்...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான எமில் காந்தன், இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றில் ஆஜராவாரென, அவர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் நீதிமன்றத்தில் கூறியதையடுத்து, கொழும்பு விசேட மேல் நீதிமன்றம், அவர் மீதான சிவப்பு அறிவித்தல்களையும் பிடிவிறாந்துகளையும் மீளப்பெற்றுக்கொண்டது. எமில் காந்தனுக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளதால், கொழும்பு விசேட நீதிமன்றில்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு, நாளை 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாக கலைப்பீடாதிபதி பேராசிரியர் நா.ஞானகுமரன், நேற்று புதன்கிழமை (24) அறிவித்துள்ளார். 'யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவையினால், புதிய ஆடை ஒழுங்கு விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆண் கல்விசார் ஊழியர்கள் மற்றும் ஆண் மாணவர்கள், விரிவுரை மண்டபங்களுக்கு டெனிம்...
இலங்கையில் தமிழ் பௌத்தர்கள் 22,254 பேர் உள்ளனர். அதில், 11 பேர் தமிழ் பிக்குகளாவர் என்று, நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஆற்றுப்படுத்தப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வாழ்கின்ற தமிழ் பௌத்தர்கள், தமிழ் பிக்குமார்களின் உள்ளிட்ட கேள்விகள் அடங்கிய கேள்வியொன்றை நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, வாய்மூல விடைக்கான வினாக்களுக்கான நேற்றைய நேரத்தின் போது கேட்டிருந்தார். இக்கேள்விகான...
"புதிய அரசமைப்பினூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் பணிகளை குழப்பவோ, தாமதப்படுத்தவோ கூடாது'' என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சபையில் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று இரண்டாவது நாளாக இடம்பெற்ற அரசமைப்புப் பேரவையாக நாடாளுமன்றத்தை மாற்றுவதற்கான சட்டமூலம் மீதான விவாதத்தில் சர்ச்சை ஏற்பட்டபோதே எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மேற்கண்டவாறு வலியுறுத்தினார். விவாதத்தில் உரையாற்றிய...
மனித உரிமைகள் தொடர்பான வாக்குறுதிகளை இலங்கை அரசு செயற்படுத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. குற்றச் செயல்களுக்குப் பொறுப்பு கூறுதல் தொடர்பில் இலங்கை அரசு அளித்த வாக்குறுதிகள் செயன்முறைப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் அது தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ள நிலையில்...
வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட 13 வயது மாணவி ஹரிஸ்ணவியின் மரணத்திற்கு நீதிகேட்டும், சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான வன்புனர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் நடவடிக்கைக்கு, இன, மத, மொழி பேதங்களை கடந்து முழுமையாக ஓத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் வன்முறைக்கு எதிரான சமூக அமைப்பு சார்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்...
இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் சுஹைர் எம்.ஓ.எச்.டி. தார் சயிட் பாயிட் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று புதன்கிழமை சந்தித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கூட இருந்தனர்.
இலங்கைக்கு வருகை தந்திருக்கும் நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீக்கு, அரசு ஒரு குட்டி யானையை பரிசாக அளிக்க முடிவு செய்திருப்பதை வன விலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் விமர்சித்திருக்கிறார்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் நடந்த ஒரு விழாவில் ஜோன் கீயிடம் இந்த யானைக்கான உரிமப் பத்திரத்தை வழங்கினார். இந்த நடவடிக்கையை விமர்சித்த வன விலங்கு ஆர்வலர்கள்...
யாழ். மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியே பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள படைத்தரப்பினர், மற்றும் பொலிஸார் அக்காணிகளை நிரந்தரமாகச் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரியவருகிறது. இராணுவம், கடற்படை மற்றும் பொலிஸாரின் ஆக்கிரமிப்பில் உள்ள சுமார் 60 வீதமான காணிகளே இவ்வாறு நிரந்தரமாகச் சுவிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2013 ஆம் ஆண்டு யாழ்.மாவட்டச்...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஐந்து பேர், சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கமைய கொழும்பு நீதவானால் இன்று புதன்கிழமை (24) விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா மாணவி ஹரிஸ்ணவி படுகொலையைக் கண்டித்தும் அவரின் மரணத்துக்கு நீதி கேட்டும் விடுக்கப்பட்ட ஹர்த்தாலால் வடக்கு மாகாணம் இன்று புதன்கிழமை ஸ்தம்பித்தது. வவுனியாவில் கடந்த 16 ஆம் திகதி மாணவி ஹரிஸ்ணவி வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்டார். இவரின் படுகொலையைக் கண்டித்தும் அவருக்கு நீதி வேண்டியும் இன்று புதன்கிழமை வடக்கு மாகாணம் எங்கும் ஹர்த்தாலுக்கு அழைப்பு...
பனை அபிவிருத்தி சபையினால் இது வரைக்கும் நிர்வகிக்கப்பட்டு வந்த திக்கம் வடிசாலையை மீண்டும் வடமராட்சி கூட்டுறவு சங்கத்தின் கொத்தணிக்கு மீண்டும் பாரப்படுத்துவதாக நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற கட்டடத்தில் கூடிய அமைச்சரவையின் பொருளாதார உபகுழு தெரிவித்துள்ளது. ஊழியர்கள், மற்றும் கூட்டுறவு சங்கத்தினர் கடந்த 13ஆம் திகதி நெல்லியடியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைச் சந்தித்து இதற்கான விண்ணப்பத்தை செய்திருந்தனர்....
வவுனியாவை சேர்ந்த 14 வயது சிறுமி க.ஹரிஸ்ணவி பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி வட மாகாணத்தில் இன்றைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதேநேரம் யாழ்.பல்கலை சமூகத்தால் முன்னெடுக்கப்படவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த...
கடந்த 16.02.2016 அன்று வவுனியாவில் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஹரிஷ்ணவி என்ற மாணவிக்கு நடந்த கொடூர சம்பவத்தை கண்டித்து இன்றைய தினம் 24.02.2016 வட மாகாணத்தில் நடைபெற இருக்கும் ஹர்த்தாலை பூரணமாக அனுஸ்ரிக்குமாறு பொது மக்களை கேட்டு நிற்கின்றார் வட மாகாண போக்குவரத்துக்கு அமைச்சர் பா. டெனிஸ்வரன். மேலும் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், கடந்த...
வவுனியாவில் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட மாணவி ஹரிஸ்ணவிக்கு நீதி வேண்டி இன்று புதன்கிழமை வடக்கு மாகாணம் முழுவதும் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்ட்டுள்ளது. வவுனியா பிரஜைகள் குழுவின் அழைப்பின் பேரில் இடம்பெறும் இந்த ஹர்த்தாலுக்கு பொது அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் பலவும் தமது ஆதரவை தெரிவித்துள்ளன. யாழ். வணிகர் கழகம், இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட சில...
மகஸின் சிறையில் 15 அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்! அநுராதபுர சிறையில் இருவரின் போராட்டமும் தொடர்கிறது!!
கொழும்பு, மகஸின் சிறைச்சாலையின் 'ஜே' பிரிவில் உள்ள 14 ஆண் தமிழ் அரசியல் கைதிகளும், பெண்கள் பிரிவிலுள்ள ஒரு பெண் தமிழ் அரசியல் கைதியுமாக 15 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி நேற்றுக் காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரமசகாயம் உதயகுமார், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், நடேஸ் குகநாதன், மு.சிவநாதன், மா. நீதிநாதன், க.வேதநாயகம்,...
வவுனியாவில் மாணவி ஹரிஷ்ணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி படுகொலை செய்த குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் சபையில் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அரசமைப்பு பேரவையை நியமிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே...
Loading posts...
All posts loaded
No more posts
