கன்சாட்டில் இருந்து நீக்கப்படுபவற்றை செய்தியாக்க வேண்டாம்

வடமாகாண சபை உறுப்பினர்கள் தெரிவிக்கப்படும் சில கருத்துக்கள் கன்சாட்டில் இருந்து நீக்கப்படுகின்றது என கூறப்பட்டால், அவற்றை ஊடகங்களில் செய்தியாக வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கேட்டுக்கொண்டார். மேலும், உறுப்பினர்கள் சிலர் தெரிவிக்கும் கருத்தானது, மாகாண சபையின் பதிவுப் புத்தகமான கன்சாட்டிலிருந்து நீக்கப்படுவதாக கூறப்பட்டாலும், ஊடகங்களில் அவை செய்தியாக வருகின்றன. இதனால் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன....

பொன்சேகா எம்.பியாக சத்தியப்பிரமாணம்

ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பியாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
Ad Widget

வடமாகாண சபை கலைக்கப்படவுள்ளது?

மத்திய அரசாங்கத்தால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்படவுள்ளதாக எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்போது வடமாகாண சபையும் கலைக்கப்படுமா என்பது தொடர்பில் தெரியவில்லையென வட மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, வட மாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்றபோதே...

“தேசம்“ அல்லது “கூட்டம்” என்பதே தற்போது மக்கள் முன்னுள்ள பெருவினாவாகும் – கஜேந்திரகுமார்

தமிழரின் தேசம் என்ற வார்த்தையை பிரயோகிப்பதா இல்லை மக்கள் கூட்டம் என்ற வார்த்தையை பிரயோகிப்பதா என்பது தொடர்பில் தமிழ்த் தலைமைகளினுள் விவாதங்கள் காணப்படுவதே தற்போதைய யதார்த்தமாகவுள்ளது. இது தொடர்பில் தமிழ் மக்களே இறுதிதீர்மானம் எடுக்கவேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் பேரவையின் அங்கத்துவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ்...

வன்னி இளைஞர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

போலி விசாவை பயன்படுத்தி இத்தாலி ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட இரண்டு இளைஞர்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைதுசெய்துள்ளனர். நேற்று அதிகாலை வேளையில் இவர்கள் இருவரையும் கைது செய்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 31...

முதுகை வளைத்து செடி நடும் பலமிக்க நாடுகளின் தலைவர்களும்! வளையாத இலங்கை தலைவர்களும்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன படிகள் வைத்து செய்யப்பட்ட குழிக்குள் இறங்கி செடி ஒன்றுக்கு தண்ணீர் ஊற்றும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. மைத்திரிபால சிறிசேன மாத்திரமல்லாது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இவ்வாறே தற்காலிகமாக படிகள் வைத்து செய்யப்பட்ட குழிக்குள் இறங்கி செடிக்கு தண்ணீர் ஊற்றியது புகைப்படம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும்...

வழி அனுமதிப்பத்திரமே முரண்பாடுகளுக்கு காரணம்

அனுமதி பத்திரம் வழங்குவதற்குரிய அதிகாரம் மாகாண போக்குவரத்து அதிகார சபை அல்லது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கே உள்ளது. ஆனால், இலங்கையில் எந்த இடத்திலும் இல்லாதவாறு யாழ். மாவட்டத்தில் மாத்திரம் மாவட்டச் செயலாளர் அவ் அதிகாரத்தை தன் கையில் வைத்துள்ளார். முறையற்ற விதத்தில் தனியார் பஸ்களுக்கு வழங்கப்படும் வழி அனுமதிப்பத்திரமே இலங்கை போக்குவரத்து சபை பஸ்களுக்கும் தனியார்...

சமாதானம் செய்யவே கடிதம் கோரினேன்

விபத்துக்குள்ளான இரண்டு தரப்பினரையும் சமாதானம் செய்வதற்காகவே தான் கடிதம் கோரியதாக ஊர்காவற்றுறை “பி” பிரிவு ஆதார வைத்தியசாலை வைத்தியர், ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னிலையில் தெரிவித்தார். ஊர்காவற்றுறை சந்தைக்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை (08), மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்றார். விபத்தின்...

சர்வதேச விசாரணைப் பொறிமுறை அவசியமில்லை – மனித உரிமைகள் ஆணையாளரிடம் தேரர்கள் கோரிக்கை!

இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு சர்வதேச விசாரணைப் பொறிமுறை அவசியமில்லை என்று அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்தனர். நான்கு நாள்கள் பயணம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித்...

60 வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் மஹோதயப் புண்ணியகால தீர்த்தம் வடமராட்சியில்!

60 வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் மஹோதயப் புண்ணியகால தீர்த்த உற்சவம் நேற்று அதிகாலை தொடக்கம் மாலை வரை தொண்டைமானாறு வரையான பாக்குநீரிணை வங்காள விரிகுடா கடலில் இடம்பெற்றது. வடமராட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 50 இற்கும் மேற்பட்ட ஆலயங்களில் இருந்து சுவாமி எழுந்தருளி கடலில் தீர்த்த உற்சவம் நடைபெற்றது. சிம்மராசியில் குரு பகவானும் நிற்க,...

கிரிக்கெட் தேர்தலில் அநீதி – மனித உரிமை ஆணைக்குழுவில் அர்ஜூன முறைப்பாடு

அண்மையில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தல் தொடர்பில், அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தலின் போது, விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் ஒரு பக்கத்திற்கு அதிக பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக, அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு தெரியப்படுத்தியதாகவும், எனினும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும் அர்ஜூன...

புங்குடுதீவு மாணவி படுகொலை : சந்தேகநபர்கள் ஆரோக்கியத்துடன் உள்ளனர்!!

புங்குடுதீவு மாணவி படுகொலைச் சந்தேகநபர்கள் தாங்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி தெரிவித்திருந்தனர். ஆனால், திங்கட்கிழமை (08) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 10 சந்தேகநபர்களும் முழுமையான தேக ஆரோக்கியத்துடன் மன்றுக்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டனர். தங்கள் வழக்கை துரிதப்படுத்த வேண்டும் எனக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சந்தேகநபர்கள் கடந்த...

கச்சத்தீவு தேவாலய திருவிழா ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவ ஏற்பாடுகளுக்கான கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில், அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இன்று இடம்பெற்றது. கச்சத்தீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில், எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு கொடியேற்றத்துடன், திருப்பலி ஆரம்பமாகின்றது. 21ம் திகதி காலை 6.00 மணிக்கு திருச்செபமாலையும், அதனைத்...

வேலைவாய்ப்பு வழங்குவதில் முன்னாள் போராளிகள் புறக்கணிப்பு!

முன்னாள் விடுதலைப்புலி போராளிகள் தமக்கான வேலைவாய்ப்பைப் பெறுவதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்வதாக பருத்தித்துறை அபிவிருத்தி நிறுவன தலைவர் மு.சர்வானந்தன் தெரிவித்துள்ளார். அவர்கள் வசிக்கும் பிரதேசங்களில் பல பில்லியன் டொலர்களில் முதலீடு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்ற போதிலும், இவர்கள் தொழிலொன்றைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் 12000 முன்னாள் உறுப்பினர்கள் புனர்வாழ்வு...

இல்ல மெய்வன்மை போட்டியில் பங்குபற்றிய மாணவி உயிரிழப்பு!

இல்ல மெய்வன்மை போட்டியில் பங்குபற்றிய போது, மயங்கி வீழ்ந்து, உயிரிழந்த மாணவி, சளிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தமையாலேயே மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்தது. அம்பன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சனிக்கிழமை(06) இடம்பெற்ற இச்சம்பவத்தில், யோகலிங்கம் அனோஜா (வயது 13) என்ற மாணவியே உயிரிழந்துள்ளார். இவர் முதலில் அணி நடையில் ஈடுபட்ட பின்னர், தொடர்ந்து...

விபத்துக்கு உள்ளானவர் கடிதம் எழுதி தந்த பின்னரே சிகிச்சை அளிப்பேன்- ஊர்காவற்துறை ஆதார வைத்திய சாலை வைத்தியர்

விபத்துக்கு  உள்ளானவர் கடிதம் எழுதி தந்த பின்னரே சிகிச்சை  அளிப்பேன் என ஊர்காவற்துறை பி.தர ஆதார வைத்திய சாலை வைத்தியர் தெரிவித்துள்ளார். இச் சம்பவம் குறித்து  தெரிய வருவதாவது , ஊர்காவற்துறை சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்கு உள்ளாகி இருந்தது. அதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் , துவிச்சக்கர...

புங்குடுதீவு மாணவி படுகொலை : சிறை மாற்றம் செய்ய நீதவான் மறுப்பு

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 சந்தேக நபர்களில் 10ஆவது சந்தேக நபரை யாழ்ப்பாணச் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் மறுத்தார். புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு, இன்று திங்கட்கிழமை (08), பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் மறுப்பு...

சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றம் வேண்டாம் : மஹிந்த கையொப்பமிட்டார்

சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றம் வேண்டாம்- படையினருக்கு எதிரான செயற்பாட்டை நிறுத்து என்ற தொனிப்பொருளில் படைவீரர்கள் பாதுகாக்கும் தேசிய அமைப்பினால், முன்னெடுக்கப்படும் கையொப்பம் திரட்டும் செயற்பாட்டில் இணைந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ, மகஜரில் கையொப்பமிட்டார். இந்த நடவடிக்கை கோட்டை சம்புத்தாலோக விஹாரையில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

சரத் பொன்சேகா எம்.பியாகிறார் ?

ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வாரென அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. இதேவேளை இவருக்கு படையினர் நலன்புரிகள் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் அறியவருகிறது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஐக்கிய தேசிய கட்சியின் பங்காளிக் கட்சியாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி...

சம்பந்தன் கண்ணீர் வடித்தது ஆச்சரியமே – வீ.ஆனந்தசங்கரி

“இலங்கையின் 68ஆவது சுதந்திர தின விழாவில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட AnanthaSangaree.போது, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் கண்களில் இருந்து கண்ணீர் வந்ததாக வெளியான செய்தி, அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது” என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அந்த அறிக்கையில்...
Loading posts...

All posts loaded

No more posts