அண்மையில் வெளியான க.பொ.த (உ.த) பரீட்சை முடிவுகளின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அனுசரணையுடன் இடம்பெற்றது.
பாலகன் கல்வி மேம்பாட்டுபிரிவின் ஏற்பாட்டில் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி நிகழ்வுக்கு அக்கட்சியின் கொள்கை முன்னெடுப்பு பிரிவு இணைப்பாளர் சமயலிங்கம் அண்ணாத்துரை தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வு நேற்று (31.01.2016) களுதாவளை கலாச்சாரமண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வைத்திய கலாநிதி கே.ரி.சுந்தரேசன் கலந்துகொண்டார். சிறப்பு அதிதியாக பட்டிருப்பு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.உலககேஸ்பரம் மற்றும் கௌரவ அதிதிகளாக மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் அ.சுகுமார் மற்றும் மண்முனை தெ.எ.பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் வி.திரவியராஜா பிரபல இரசாயணவியல் ஆசிரியர் தருமலிங்கம் சுரேஸ் மற்றும் ஓய்வுபெற்ற வைத்தியர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மருத்துவம், பொறியியல் இவர்த்தகம் தொழிநுட்பம் மற்றும் கலை பீடங்களுக்கு தெரிவான மாவட்ட அடிப்படையில் முதல்நிலை பெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசில்களும் வெற்றி கேடயங்ளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.