- Saturday
- November 22nd, 2025
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாணசபை முதலமைச்சர், வடக்கு, கிழக்கு மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணசபைகளின் உறுப்பினர்களுடனான முக்கிய கலந்துரையாடல் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் இன்று வியாழக்கிழமை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
புலிப் பயங்கரவாதம் யுத்த களத்தில் தோற்கடிக்கப்பட்டபோதும் இந்த நாட்டில் தமிழீழத்தை உருவாக்குவதற்கான அவர்களது சித்தாந்தம் தோற்கடிக்கப்படவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யுத்த ரீதியில் தோல்வியடைந்த பயங்கரவாதிகளை சித்தாந்த ரீதியாக தோல்வியடையச் செய்யும் பொறுப்பினை நிறைவேற்றுவதற்கு புதிய அரசு பாடுபடுகிறது என்றும் குறிப்பிட்டார். இந்தப் பொறுப்பை உரியவாறு நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்போது, நாட்டின்...
போட் சிட்டி எனப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துடன் இலங்கை முன்னோக்கி செல்ல எதிர்பார்த்துள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் சீனாவின் முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். சுவிஸர்லாந்தில் நேற்று ஆரம்பமாகியுள்ள உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள அங்கு சென்றுள்ள, ரணில் விக்ரமசிங்க, ஊடகவிலயாளர் சந்திப்பில் கலந்து...
இலங்கை கல்வி நிர்வாக சேவை மற்றும் இலங்கை நிர்வாக சேவை ஆகியவற்றுக்கு ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் - 3 க்கு திறந்த போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் 219 பேரும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டி பரீட்சையின் அடிப்படையில் 515 பேரும் அனுபவ அடிப்படையில் 118 பேர் உள்வாங்கப்படவுள்ளனர். திறந்த போட்டிப் பரீட்சைக்கு...
வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடிமர்த்தும் நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (19) பிற்பகல், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி, அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நத்தார் விழாவில் கலந்துகொண்டபோது இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள முகாம் ஒன்றுக்குச் சென்று அவர்கள் பற்றி விசாரித்ததுடன், அவர்களை மீள்க்குடியமர்த்துவதற்கான காணிகளை காண்பிக்கும் நடவடிக்கைகள் ஆறு மாத...
இலங்கையில் அதிவிரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற 3G வலையமைப்புக்களில் ஒன்றான Hutch, பெறுமதிமிக்க தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவரும் பெறுமதிசேர் சேவைகளில் மற்றுமொரு அம்சமாக Hutch கையடக்கத்தொலைபேசியூடாக நேரடியாக புகையிரத டிக்கட்டுக்களைக் கொள்வனவு செய்வதற்கு இடமளிக்கும் வகையில் மொபிடெல் மற்றும் இலங்கை புகையிரத திணைக்களம் ஆகியவற்றுடன் பங்குடமையை ஏற்படுத்தியுள்ளது. தினசரி புகையிரதம் மூலமாக பயணிக்கும் 300,000 பிரயாணிகளுக்கு இச்சேவை...
அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய இரா.சம்பந்தன் மௌனம் காப்பது ஏன் என கேள்வி எழுப்பி கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட அரசியல் கைதிகள் விடுதலை மக்கள் இயக்கம் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கைதிகள் விடயத்தில் சரியான தீர்மானத்தினை முழுமையாக எடுப்பீர்கள் என்ற நம்பிகையில்...
அமெரிக்க டொலரின் ஒப்பீட்டளவிலான ரூபாயின் மதிப்பு தற்போது 146 ஆக காணப்படுவதாகவும், 1976ம் ஆண்டுக்குப் பின்னர், ரூபாயின் பெறுமதி இவ்வாறு வீழ்ச்சியடைவது, இதுவே முதல் முறை எனவும், பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன் அரசியல்வாதிகள், விளையாட்டு துறையினர், கலைஞர்கள் போன்றோரை, எப்.சீ.ஐ.டிக்கு...
தெல்லிப்பளை – அளவெட்டி வீட்டுத்திட்ட உதவியின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் உரியவர்கள் கடந்த பல வருடங்களாக மீள்க்குடியேறாமையால் அயலில் உள்ள கலவன் பாடசாலையும், அந்தப் பகுதியில் உள்ள பொது மக்களும் பலத்த சிரமங்களுக்கு உள்ளாகி வரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அளவெட்டி மேற்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள அளவெட்டி அருணோதயாக்...
சில ஊடகங்களின் நடவடிக்கை குறித்து இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் அன்ஜலோ மெத்யூஸ் அதிருப்தி வெளியிட்டுள்ளார். சில ஊடகங்கள் வேண்டுமென்றே அணியின் வீரர்கள் மீது சேறு பூசியிருந்தன. ஆட்ட நிர்ணய சதி குறித்து நடைபெறும் விசாரணைகளை பயன்படுத்தி வீரர்கள் இழிவுபடுத்தப்படுகின்றனர். எனினும் விளையாட்டை தூய்மையாக வைத்திருக்க விளையாட்டுத்துறை அமைச்சர், பொலிஸ் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு...
இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் காணாமல்போன சிறுவன் பத்தரமுல்லை நீதிமன்றத்தால் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். கிளிநொச்சி ஐந்து வீட்டுத்திட்டத்திற்கு அருகில் வசித்து வந்த 16 வயதான ஜேசுநாயகம் நிமலேந்திரன் என்ற சிறுவனே நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட முறுகல் காரணமாக பாடசாலைக்கு வர வேண்டாம் என்று மறுக்கப்பட்டதனால் வீடு செல்ல...
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செல்வி ஜெயக்குமார் தனுஜா என்ற சிறுமி தமிழகத்தில் நீச்சல் போட்டிகளில் சாதனைகளை புரிந்து வருகிறார். தமிழக அரசின் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பற்றி பல தடவைகள் முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்றுள்ளார். இம்முறை இச் சிறுமி மாநிலங்கள் அளவில் சென்னை வேளச்சேரியில் 10ம் திகதி இடம் பெற்ற போட்டியில் தமிழகத்தில்...
காணாமற்போனவர்கள் இறந்திருக்கலாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறிய கருத்தானது, இனவாதக் கருத்து மாத்திரமல்ல, அது ஆதிக்க வெறியான பேச்சு என வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் 15ஆம் திகதி நடைபெற்ற பொங்கல் விழாவில், உரையாற்றிய பிரதமர், காணாமற்போனவர்களில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் கருத்துத் தெரிவித்திருந்தார். இது தொடர்பில்...
அழகான பெண்போல பாவனை செய்து, இளைஞனொருவனைத் தன் வலைக்குள் வீழ்த்தி, அவரிடமிருந்து இலட்சக்கணக்கான பணத்தை கறந்தவர் தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார். பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் வைபர் ஆகிய சமூக வலைத்தளங்களின் ஊடாக அச்சுறுத்தி பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் குழுவொன்று ஈடுபடுவதாக நீதவானின்...
திடீரென ஏற்பட்ட வலிப்பினால் மூன்று பிள்ளைகளின் தாயொருவர், நேற்று செவ்வாய்க்கிழமை (19) உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் பகுதியைப் சேர்ந்த மதன் ஜெயமாலா (வயது 28) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அதிகாலையே கணவன் வேலைக்குச் சென்றுள்ளார். இரண்டு பிள்ளைகளும் பாடசாலைக்குச் சென்ற நிலையில் திடீர் வலிப்பு ஏற்பட்டு இவர் நிலத்தில் வீழந்து மயங்கியுள்ளார்....
பூநகரியில் 860 ஏக்கர் காணி போலி ஆவணங்கள் மூலம் சிங்களவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதுடன் அக்காணிகளில் புதைக்கப்பட்ட சடலங்கள் புதையல் பூஜை என்ற போர்வையில் அகற்றப்பட்டுள்ளன என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது: பூநகரி- கெளதாரிமுனை - பரமன்கிராயில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு சுமார் 860 ஏக்கர் காணிகள் சிங்களவர்களுக்கு விற்பனை...
வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு 36.5 கோடி ரூபாவை உலக வங்கி வழங்கியுள்ளது என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2016 ஆம் ஆண்டுக்கான சுகாதார அபிவிருத்தித் திட்டத்துக்காகவே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் வருடமொன்றுக்கு 3ஆயிரத்து 500 மில்லியன் சிகரெட்டுகள் விற்பனையாகின்றன என்று போதைப்பொருள் தொடர்பான தகவல் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் புபுது சுமனசேகர தெரிவித்தார். தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மஹரகமவிலுள்ள இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்றது. இதன்போதே போதைப்பொருள் தொடர்பான தகவல் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மேற்படி...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 31 ஆவது பொதுப் பட்டமளிப்புவிழா நேற்றயதினம் (19) ஆரம்பமாகியது. யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்றும் (19) இன்றும் (20) ஆக எட்டு அமர்வுகளாக இடம்பெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவில் 1939 மாணவர்கள் பட்டம்பெறவுள்ளனர். யாழ் பல்கலைகழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் நடைபெற்ற நேற்றய முதல் நாள் அமர்வில் யாழ் பல்கலைக்கழக வேந்தர்...
கொழும்புத்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ். பாசையூர் அந்தோனியார் ஆலயத்திற்கு முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணியளவில் கல்வீச்சுதாக்குதல் இடம்பெற்றுள்ளது. யாழ்.கொழும்புத்துறையில் இருந்து பாசையூர் வழியாக பஸ் சென்றுகொண்டிருந்த போது, பாசையூர் பகுதியில் மூன்று...
Loading posts...
All posts loaded
No more posts
