பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் நேர முகாமைத்துவம் பின்பற்றுதல் ஒரு பிரச்சினையாகத் தொடர்கின்றது.
தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்றபோது, மக்கள் தங்கள் பிரச்சினைகளை ஒரு நிமிடத்தில் சுருங்கச் சொல்லுமாறு இணைத் தலைவர்களில் ஒருவரான மாவை சேனாதிராசா அடிக்கடி வலியுறுத்திக் கொண்டிருந்தார். ஆனால் அவர் உரையாற்றும் போது. 21 நிமிடங்களை எடுத்துக்கொண்டார்.
இணைத்தலைவர்களின் உரையை, மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த பின்னர் நடத்தலாம் என மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் அங்கஜன் இராமநாதன் தெரிவித்திருந்தார்.
எனினும் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல், ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இணைத்தலைமைகளின் உரையுடனேயே ஆரம்பிக்கின்றது.