- Saturday
- November 22nd, 2025
அரசியல் தீர்வு தொடர்பாக ஒருமித்து செயற்படுவோம். எல்லோருமாக சேர்ந்து மக்கள் விரும்புகின்ற தீர்வை அடைய தலைவர் சம்பந்தன் தலைமையில் உழைப்போம் என்று தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய...
காணாமல் போன சகலருக்கும் மரணச் சான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். காணாமல் போனவர்களுக்கான உரிமையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர், நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான நீதி விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து நிபுணர்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையானது 'உள்ளக விசாரணையாக' இருக்கும் என்றும் பி.பி.சிக்கு அளித்துள்ள பிரத்தியேக நேர்காணலில்...
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இணைப்புக்குழு கூட்டம் வியாழனன்று கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றபோது காணாமல் போனோரின் உறவினர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல் போனோரில் பெருமளவானோர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருந்தமையை கூட்டமைப்பு ஆட்சேபிக்கவில்லை என்று கூறியும், அதனைக் கண்டித்தும், காணாமல் போனோரை கண்டுபிடித்து தருமாறு கோரியும் இந்த ஆர்ப்பாட்டம்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளராக விளங்கிய காலஞ்சென்ற அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தனவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதி அஞ்சலி செலுத்தினார். கம்பஹா, பள்ளி வீதியில் அமைந்துள்ள காலஞ்சென்ற அமைச்சரின் இல்லத்துக்கு தனது பாரியார் ஜயந்தியுடன் சென்று இறுதி அஞ்சலியை ஜனாதிபதி செலுத்தினார். சம்பந்தன் இரங்கல் இதேவேளை, தேசிய அரசில் காணி அமைச்சராக செயற்பட்ட எம்.கே.ஏ.டி.எஸ்....
சட்டவிரோதமான முறையில் நியூஸிலாந்திற்குச் செல்ல முற்பட்ட இலங்கை அகதிகள் குழுவொன்று இந்தியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். படகு மூலம் நியூஸிலாந்துக்கு செல்ல முற்பட்ட 06 இலங்கை அகதிகள் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்திய அகதிகள் முகாமில் தங்கியுள்ள குறித்த அகதிகள் நியூஸிலாந்திற்குச் செல்ல தயாரான வேளை இந்திய பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில்...
ஒற்றையாட்சி எனும் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கிளிநொச்சியில் இன்று கூடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள்,...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த மாணவன் செந்தூரனின் சகோதரிக்கு, மடிக்கணினியும், பல்கலைக்கழக கல்வியைத் தொடர்வதற்காக ஆரம்பக்கட்ட நிதியுதவியும் இன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனால் மாணவியின் இல்லத்தில் வைத்து வழங்கப்பட்டது. குறித்த மாணவி சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே, அவரின் முயற்சியால் மடிக்கணினியும், பல்கலைக்கழக கல்வியைத்...
வடமாகாணத்தில் உபயோகிக்கப்படாமல் இருக்கும் காணிகளை கையேற்க வேண்டுமென்று அரசாங்கம் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழ். பொதுநூலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற 2016-2018 காலப்பகுதியில் தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் தன்னிறைவு காணும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்...
தென்மராட்சிப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராமஅலுவலர் பிரிவில் கடமையாற்றும் பெண் கிராமஅலுவலர், இன்று வியாழக்கிழமை (21) வாகனத்தில் கடத்தப்பட்ட நிலையில், கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் சில மணி நேரங்களில் பின்னர் அவர் மீட்கப்பட்டார். இக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, தனது சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில்...
ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள மீன்களுக்கான தடை நீக்குவதற்கு மற்றும் ஜீ.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்குவதற்கும் இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோப்வன் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் இடம்பெறுகின்ற உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பில் சுவீடன் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு இலங்கை...
இலங்கையில் தனியார் மற்றும் அரச வைத்தியசாலைகளில் வெளிநாட்டு பிரஜைகளுக்கு சிறுநீரக சத்திரசிகிச்சை செய்வது தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மஹிபால கூறினார். சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படுகின்ற சிறுநீரக கடத்தல் சம்பந்தமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள 06...
கூட்டமைப்பின் அலுவலகங்களை முற்றுகையிடும் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கத்தின் போராட்டத்துக்கு, தமது ஏகோபித்த ஆதரவை தெரிவித்து ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு’ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே மேலே குறிப்பிட்டுள்ளவாறு தெரிவித்துள்ளது. ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு’வின் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் உறவுகளுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளுக்காக நீதி கோரி வீதியில் இறங்கிப்போராடாமல் -...
வட மாகாண சுகாதார திணைக்களத்தின் கீழுள்ள 05 மாவட்ட வைத்தியசாலைகளின் சேவைக்கு 826 தாதியர்கள் தேவை காணப்படுகின்ற போதிலும், 692 பேர் மாத்திரமே பணியாற்றி வருவதாக மாகாண சுகாதார திணைக்களத்தின் புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. வட மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளின் சேவைக்கு 826 தாதியர்களுக்கான நியமனங்கள் அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது 692...
வடக்கு, கிழக்கில் போரினால் இடம்பெயர்ந்து தற்போது மீள்குடியேற்றப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களுக்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள 65,000 வீடுகள் அமைக்கும் திட்டம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டுள்ளன. அதாவது வீட்டின் அளவுத் திட்டம், வடிவமைப்பு, பயனாளிகள் தெரிவு, ஒரு வீட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக சமூக அமைப்புக்கள்...
சமூக இணையத்தளங்களை பயன்படுத்தி ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பரிமாற்றிக் கொள்ளும் குழு செயற்பாடு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக ரகசிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பேஸ்புக் வலைத்தளத்தை பயன்படுத்தி யுவதிகளாக முன்னிலையாகி இளைஞர்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் பெற்று கொள்ளப்படுகின்றன. பின்னர் காணொளி மற்றும் புகைப்படங்களை பெற்று கொண்டவர்களை அச்சுறுத்தி பணம் பெற்று கொள்ளும்...
ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலயத்தின் நாடு திரும்பல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், மேலும் 41 இலங்கை அகதிகள் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியுள்ளனர். தமிழகத்தின் சென்னை, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து இலங்கையை வந்தடைந்த இவர்களில் 15 ஆண்கள் மற்றும் 26 பெண்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது. இவர்கள் திருகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும்...
இலங்கை கணக்கீட்டு தொழில்நுட்பவியலாளர் கழகத்தின் பரீட்சையும் இலங்கை மத்திய வங்கியின் வங்கி உதவியாளர் பரீட்சையும் ஒரே தினத்தில் நடைபெறுவதால் பரீட்சாத்திகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இலங்கை கணக்கீட்டு தொழில்நுட்பவியலாளர் கழகத்தின் பரீட்சை எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. இந்நிலையில், 31 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் வங்கி உதவியாளர் பரீட்சையும்...
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முரணாக நடந்துகொள்ளப் பார்க்கிறேன் என எனக்கு எதிராக குற்ச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு அபத்தமான குற்றச்சாட்டு. தமிழ் மக்கள் பேரவை ஒரு போதும் அரசியல் கட்சியாக மாறாது - எந்த அரசியல் கட்சிக்கு எதிராகவும் செயற்படாது - இதன் ஒரே இலக்குத் தமிழ் மக்களின் உரிமைகள், நலன்களுக்காகக் குரல் கொடுப்பதும் அவற்றுக்காகப்...
Loading posts...
All posts loaded
No more posts



