சிறுமிகளுக்கு சீர்திருத்தப்பள்ளி வேண்டும்

யாழ். மாவட்டத்தில் சிறுமிகளுக்கான சீர்திருத்தப்பள்ளி இல்லாததன் காரணமாக, அவர்கள் வேறு சிறைக்கூடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். அவ்வாறு அனுப்பப்படும் சிறுமிகள் பெரும்பாலானோர் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுவதாக சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சின் யாழ். மாவட்ட ஆணையாளர் தெரிவித்தார். யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம், ஞாயிற்றுக்கிழமை (28) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் சிறுவர் மற்றும் பொண்கள் விவகாரம் தொடர்பில்...

சிறுமியை முத்தமிட்டவர் கைது

சுண்டுக்குழி பகுதி வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியொருவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில், 26 வயதுடைய இளைஞன் ஒருவரை பொலிஸார் கைதுசெய்த சம்பவமொன்று, திங்கட்கிழமை (29) இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (28) மாலை 6 மணியளவில், வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த மேற்படி சிறுமியை, வெளியில் அழைத்துச்சென்றுள்ள சந்தேகநபரான இளைஞன், அச்சிறுமியை கட்டிப்பிடித்து முத்தமிட்டுள்ளார்....
Ad Widget

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமணம்!!

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கவுள்ளதாக அச்சுவேலி இராஜமாணிக்கம் திருமண மண்ட நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். மார்ச் மாதம் 06ஆம் திகதி, வறுமைக்கோட்டுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, இலவசமாக தாலி, பட்டுப்புடவைகள், வேட்டிகள், வாழ்வதார உதவி மற்றும் வீட்டுத்தளபாடங்கள் என்பன திருமணத்தின்போது வழங்கி வைக்கப்படவுள்ளதுடன், திருமண செலவுகளையும் இராஜமாணிக்க திருமண...

 தமிழ் கைதிகள் 63பேர் உண்ணாவிரதம்

வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 63பேர், இன்று காலை முதல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கைதிகளே இவ்வாறு உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு எதிரான வழக்கை துரிதப்படுத்தி விடுதலைக்கு வழிசமைக்குமாறு வலியுறுத்தியே அவர்கள் இந்த போராட்டத்தை நடத்துகின்றனர். ஏற்கெனவே,...

வடக்கு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

வட மாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தின் ஏற்பாட்டில் இன்று ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயகத்திற்கு முன் ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்டம், யாழ் இந்திய துணைத் தூதரக அலுவலகம் வரை சென்றது. இருநாட்டு மீனவர்களும் சுமூகமான முறையில் தொழிலை செய்வதற்கு பேச்சு வார்த்தை ஏற்பாடு செய்யப்பட வேண்டும், இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்கள் 27...

பலாலி விமான நிலைய அபிவிருத்தி எமது மக்களுக்கோ கடற்றொழிலாளர்களுக்கோ பாதிப்பாக அமையக் கூடாது!- டக்ளஸ்

பலாலி விமான நிலைய அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில்,எமது மக்களுக்குச் சொந்தமான காணி, நிலங்களுக்கோ, கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களுக்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் இத் திட்டம் முன்னெடுக்கப்படுவது அவசியமாகுமென ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவாதனந்தா அவர்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், கடந்தகால ஆட்சியின்போது...

பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் ; யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலை உடனடியாகவே விடுவிக்கப்படவேண்டுமென யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. குறித்த பயிற்சிக் கலாசாலை தற்காலிகமாக இயங்குவதற்கு வேறு இடத்தில் இடஒழுங்குகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற தீர்மானமும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் யாழ்.மாவட்ட செயலக கேட்போர்...

சர்ச்சையில் மார்ஸ் சொக்லெட்: இலங்கையிலிருந்து மீளப்பெற தீர்மானம் : அதிர்ச்சியில் மக்கள்

இலங்கை உட்பட 55 நாடுகளில் விற்பனை செய்யப்பட்ட மாஸ் சொக்லெட்டுகளை மீளப்பெறுவதற்கு மார்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. அண்மைக்காலமாக மார்ஸ் சொக்லெட் தொடர்பில் நுகர்வோரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்தே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரபல சொக்கலேட் தயாரிப்பு நிறுவனமான மார்ஸ் தனது இலங்கை உள்ளிட்ட 55 நாடுகளுக்கு விற்பனை செய்த, மில்லியன் கணக்கான மாஸ் மற்றும்...

கிளிநொச்சியில் விடுபட்ட தொண்டர் ஆசிரியர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்!

கிளிநொச்சி வலய தொண்டர் ஆசிரியர் விபரம் வெளியாகியுள்ள நிலையில், விடுபட்டவர்களை உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளார்கள். கிளிநொச்சி கல்வி வலய நிரந்தர நியமனத்திற்கான தொண்டர் ஆசிரியர் பெயர்ப் பட்டியலில் விடுபட்டவர்களது பெயர் விபரங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 2ஆம் திகதி இடம்பெறவுள்ளது. குறித்த பதிவு நடவடிக்கை கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தில் காலை 9 மணி தொடக்கம்...

சமஷ்டி முறையிலான தீர்வுக்கு இந்தியா உதவவேண்டும்!

குறைபாடான 13ஆவது தீர்வுத் திட்டத்தினைப் பெற்றுத் தந்த இந்தியா எமக்கு குறைபாடு அற்ற ஓர் சமஸ்டித் தீர்வினையும் பெற்றுத் தரவேண்டும் என்ற கோரிக்கையினை வடமாகாண முதலமைச்சர் இந்தியாவை கோரியுள்ளார். தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார நாள் நிகழ்வு நேற்றைய தினம் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் கிறீன் கிறாஸ் விடுதியில் இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்து...

ஐ.நா அறிக்கையாளர் இரண்டு பேர் வருகின்றனர்

நீதிபதிகள் மற்றும் சட்டவுரைஞர்களின் சுயாதீனம் பற்றிய விசேட அறிக்கையாளர் மோனிக்கா பின்ரோவும் சித்திரவதை மற்றும் கீழ்த்தரமான தண்டனைகளுக்கான விசேட அறிக்கையாளரான யுவான் மென்டெஸூம் ஏப்ரல் 29ஆம் திகதி இலங்கை வரவுள்ளனர். இவர்கள், மே மாதம் 7ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளனர். நீதிபதிகள் மற்றும் சட்டவுரைஞர் சுயாதீனம் பற்றிய விசேட அறிக்கையாளர், நீதித் துறையின் பக்கச்சார்பின்மை மற்றும்...

பாடசாலையில் தஞ்சம் அடைந்த 65 இளைஞர், யுவதிகளை இராணுவம் பிடித்தது! ஒருவர்கூட வீடு திரும்பவில்லை!!

'யுத்தத்தால் இடம்பெயர்ந்து மண்கும்பான் தமிழ் மகா வித்தியாலயத்தில் தஞ்சமடைந்திருந்த குடும்பங்களில் இருந்து இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்ட 65 இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளில் ஒருவர் கூட இதுவரை வீடு திரும்பவில்லை' என இந்தச் சம்பவத்தில் தனது இரண்டு மகன்களை பறிகொடுத்த தந்தை ஒருவர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளித்தார். காணாமற்போனோர் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி...

மகஸின் சிறை கைதிகளின் போராட்டம் தொடர்கிறது! ஆதரவாக சக கைதிகள் உண்ணாவிரதம்!

நீண்டகாலமாக விசாரணைகளின்றி தடுத்துவைத்திருக்கும் தம்மை விடுதலைசெய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள கொழும்பு, மகஸின் சிறைச்சாலையின் 14 தமிழ் அரசியல் கைதிகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு சோர்வடைந்த நிலையிலும் இன்று ஏழாவது நாளாகவும் போராட்டத்தைத் தொடர்கின்றனர். இந்தக் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக மகஸின் சிறைச்சாலையிலுள்ள ஏனைய 75 தமிழ் அரசியல் கைதிகளும் இன்று திங்கட்கிழமை ஒரு நாள்...

தீவகத்தில் காணாமற்போனவர்கள் மண்டைதீவு கிணறுகளில் போடப்பட்டனர்!

யாழ்.தீவக பகுதிகளில் கடத்தப்பட்டவர்கள் கொலை செய்ப்பட்டு மண்டைதீவுப் பகுதியில் உள்ள 3 கிணறுகளில் போடப்பட்டிருக்கலாம். ஒரு கிணறு தோண்டப்பட்டபோது 85 மனித உடல் எச்சங்கள் மீட்கப்பட்டன மற்றைய கிணறுகளை தோண்டுவதற்கு அரசாங்கம் மறுத்துவிட்டது. அவற்றையும் தோண்டுங்கள் பல உன்மைகள் தெரியும். மேற்கண்டவாறு காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வேலுப்பிள்ளை பேரின்பநாயம் என்பவர்...

தீவகத்தில் பலர் காணாமல் போக கடற்படையும் ஈ.பி.டி.பியுமே காரணம்!

தீவகத்தில் பல இளைஞர், யுவதிகள் காணாமற் போனமைக்கு கடற்படையினரும் ஈ.பி.டிபியினருமே காரணம் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் காணாமற்போனோரின் உறவினர்கள் பலரும் ஆதாரங்களுடன் தமது சாட்சியங்களைப் பதிவு செய்தனர். காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் வேலணை பிரதேச செயலகத்தில் நேற்று நடந்தன. இதில் சாட்சியமளிப்பதற்காக 193 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு...

ஐநா 31ஆவது மனித உரிமை கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஐநா மனித உரிமை பேரவையின் 31ஆவது கூட்டத்தொடர் இன்று (29) ஆரம்பமாகிறது. எதிர்வரும் மார்ச் 24ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரை ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அல் ஹுசைன் ஆரம்பித்து வைப்பதுடன் உரையாற்றவுமுள்ளார். இவ்வுரையில் இலங்கை விஜயத்தின் போது பெற்ற அனுபவங்கள் தொடர்பிலும் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது....

யாழ் நகரில் பொலிசாருடன் இளைஞன் மோதல்!!

யாழ் நகரப் பகுதியில் இளைஞனுக்கும் பொலிசாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது அத்துடன் பொது இடத்தில் குறித்த இளைஞன் பொலிசாரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அத்துடன் வீதியால் சென்ற பலர் பார்வையிட்டுள்ளதுடன் பின்னர் குறித்த இளைஞரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றதாகவும் பொலிசார் குறிப்பிடுகின்றனர்…

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு! யாழ்.மாணவி தற்கொலை

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு காட்டியமையால், அதனை ஏற்க மறுத்த பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் நல்லூர் பகுதியில் இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் தரம் 11 ல் கல்வி கற்கும் நல்லூரைச் சேர்ந்த மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். நேற்று மாலையில் வீட்டில் யாரும் அற்ற நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை...

ஈழத்துப் பிரபல எழுத்தாளர் செங்கையாழியான் இயற்கை எய்தினார்

ஈழத்துப் பிரபல எழுத்தாளர் செங்கையாழியான் இயற்கை எய்தினார். ஈழத்து மூத்த எழுத்தாளரும், யாழ்.இந்துக் கல்லூரி பழைய மாணவனுமாகிய செங்கையாழியான் எனும் புனைபெயரால் அறியப்படும் கந்தையா குணராசா சுகவீனம் காரணமாக இயற்கை எய்தினார். இவர் பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளராவார்.   யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும்...

சிறுமி துஷ்பிரயோகம்: இருவர் கைது

வவுனியா, தரணிக்குளம் பகுதியில், வீட்டில் தனிமையில் இருந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய இருவரை சனிக்கிழமை (27) வவுனியா பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சிறுமியின் தாய் வேலைக்கென வெளிநாடொன்றுக்குச் சென்றுள்ளதாகவும் இவர்களது குடும்பத்தில் மொத்தம் 8 பிள்ளைகள் உள்ளதாகவும் தந்தை கூலி வேலை செய்பவர்; எனவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. சம்பவ தினம் சிறுமியின் தந்தை,...
Loading posts...

All posts loaded

No more posts