Ad Widget

யாழில் சுதந்திர தினம் அனுஷ்டிப்பு

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 68 ஆவது சுதந்திர தினத்தையொட்டி யாழ் மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றது.

jaffna-kachcheri-

மாவட்டத்தின் பிரதான சுதந்திரதின நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திரு என்.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது தேசியக்கொடியை அரசாங்க அதிபர் ஏற்றிவைக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டு சுதந்திரதினம் அனுஸ்டிக்கப்பட்டதுடன் தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு மரநடுகை நிகழ்வும் மாவட்டசெயலக வளாகத்தில் இடம்பெற்றது.

மேலதிக அரசாங்க அதிபர் அதிபர் செந்தில் நந்தனன் மற்றும் அரசாங்க அலுவலர்கள் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதேவேளை வடமாகாண ஆளுனர் செயலகத்தில் நடைபெற்ற 68 ஆவது சுதந்திர தின நிகழ்வில் ஆளுனரின் செயலாளர் இ.இளங்கோவன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.

தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு வடமாகாண ஆளுனர் அலுவலக உத்தியோகத்தர்களினால் விசேட சிரமதான நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றது.

Related Posts