Ad Widget

வடக்கு ஆளுநர் பளிஹக்கார பதவி விலகுகிறார்! புதியவர் றெஜினோல்ட் கூரே?

வடக்கு மாகாண ஆளுநர் எம்.எம்.ஜ.எஸ். பளிஹக்கார இந்த மாதத்துடன் பதவியிலிருந்து விலகுகிறார் என ஜனாதிபதிக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் ஆளுநர் ஜ.ஏ.சந்திரசிறி பதவி விலகினார். இதையடுத்து கடந்த வருடம் ஜனவரி 29 ஆம் திகதி பளிஹக்கார ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையிலேயே அவர் பதவியிலிருந்து விலகுகிறார் எனக் கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். இதேவேளை வடக்கின் புதிய ஆளுநராக றெஜினோல்ட் கூரே நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Posts