Ad Widget

சாவகச்சேரியில் 7 கிலோ கிராம் தங்க கட்டிகளுடன் பெண்ணொருவர் கைது

100 கிராம் நிறையுடைய 70 தங்க பிஸ்கட்களுடன் பெண்ணொருவர் இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தங்க கட்டிகளின் மொத்த நிறை 7 கிலோ கிராம் என்பதுடன் அவற்றின் பெறுமதி 39,340,000.00 ரூபாய் (சுமார் 4 கோடி) என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண் 50 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன், சாவகச்சேரி, சங்த்தாணை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து யாழ்ப்பாணம் விஷேட பொலிஸ் பிரிவினரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்க கட்டிகளை இன்று (02) அதிகாலை 4.00 மணியளவில் மாதவல் பகுதியில் இருந்து வேன் ஒன்றில் எடுத்துச் செல்லும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் விசாரணைகள் தொடர்வதாகவும், விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

Related Posts