Ad Widget

யாழில் ஏற்பட்ட திடீர் நில வெடிப்பு தொடர்பில் ஆய்வு! மக்கள் வெளியேற்றம்!!

யாழ். புத்தூர் மேற்கு நவக்கிரி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிலத்தில் உண்டான திடீர் விரிசல் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

navakkeree-puththoor-earth-1

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் உள்ள தேசிய கட்டங்கள் ஆராய்ச்சி அமைப்பினர் நேற்றய தினம் அப்பகுதியில் இவ் ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

புத்தூர் மேற்கு நவக்கிரி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நள்ளிரவு வேளை பாரிய சத்தத்துடன் நிலத்தில் திடீர் விரிசல் உண்டாகியிருந்தது. இந்நிலையில் குறித்த நில விரிசலுக்கு காரணம் நில அதிர்வு என மக்கள் மத்தியில் பேசப்பட்டுவந்தது.

இதேவேளை, புவியியல்துறை பேராசிரியர்கள் மேற்படி நில விரிசலுக்கு காரணம் நில அதிர்வு அல்ல. நிலத்தின் கீழ் உள்ள சுண்ணாம்பு பாறைகள் இடிந்துள்ளமையே என சுட்டிக்காட்டியிருந்தனர்.

மேலும் நிலாவரை கிணறு மற்றும் மானிப்பாய் கட்டுடை பகுதியில் உள்ள இடிகுண்டு போன்று இந்தப் பகுதியும் நிலத்திற்கு கீழ் செல்லும் அபாயம் உள்ளதாகவும் கூறியிருந்தனர்.

இதற்கிடையில் மேற்படி பகுதியில் உருவாகியிருந்த நில விரிசல் கடந்த சில தினங்களில் அதிகரித்ததுடன் சிறிய விரிசல்களாக இருந்தவை பெரிய விரிசல்களாக மாறியிருந்தமையும் அவதானிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றய தினம் மேற்படி பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றியுள்ளதுடன், தோட்டங்களுக்கு நீர் இறைப்பதையும் தடை செய்துள்ள அனர்த்த முகாமைத்துவ அமைச்சு குறித்த பகுதியை அனர்த்த பகுதியாக அறிவித்தது.

நேற்றய தினம் தேசிய கட்டங்கள் ஆராய்ச்சி அமைப்பின் நில உடைவு ஆராய்ச்சி மற்றும் அபாய முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார தலைமையிலான குழுவினர் மேற்படி பகுதியில் நவீன தொழிநுட்ப உபகரணங்களின் உதவியுடன் கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts