Ad Widget

உணவுகளில் சேர்க்கக் கூடிய சீனியின் அளவு தொடர்பில் புதிய கொள்கை!- ஜனாதிபதி

தயாரிக்கப்படும் உணவுகளில் சேர்க்கக் கூடிய சீனியின் அளவு தொடர்பில் தீர்மானிக்கும் ஒரு கொள்கையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களில் சுமார் நூற்றுக்கு 20 வீதமானவர்கள் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உணவு தயாரிப்பு வேலைத்திட்டம் குறித்து தனியார் வர்த்தகர்களின் பங்களிப்பை வெற்றுக் கொள்வது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Related Posts