- Wednesday
- April 29th, 2026
மது போதையில் மோட்டார் சைக்கிள் ஓடும் இளைஞர்களை, சாராயக் கடைகளுக்கு முன்னாலேயே மடக்கிப்பிடித்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸாருக்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். மதுபோதையில் வாகனம் செலுத்தும் குற்றச்செயல்கள், மற்றும் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் மதுபோதையில் வாகனம் செலுத்தும் குற்றங்கள் தொடர்பில் நீதிமன்றங்களில் வழக்குகள் அதிக அளவில் பதிவாகியிருப்பதைச்...
அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பில் வெற்றிப்பெற்றதாக கூறி வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புக்கள், குறுஞ்செய்திகளுக்கு பதில் அளித்தல் மற்றும் தொடர்பை ஏற்படுத்தல் என்பவற்றை தவிர்க்குமாறு தொலை தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. பொதுமக்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான போலி வெளிநாட்டு அழைப்புகள் தொடர்பில் நாட்டின் பல பாகங்களில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து, அந்த...
2016 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரி முதலாம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனை வழிகாட்டல்களை பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவங்கள் மற்றும் ஆலோசனை வழிகாட்டல்களை www.doenets.lk...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகன் யோசித்த ராஜபக்ஷவை பார்க்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு சென்றார். நேற்று பகல் அவர் அங்கு சென்றதாகவும் இவருடன் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரும் அங்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடுவது தொடர்பில், ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவர் வாசுதேவ நாணயக்கார எம்பி, தனது ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மஹிந்த அணி கூட்டாளியும், பிவிதுரு ஹெலஉறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில எம்பிக்கு எடுத்துக்கூறி, தொட்டதற்கெல்லாம் இனவாதம் பேசி, நாட்டை மீண்டும் இனத்துவேஷ குட்டையில் ஆழ்த்த முயல வேண்டாம்...
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரி 35 ரூபாயில் இருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் அரிசிக்கான வரி 15 ரூபாவால் உயர்வடைந்துள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக மாநாடு இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது. மேற்படி மாநாட்டில் இரண்டு விடயங்கள் தொடர்பில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் தௌிவு படுத்தப்பட்டது. முதலாவது யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இராணுவம் மேற்கொண்டதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் ஒரு சில விசாரணைகளை நாடத்தி சர்வதேச மட்டத்தில் இராணுவத்தின் நற்பெயரை...
தமிழ் மக்கள் பேரவை எந்தக்காலத்திலும் ஒரு அரசியல் கட்சியாக மாற்றம்பெறாது என வடமாகாணசபை உறுப்பினர்கள் சிலருக்கு உத்தரவாதம் வழங்கியதன் பின்னரே தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு திட்ட வரைபு மக்களுக்கு வெளியிடும் நிகழ்வில் கலந்துகொள்கிறேன். தமிழ் மக்கள் புத்திஜீவிகள் தமிழ் மக்கள் சார்பில் நடவடிக்கை எடுத்து மக்களுக்கு நன்மையளிக்கும் அரசியல் வழிமுறையை முன்வைப்பதனை பிழையான...
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடையத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் புதிய அரசியல் தீர்வு ஒன்று இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் க.வி. விக்கினேஸ்வரன் கலந்து கொண்டார். தமிழ் மக்கள் பேரவையின் தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை கண்டடைவது தொடர்பிலான...
நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித்த ராஜபக்ஷ மற்றும் சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் பேச்சாளருமான ரொஹான் வெலிவிட்ட, நிஷாந்த ரணதுங்க உட்பட்ட ஐவரையும் 14 நாட்கள் (எதிர்வரும் பெப்ரவரி 11ஆம் திகதிவரை) விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை...
தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர்குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைபை தமிழ்மக்கள் முன்னிலையில், சம்பிரதாய பூர்வமாக வெளியிடும் நிகழ்வு நாளை 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறும். தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும் வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வில், பெருந் தொகையான...
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயமாகவுள்ள மக்களின் காணிகள் நலன்புரி முகாம்களில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை அவர்களின் காணிகள் தொடர்பான விபரங்களை சேகரிக்க தனியான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்தார். இந்தக் குழு ஒரு வாரத்துக்குள் தரவுகளை சேகரித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைக்கப்படும் இதன் பின்னர் அவரது பணிப்புக்கு அமைய...
காணாமல் போனவர்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றுவருகின்றது. காணாமல் போனவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த காணமல் போனவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து இக் கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றனர் இக் கலந்துரையாடலில் காணாமல் போனவர்களின் உறவுகள் தமக்குள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் அரசியல் நெருக்கடிகள் மற்றும் யாழ்பாணத்தில் நடைபெற்ற பொங்கல் தின நிகழ்வில்...
வடமராட்சி பகுதி துன்னாலை வடக்கு பருத்திதுறை பொலிஸ் பிரிவில் மிகவும் பெரிய பாம்பு ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் காணி உரிமையாளன் தனது காணியை துப்பரவு செய்யும் போது 5 மீட்டர் நீளமான பாம்பு அகப்பட்டுள்ளது. அதனை கொல்வதற்கு நீண்ட நேரம் போராடியும் பலன் கிடைக்கவில்லை கடைசியாக அவ்வழியே சென்ற ஒருவரை...
ஐக்கிய அரபு ராஜ்சியத்தில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய இலங்கைப் பெண் ஒருவர், மற்றமொரு பணியாளரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டு பணிப் பெண்ணையே அவர் கொலைசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புஜாராஹ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமிரேட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வாக்குவாதத்தை அடுத்து, இரண்டு பேருக்கும் இடையிலான மோதலில் ஒருவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது....
யாழ்ப்பாணம், இராசாவின் தோட்டப்பகுதியில் உள்ள யுவதியொருவரின் வீட்டுக்குச் சென்று வெள்ளை வானில் கடத்துவோம் என்று அச்சுறுத்தல் விடுத்த மூவரை, நேற்று புதன்கிழமை (27) காலை கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். கைதான மூவரும், 28, 30 மற்றும் 36 வயதுடையவர்கள் என தெரிவித்த பொலிஸார், இவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பகுதியினைச் சேர்ந்தவர்கள் எனக்...
இலங்கையின் கொலைகளங்களிற்கு நாங்கள் திரும்பிச் சென்ற அதே காலப்பகுதியில் இரு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன என சனல்4 ஊடகம் தெரிவித்துள்ளது. முதலாவது இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகளில் சர்வதேச பங்களிப்பு எதுவும் காணப்படாது என ஜனாதிபதி அறிவித்திருந்தார். யுத்தத்திற்கு பின்னர் இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பப்பட்ட பல வீடியோக்கள் மூலம் யுத்தகுற்றங்கள் இடம்பெற்றது உறுதிசெய்யப்பட்டிருந்தது. இரண்டாவது காணமற்போனவர்கள்...
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் வெறும் மாயையாகும் என்று காணாமல் போனோர் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது காணாமல் போனோர் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட அமர்வுகள் எப்போது நடைபெறும்...
புதிய தரவுகள் சேகரிப்பு என்பது தமது மீள்குடியேற்றத்தை இழுத்தடிப்பு செய்வதற்கான நடவடிக்கை என வலி.வடக்கு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வலி.வடக்கின் மீள்குடியேற்றம் புதிய தரவுகள் சேகரிக்கும் ஆரம்ப கட்டத்துடன் நிற்பது தமக்கு மிகுந்த ஏமாற்றத்தினை தந்துள்ளதாக அந்தமக்கள் தெரிவிக்கின்றனர். வலி. வடக்கில் மக்களை மீளக்குடியேற்றும் செயற்றிட்டம் தொடர்பில் ஆராய்வதற்கான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட...
புத்தூர் பிரதேசத்தில் பெண் தலைமையிலான குடும்பம் ஒன்றுக்கு வடமாகாண முதலமைச்சர் நிதியத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடு நேற்று புதன்கிழமை கையளிக்கப்பட்டது. முதலமைச்சர் நிதியத்தினால் செய்துகொடுக்கப்படும் இரண்டாவது இல்லம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் கீழ் 6 இலடசம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இல்லத்தை வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புத்தூர் பிரதேசத்திற்கு நேற்று மாலை 5 மணியளவில் விஜயம்...
Loading posts...
All posts loaded
No more posts
