- Thursday
- August 6th, 2026
சி.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடந்ததாக கூறப்படும் நிதிமோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச உள்ளிட்ட நால்வரின் பிணை மனுக்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி பரிசீலிக்கப்படவுள்ளதாக கொழும்பு உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. சி.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடந்ததாக கூறப்படும் நிதிமோசடி தொடர்பில் பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவினால்...
வேலையில்லா பட்டதாரிகளின் சங்கத்தினர் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இன்று புதன்கிழமை முதல் கொழும்பு - புறக்கோட்டையில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தமக்கான வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக நல்லாட்சி அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும் அதனை நிறைவேற்றவில்லையென தெரிவித்து இவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டை புகையிரத நிலையத்திற்கு...
சாவகச்சேரி நீதிமன்றத்தில் சான்று பொருட்கள் வைக்கும் களஞ்சிய அறையில் இருந்த அலைபேசியொன்று இன்று புதன்கிழமை (17) காலை வெடித்ததில் அறையினுள் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் அருகிலிருந்த சான்றுப் பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்கள் தீயில் எரிந்து நாசமடைந்துள்ளன. அலைபேசியின் மின்கலம் வெடித்து தீ பற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, விரைந்து...
கிராம அலுவலர் தரம் 3இல் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள், உள்நாட்டலுவல்கள் அமைச்சால் கோரப்பட்டுள்ளது. 21 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரிகள் க.பொ.த சாதாரண தரத்தில் 4 திறமைச் சித்திகளுடன் 6 சித்திகளும் க.பொ.த உயர்தரத்தில் 3 பாடங்களில் சித்தியும் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதிக்கு முன்னர்...
இலங்கை தமிழ்- சிங்கள இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு திட்டமே தீர்வாக அமையும், அவ்வாறான தீர்வு முன்வைக்காவிட்டால் தமிழர்கள் தனிநாட்டை கோருவதை தவிர வேறு வழி இருக்காது என அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான பொதுமக்கள் கருத்துக்களை அறியும் குழு முன்னிலையில் மக்கள் கூறியுள்ளனர். அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளும். குழு...
கையடக்கத் தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன்படி, சில தொலைபேசி இணைப்பு நிறுவனங்கள் செக்கனுக்கு 0.03 சத அதிகரிப்புடன் நிமிடத்துக்கு 1 ரூபா 80 சதமாகவும்,சில தொலைபேசி இணைப்பு நிறுவனங்கள் ஒரு நிமிடத்துக்கான கட்டணத்தை 1 ரூபா 50 சதமாகவும் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்புடன் ஒரு தொலைபேசி பாவனையாளர் பல்வேறு வரிகளுடன் சேர்த்து 1 ரூபா 94...
அம்பாறை மாவட்டத்திலுள்ள சிங்களப் பகுதிகளான பொலனறுவை, சேருவா, மினிப்பே, மஹியங்கனை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஒரு மாகாணத்தை உருவாக்குதன் மூலம், கிழக்கு மாகாணத்தை தமிழ், முஸ்லிம் மக்களுக்கான மாகாணமாக மாற்றி வடக்கையும் கிழக்கையும் இணைந்த அலகை உருவாக்க முடியும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார். இலங்கை அரசியலமைப்பில் மறுசீரமைப்பு...
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழர்கள் இருவரும், அரச தரப்பு சாட்சிகளாக மாறிவிட்டனர். காணாமல்போன சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட தமிழர்கள் இருவரே, இவ்வாறு அரச தரப்பு சாட்சிகளாக மாறிவிட்டனர். அவ்விருவரும், ஹோமாக நீதிமன்ற நீதவான ரங்க திஸாநாயக்கவின் முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை...
தன்னைக் கைது செய்வதற்கான ஆபத்து இருப்பதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக, ஏனைய வழக்குகளுக்கு இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரியும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி சனத் விஜயவர்தனவின் ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த அடிப்படை உரிமைமீறல் மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,...
வேலையில்லாப் பட்டாதாரிகள் கொழும்பில் நேற்று முன்னெடுத்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரால் கண்ணீர்ப்புகைப் பிரயோகமும், தண்ணீர்ப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதும் பொலிஸார் கடும் தாக்குதல் நடத்தினர். இதனால் பெரும் பதற்றநிலை ஏற்பட்டது. தமக்கான வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக நல்லாட்சி அரசு அளித்திருந்த உறுதிமொழி இன்றுவரை நிறைவேற்றவில்லை. எனவே, தங்களது வேலைவாய்ப்பு உடன்...
உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கும் நடேஸ்வரக் கல்லூரியை விடுவித்து மீண்டும் இயங்க வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் பாடசாலைக்கு அண்மையாக இருக்கும் பகுதிகளும் விடுவிக்கப்படவுள்ளன என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது வெளிநாட்டு சுற்றுப் பயணம் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார். இதன்போது அவர் 25 வருடங்களின் பின்னர்...
யாழ்ப்பாணத்தில் ரயில் கடவையில் வாயில் மூடியிருந்த போது, பயணித்த மூவருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் ஊடாக ஒரு வருட காலத்துக்கு இவ்வாறு அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வாயில் மூடியிருக்கும் போது, ரயில் கடவைகளில் பயணிக்க முற்படுபவர்களை கைதுசெய்ய ரயில்வே திணைக்களத்தால் விஷேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த...
வடக்கு மக்களின் மனங்களை வெல்வதே தனது எதிர்பார்ப்பு என, அம் மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர் மல்வத்துபீட அஸ்கிரிய மகாநாயக்கரை சந்தித்து பின், ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமைதி மற்றும் நல்லிணக்க தகவலை வடக்கு மக்களுக்கு கொண்டு செல்ல தான் தகுதியானவன்...
இலங்கையின் பல பகுதிகள் இன்னும் கடுமையான ஏழ்மை நிலையில் உள்ளன என்று உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.அதேவேளை இலங்கையில் போதிய அளவுக்கு முன்னேற்றம் காண கூடுதல் வாய்ப்புகளும் உள்ளன எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தெற்காசியாவின் மற்ற நாடுகளைக் காட்டிலும் இலங்கையில் நம்பகத்தன்மையுடன் கூடிய அடிப்படை கட்டமைப்பு வசதிகளும், வலுள்ள மனித வளமும் உள்ளன எனவும்...
வயோதிப தாய் ஒருவரை நிர்வாணமாக அடைத்து வைத்திருந்த பெண் ஒருவரை கண்டி உடதும்பறை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். உடதும்பறை, உடதென்ன பகுதியில், 87 வயதுடைய வயோதிப பெண்ணை அவருடைய மகளான 51 வயதுடைய பெண், உணவு கொடுகாமல் நிர்வாணமாக சிறிய ஒரு இடத்தில் அடைத்து வைத்திருந்துள்ளார். உடதும்பறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றினையடுத்தே பொலிஸார்...
மாதம் ஒருமுறை சிந்தித்து, வட மாகாண விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் தீர்மானித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை, அலரி மாளிகையில் இவ்விருவரும் சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
ஜேர்மனி நாட்டில் இருந்து யாழிற்கு சுற்றுலா விசாவில் வருகை தந்த முதியவர்கள் இருவர் மதுபோதையில் 10 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்த வேளையில், சிறுமி அழுதுகொண்டு வீட்டை விட்டு தப்பியோடி வெளியே வந்த சம்பவம் யாழில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் குளப்பிட்டி பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....
காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி மேலும் மூன்று மாதங்களுக்கு, குறித்த ஆணைக்குழுவுக்கு செயற்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அதன் செயலாளர் எச்.டப்ளியூ.குணதாஸ குறிப்பிட்டுள்ளார். காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலஎல்லை இம் மாதம் 15ம் திகதியுடன் (நேற்றுடன்) நிறைவடைகின்றது. இந்தநிலையில் இதன்...
Project Loon என அழைக்கப்படும் அதிவேக இன்ரநெட் வழங்கும் கூகிள் பலூன் Google’s balloon ஒன்று நேற்றைய தினம் அமெரிக்காவினால் வான்வெளியில் செலுத்தப்பட்டு இலங்கைக்கு வந்துள்ளது. இதையடுத்து நேற்றைய தினம் பரிசோதனைகள் மேற்சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் மேலும் மூன்று பலூன்கள் சில வாரங்களில் இலங்கையை நோக்கி வரும் எனவும் ICTA (nformation and Communication Technology Agency...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் கொள்கைக்கு அமைவாக கிராம அலுவலர் சேவையின் வினைதிறனை விரிவுபடுத்துமுகமாக நாடு பூராக சேவையற்றும் கிராம அலுவலர்கள் சமாதான நீதவானாக நீதி அமைச்சினால் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர். பிரதேச செயலர் பிரிவு ரீதியாக இதற்கான தகவல்கள் திரட்டப்படுவதாக தெரியவருகின்றது. கிராம அலுவலர்களின் பெயர் விவரம், கடமைப்பிரிவு, நியமனக்காலம், சேவைக்காலம், பதவியை உறுதிப்படுத்தல், ஒழுக்காற்று, நடவடிக்கைகள்...
Loading posts...
All posts loaded
No more posts
