மைத்திரி, சம்பந்தன், சந்திரிகாவுடன் நோர்வே வெளிவிவகார அமைச்சர் இன்று முக்கிய பேச்சு!

நோர்வே - இலங்கை இடையே மீண்டும் அரசியல் உறவுகளை மீளப்புதுப்பித்துக்கொள்ளும் நோக்குடன் நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரெண்ட் ஒருநாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று கொழும்பு வருகின்றார். 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல்தடவையாகும். இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித்...

வெள்ளைக்கொடி ஏந்திவந்த புலிகள் இரு தடவைகள் படையினரை தாக்கினராம்! இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லையாம்!!

இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும், வெள்ளைக்கொடி ஏந்திவந்து இரண்டு தடவைகள் படையினர் மீது புலிகள் தாக்குதல் நடத்தினர் என்றும் அரச பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அக்கட்சியின் பொருளாளரான சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி....
Ad Widget

பரராஜசிங்கம் படுகொலை: பிள்ளையானுடன் இணைந்து செயற்பட்ட இராணுவ சார்ஜன்ட் கைது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் இராணுவ சார்ஜன்ட் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இராணுவ சார்ஜன்ட்டே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த இராணுவ சார்ஜன்ட் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுடன் இணைந்து செயற்பட்டார் எனவும், பின்னர் இராணுவத்தில் இணைந்துகொண்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. முஸ்லிம் இனத்தைச்...

ஆவர்த்தன அட்டவணையில் புதிதாக நான்கு இரசாயன மூலகங்கள்

ஆவர்த்தன அட்டவணையில் புதிதாக நான்கு இரசாயன மூலகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்த அட்டவணையின் ஏழாவது வரிசை பூர்த்தியாகி இருப்பதோடு உலகெங்குமுள்ள அறிவியல் பாடப்புத்தகங்கள் புதுப்பிக்கப்பட வேண்டி ஏற்பட்டுள்ளது. இந்த மூலகங்கள் ஜப்பான், ரஷ்யா மற்றும் அமெரிக்க நாட்டு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2011 ஆம் ஆண்டு 114 மற்றும் 116 மூலகங்கள் இணைக்கப்பட்ட பின்னர் ஆவர்த்தன...

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தை, கண்காட்சி

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தை, கண்காட்சி எதிர்வரும் 29ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை யாழ் மாநகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவை ஏற்பாட்டில் ஏழாவது தடவையாக நடைபெறும் இக்கண்காட்சியில் வடமாகாணத்தின் கிளிநொச்சி, வவுனியா, முல்லைதீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் நடத்தப்படுகிறது. இக்கண்காட்சியில், உள்நாட்டு, வௌிநாட்டு நிறுவனங்கள் பல...

ஆண்களே அதிகளவில் தற்கொலை!!

2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் இடம்பெற்ற கொலைகள், பெண்கள் துஷ்பிரயோகம், தற்கொலைகள் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பான விரிவான அறிக்கை, இன்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவால், வௌியிடப்பட்டது. பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, கொலைகள் 2014ம் ஆண்டு - 548...

பொங்கலுக்கு முன் விடுதலை செய்யவும்! பேரறிவாளன் தாயார் மனு

பொங்கலுக்கு முன்னதாக தனது மகனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், தமிழக முதல்வர் அலுவலகத்தின் தனிப்பிரிவில் மனு அளித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்டோருக்கு தூக்குத்...

வடக்கு கிழக்கில் 65,000 வீடுகள் கட்ட அரசு திட்டம்

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் கட்டமாக 65,000 வீடுகளை கட்டும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது என அரசு அறிவித்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகளின் தேவை என்பது இதைவிட இருமடங்கு அதிகமாக இருந்தாலும் முதல் கட்டமாக இதை முன்னெடுக்க அரசு தீர்மானித்துள்ளது என மீள்குடியேற்றத்துறை துணை அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார். அந்தப்...

2015 இல் 99.93% நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது வடமாகாணசபை போக்குவரத்து மற்றும் மீன்பிடித்துறை கிராமிய அமைச்சு அறிவிப்பு !

கடந்த 2015ம் ஆண்டு எனது அமைச்சுக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை (PSDG) மற்றும் பிரமாண அடிப்படையிலான நன்கொடை (CBG) மூலமாக 310.82 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றன. அதனடிப்படையில் கடந்த வருடம் ஏறத்தாழ 115 திட்டங்கள் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டு; 31.12.2015 வரை அமைச்சு மற்றும் திணைக்களங்கள் ஊடாக செலவு செய்யப்பட்ட மொத்த நிதி 310.61 மில்லியன்...

வெள்ளைவான்,சித்திரவதை கலாசாரம் தொடர்கின்றது – யஷ்மின் சூகா தகவல்

ஸ்ரீலங்காவில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடமாகின்ற போதிலும் ஸ்ரீலங்கா பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் தொடர்பான ஆதாரங்கள் வெளிவந்தவண்ணம் இருப்பதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் தெரிவித்துள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தினால் நாளை வியாழக்கிழமை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கவலையளிக்கும்...

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

வட மாகாண சுகாதார திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் குடும்ப நல சுகாதார சேவைகள் உத்தியோகத்தர்கள், தங்களுக்கான இடமாற்றங்களை நியாயமான முறையில் வழங்குமாறு கோரி வட மாகாண சுகாதார திணைக்களத்தின் முன்பாக புதன்கிழமை (06) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். 5 வருடங்களுக்கு மேல் பணியாற்றும் மேற்பார்வை குடும்ப நலன் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்காதது ஏன்? திணைக்களத்துக்கு அனுப்பப்பட்ட...

வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சியொன்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேணையொன்றை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக, நம்பத்தகுந்த தகவல்கள் மூலம் அறிந்து கொண்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் புதன்கிழமை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கோதுமை மாவின் விலையை அதிகரித்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு

நுகர்வோர் அதிகாரசபையின் உரிய அனுமதி இன்றி கோதுமை மாவின் விலையை அதிகரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் அதிகார சபையால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. கோதுமை மாவை இறக்குமதி செய்து விநியோகிக்கும் நிறுவனங்கள் விலையை அதிகரிக்க உரிய அனுமதி வழங்கப்படவில்லை...

தமிழ் மக்கள் பேரவைக்கு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயரரும் ஆசி

வடக்கு கிழக்கு மக்கள் இணைந்து உருவாக்கிய தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு காலத்தின் தேவையாகும். இந்த அமைப்பிற்கு எனது ஆசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் மேதகு யோசப் பொன்னையா ஆண்டகை தெரிவித்தார். இன்றைய தினம் (06.01.2016) தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக்குழுவின் சார்பில் பேரவையின் இணைத்தலைவர் த.வசந்தராஜா,...

பஷில் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில் திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி குறித்து வாக்குமூலம் அளிக்கவே அவர் அழைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

8 மீனவர்களை விடுவித்தது முல்லைத்தீவு நீதிமன்றம்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறப்படும் எட்டு இந்திய மீனவர்கள் முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவினை அடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு கடற்பரப்பில் கரையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த, இலங்கை மீனவர் ஒருவரின் படகை, கூட்டமாக அந்தப் பகுதிக்குள் வந்த இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளில் ஒன்று மோதியுள்ளது. இதனால் இலங்கை...

தமிழ் படைப்பாளிகள் கவனத்திற்கு

தமிழ் நாடு பெரம்பலூாில் ஒவ்வொரு ஆண்டும் புத்தகத்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 2016ம் ஆண்டுக்கான புத்தகத்திருவிழா ஜனவரி 29 ம் தேதி தொடங்கி பிப்ரவாி 7 ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சிறப்பம்சமாக வெளிநாட்டுவாழ் தமிழா்களின் புத்தகங்களை வைத்து விற்பதற்கான தனி அரங்கு அமைக்கப்பட உள்ளது. இந்த அரங்கில். வெளிநாட்டில் வாழும் தமிழ்...

விசேட அதிரடிப் படையினருக்கு நாவற்குழியில் 5 ஏக்கர் காணி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புக்கு அமைய விசேட அதிரடிப் படையினருக்கு நாவற்குழியில் 5 ஏக்கர் காணி தேசிய வீடமைப்பு அதிகார சபையினரால் வழங்கப்பட்டுள்ளது. நாவற்குழி 300 வீட்டுத்திட்டக் குடியிருப்புக்கு அருகில், கட லேரியை அண்டிய பகுதியில் விசேட அதிரடிப் படையினருக்கான முகாம் அமைக்கும் பணிகள் சில நாள்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பாக தேசிய...

வீமன்காமம் வதைமுகாம் தடயங்கள் அழிப்பு

இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட வலி.வடக்கு வீமன்காமம் பகுதியில் இராணுவத்தினரின் வதைமுகாம்களாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட வீடுகளில் இருந்த தடயங்கள் அனைத்தும் இராணுவத்தினரால் அழிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதி கடந்த 25 வருடகாலமாக இராணுவத்தினரின் அதி உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து, கடந்த 29ம் திகதி முதல் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அதனை அடுத்து அப்பகுதிக்கு மக்கள்...

சிவா பசுபதி விவகாரம் : வெளியான செய்திகள் விஷமத்தனமானவை!

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டம் தயாரிக்கும் உப குழுவில் சிவா பசுபதியை பங்கெடுக்குமாறு விடுத்த அழைப்பு தொடர்பாகவும், அதனை அவர் நிராகரித்தது தொடர்பாகவும், வெளியான செய்திகள் விஷமத்தனமானவை என்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்ட யோசனைகளைத் தயாரிக்கும் உபகுழுவில் பங்கெடுக்குமாறு விடுத்த அழைப்பை சிவா பசுபதி நிராகரித்துவிட்டார் என்று இந்திய...
Loading posts...

All posts loaded

No more posts