Ad Widget

பருத்தித்துறை – திருகோணமலைக்கு மேலும் இரு புதிய பஸ் சேவைகள்!

பருத்தித்துறையிலிருந்து திருகோணமலைக்கு மேலும் இரு புதிய பஸ் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பருத்தித்துறை இ.போ.ச சாலை முகாமையாளர் கே.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தினமும் காலை 4.30 மணிக்கு பருத்தித்துறையிலிருந்து திருகோணமலைக்கு ஒரு பஸ் சேவை நடைபெற்று வருகின்றது. இதனைவிட இனிமேல் காலை 7.45 மணிக்கும், பிற்பகல் 3 மணிக்கும் பருத்தித்துறையில் இருந்து திருகோணமலைக்கு புதிய சேவைகள் இடம்பெறவுள்ளன.

பருத்தித்துறை திருகோணமலைக்கான சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகள் திருகோணமலையிலிருந்து தினமும் காலை 8 மணி, நண்பகல் 12 மணி, பிற்பகல் 4.30 மணிக்கு பருத்தித்துறை நோக்கி புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts