குடும்பங்களைச் சீரழித்து விட்டார் மஹிந்த! : விவாகரத்து அதிகரிப்புக்கு அவரே காரணம்

நாட்டில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்திருப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவே காரணம் என அமைச்சர் தயா கமகே குற்றஞ்சாட்டினார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் தயா கமகே இதனைக் குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதாரத்தின் போக்குக் காரணமாக குடும்ப பொருளாதாரம் பாதிக்கப்பட்டமையால் பல குடும்பங்கள் சீரழிந்திருக்கின்றன. இதனால் பலர்...

ஜனாதிபதி, பிரதமரைச் சந்திக்க வாய்ப்பளியுங்கள் : கைதிகளின் பெற்றோர் முதலமைச்சருக்குக் கடிதம்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரையும் சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்குமாறு தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பான கோரிக்கை அடங்கிய கடிதமொன்றையும் தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் மன்னார் பிரஜைகள் குழு ஊடாக இன்று புதன்கிழமை...
Ad Widget

வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்துக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு

வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்துக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (05) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இலுப்பையடி, வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணான கந்தையா யோகரத்தினம் என்பவரே யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள வட மாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழு கிளை காரியாலயத்தில் இம்முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். தனிமையில் வசித்து வரும் குறித்த மூதாட்டியின்...

தமிழ் இராணுவச் சிப்பாய் மீது தாக்குதல்

கைதடி, கோப்பாய் வீதியில் அமைந்துள்ள பாலத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (05) இரவு 8.30 மணியளவில், இராணுவச் சிப்பாய் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். காங்கேசன்துறை படை முகாமில் கடமையாற்றும், மறவன்புலத்தைச் சேர்ந்த சிவராசா சிவதாஸ் (வயது 30) என்பவர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இத்தாக்குதலில் காயமடைந்த...

ஊடகவியலாளருக்கு கொலைமிரட்டல்! துவாரகேஸ்வரன் மீது முறைப்பாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் வர்த்தகருமான தி.துவாரகேஸ்வரன், தன்னைக் கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தல் விடுத்ததாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் திங்கட்கிழமை (04) யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அலைபேசியின் தன்னை தொடர்புகொண்ட துவாரகேஸ்வரன், கழுத்தை வெட்டிக் கொலை செய்வேன் என்றும், வீடு புகுந்து தூக்குவேன் எனவும் தன்னை மிரட்டியதாக ஊடகவியலாளர்...

மாணவர்களுக்கு பாதணிகளும் வழங்கப்படும்

பின்தங்கிய பாடசாலைகளில் கல்விபயிலும் மாணவர்களுக்கு, பாதணிகளை வழங்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். அடுத்த 5 வருடங்களுக்குள், கல்வித் திட்டங்களில் மாற்றஞ்செய்யப்படும். அத்துடன், ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும், இரு பாடசாலைகள் வீதம், சகல வசதிகளுடனும் கூடிய பிரசித்த பாடசாலை போன்று அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்....

ரவிராஜ் படுகொலையுடன் கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்குத் தொடர்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலையுடன் கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்கு தொடர்பு உண்டு எனத் தெரியவந்துள்ளது.அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ள வழக்கின் சந்தேக நபர் ஒருவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். சம்பத் ப்ரித்விராஜ் என்ற நபரே இவ்வாறு தகவல்களை வெளியிட்டுள்ளார். ரவிராஜ் படுகொலைச் சம்பவத்தை கடற்படைப் புலனாய்வுப் பிரிவினர் திட்டமிட்டதாகவும்,...

விக்னேஸ்வரனை அவதானிக்கிறேன்! அவரின் செயல்களை ஏற்க முடியாது என்கிறார் சம்பந்தன்!!

"வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அவற்றை மிகவும் கவனமாக அவதானித்து வருகின்றேன்."- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். "மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் கொள்கைகளுடன் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தன்னை இணைத்து வருகின்றார்" என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள...

மன்னார் ஆயர் ! சுரேஸ் சந்திப்பு

மன்னர் மறை மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசெப் ஆண்டகையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரனுக்கும் இடையிலான சந்திதிப்பு ஒன்று இடம்பெற்றது. மன்னார் ஆயர் இல்லத்தில் நேற்று செவ்வாய்க்கழமை காலை 09.30 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் தமிழ் மக்கள் பேரவையின் தோற்றம், அதன் செயற்பாடுகள் குறித்து...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தமிழ் மக்கள் பேரவையுடனும் ஈ.பி.ஆர்.எல்.எவ். இணைந்து செயற்படும்

தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக கிராமங்கள் தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான வரைபை மக்களிடம் கையளித்து அவர்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டில் முழுப்பங்களித்தல் உட்பட முக்கியமான மூன்று தீர்மானங்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்)...

பொலிஸாரின் அசண்டையீனத்தால் 4 நாள்கள் வைத்தியசாலையில் காத்திருந்த சடலம்!

முல்லைத்தீவுப் பொலிஸாரின் அசண்டையீனத்தால் மூன்று பிள்ளைகளின் தாயான முன்னாள் போராளியின் சடலம் கடந்த நான்கு நாள்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் காத்திருக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. கடந்த 2ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு தீயில் எரிந்து ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு...

உலக சுற்றுலா சஞ்சிகையில் நமது நாட்டுக்கு முக்கியத்துவம்!

உலகின் புகழ் பெற்ற சுற்றுலா இதழான லோன்லி பிளானட் சஞ்சிகை (Lonely Planet Magazine's Dream Trips 2016) வௌியிட்டுள்ள முதல் பத்து சுற்றுலாத் தளங்களில் இலங்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலா தொடர்பான ஆலோசனை புத்தகங்களை, “லோன்லி பிளானட்“ நிறுவனம் வெளியிட்டு வருகிறது. உலகளவில் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலா தளங்கள் குறித்த...

323 பந்துகளில் 1009 ஓட்டங்கள் – கிரிக்கெட் உலகின் புதிய சாதனை

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 4 இலக்க ஓட்டங்களாக 1009 ஓட்டங்களை 323 பந்துகளில் பெற்று மாணவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். இந்தியாவில் பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் மும்பை மாணவர் பிரணவ் தனவாதே இந்த இலக்கை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 10-ம் வகுப்பில் படிக்கும், 15 வயது மாணவரான பிரணவ், கே.சி.காந்தி மேனிலைப் பள்ளி மாணவர்...

கோதுமை மாவை அதிக விலைக்கு விற்றால் சட்ட நடவடிக்கை

பேக்கரி உற்பத்திகளுக்கான விலை அதிகரிப்பு தொடர்பில் இவ் வாரத்துக்குள் தீர்மானிக்கவுள்ளதாக, அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் சில வரித் திருத்தங்கள் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக, அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்த்தன கூறியுள்ளார். தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி எனப்படும் என்.டீ.டி வரி ஜனவரி மாதம்...

8ம் திகதி வைபவத்தில் மகாத்மா காந்தியின் பேரன்

கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, இலங்கை ஜனநாயகத் தேசியக் குடியரசின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருடங்கள் பூர்த்தியடையவுள்ளது. இது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வைபவம் எதிர்வரும் 8ம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதே மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இதன்போது, மகாத்மா காந்தியின் பேரன்...

இலங்கையில் H.I.V நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த வருடத்தில் H.I.V நோயாளர்கள் 225 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். 2014 ஆம் ஆண்டைவிட 2015 ஆம் ஆண்டு இந் நோயாளர்கள், அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவின் இயக்குனர், மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். இதில் 27 கர்ப்பினி பெண்கள் உள்ளடங்குகின்றனர். 15 வயது முதல் 23 வயதான இளைஞர்களிடம் எயிட்ஸ் நோய்...

பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகம் அபிவிருத்தி

வடமராட்சி, பருத்தித்துறை மீன்பிடித்துறைமுகம், கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சின் நிதியுதவியில் இவ்வருடம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. அபிவிருத்தி பணிகள் மேற்கொள்வது குறித்து சாத்திய வள ஆய்வுகள் மேற்கொள்வது தொடர்பிலான கலந்துரையாடல் யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தலைமையில் திங்கட்கிழமை (04) மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில், நீரியல் வள அமைச்சின் அதிகாரிகள், அதன் கீழ் இயங்கும் துறைமுக...

பாகிஸ்தான் – இலங்கைக்கு இடையில் 8 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளன. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் நேற்று மாலை இலங்கையை வந்தடைந்தார். அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்படி இரு நாடுகளுக்கு இடையிலும் கலாசார மேம்பாடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு...

போதைவஸ்தின் மூலம் சமூகப் பிரச்சினை தோற்றுவிக்கப்படுகின்றது

கஞ்சா, மதுபானம் மற்றும் இதர போதைவஸ்துக்களை பாவித்து சிறு பிரச்சினைகளை ஏற்படுத்திப் பின்னர் அதனை சமூகப் பிரச்சினையாக மாற்ற சிலர் முயற்சிக்கின்றனர் என யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எவ்.யூ.வூட்லர் தெரிவித்தார். யாழ்ப்பாணம், பொம்மைவெளிப் பகுதியில் கடந்த 2ஆம், 3ஆம் திகதிகளில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்று அப்பகுதியில் பதற்ற நிலைதோன்றியது. இதனையடுத்து, பொலிஸாரின்...

டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சுப் பதவி!

பொங்கலுக்குப் பின்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படக்கூடும் என்று, தகவல்கள் கசிந்துள்ளன. அதன்போது, தற்போதிருக்கின்ற அமைச்சர்கள் பலரின் அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படும் என்று அறியமுடிகின்றது. அதற்கு அப்பால், நாடாளுமன்றத்தில் எதிரணியில் இருந்துகொண்டு, 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கும் இரண்டு அமைச்சுகள் கிடைக்கவிருக்கின்றன...
Loading posts...

All posts loaded

No more posts