Ad Widget

கத்தி முனையில் கொள்ளை

தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னாலை சுப்பிரமணியம் முருகன் கோயில் அருகில் உள்ள வீட்டுக்குள் சனிக்கிழமை (16) இரவு நுழைந்த 7 பேர் கொண்ட கொள்ளை கும்பல், வீட்டில் உள்ள அனைவரையும் கத்தி முனையில் அச்சுறுத்தி 5 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள் வீட்டு கதவை உடைத்து உள்நுழைந்துள்ளனர்.

இதன்போது,வீட்டில் உள்ளவர்கள் சத்தம் போடவே, கத்தியை கழுத்தில் வைத்து அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை குற்றத்தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts