Ad Widget

அத்துமீறிய இந்திய மீனவர்கள் மூவர் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் 3 இந்திய மீனவர்களை காங்கேசன்துறை கடற்படையினர் கைதுசெய்து ஒப்படைத்துள்ளதாக யாழ்.மாவட்ட கற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை உதவிப் பணிப்பாளர் பா.ரமேஸ்கண்ணா இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இந்திய புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினம் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்கள் ஒரு படகில் நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று சனிக்கிழமை இரவு அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட போதே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 3 மீனவர்களையும் ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை உதவிப்பணிப்பாளர் மேலும் கூறினார்.

Related Posts