யாழில் மூவருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து

யாழ்ப்பாணத்தில் ரயில் கடவையில் வாயில் மூடியிருந்த போது, பயணித்த மூவருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் ஊடாக ஒரு வருட காலத்துக்கு இவ்வாறு அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வாயில் மூடியிருக்கும் போது, ரயில் கடவைகளில் பயணிக்க முற்படுபவர்களை கைதுசெய்ய ரயில்வே திணைக்களத்தால் விஷேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த...

வடக்கு மக்களின் மனங்களை வெல்வதே எனது எதிர்பார்ப்பு!

வடக்கு மக்களின் மனங்களை வெல்வதே தனது எதிர்பார்ப்பு என, அம் மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர் மல்வத்துபீட அஸ்கிரிய மகாநாயக்கரை சந்தித்து பின், ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமைதி மற்றும் நல்லிணக்க தகவலை வடக்கு மக்களுக்கு கொண்டு செல்ல தான் தகுதியானவன்...
Ad Widget

இலங்கையின் மிகவும் ஏழ்மையான மாவட்டம் முல்லைத்தீவு

இலங்கையின் பல பகுதிகள் இன்னும் கடுமையான ஏழ்மை நிலையில் உள்ளன என்று உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.அதேவேளை இலங்கையில் போதிய அளவுக்கு முன்னேற்றம் காண கூடுதல் வாய்ப்புகளும் உள்ளன எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தெற்காசியாவின் மற்ற நாடுகளைக் காட்டிலும் இலங்கையில் நம்பகத்தன்மையுடன் கூடிய அடிப்படை கட்டமைப்பு வசதிகளும், வலுள்ள மனித வளமும் உள்ளன எனவும்...

தாய்க்கு உணவளிக்காமல், நிர்வாணமாக அடைத்துவைத்திருந்த மகள் கைது!

வயோதிப தாய் ஒருவரை நிர்வாணமாக அடைத்து வைத்திருந்த பெண் ஒருவரை கண்டி உடதும்பறை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். உடதும்பறை, உடதென்ன பகுதியில், 87 வயதுடைய வயோதிப பெண்ணை அவருடைய மகளான 51 வயதுடைய பெண், உணவு கொடுகாமல் நிர்வாணமாக சிறிய ஒரு இடத்தில் அடைத்து வைத்திருந்துள்ளார். உடதும்பறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றினையடுத்தே பொலிஸார்...

மாதமொருமுறை சந்திக்க சி.வி-ரணில் இணக்கம்

மாதம் ஒருமுறை சிந்தித்து, வட மாகாண விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் தீர்மானித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை, அலரி மாளிகையில் இவ்விருவரும் சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

யாழில் பரபரப்பு : சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற வெளிநாட்டு முதியவர்கள்!!

ஜேர்மனி நாட்டில் இருந்து யாழிற்கு சுற்றுலா விசாவில் வருகை தந்த முதியவர்கள் இருவர் மதுபோதையில் 10 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்த வேளையில், சிறுமி அழுதுகொண்டு வீட்டை விட்டு தப்பியோடி வெளியே வந்த சம்பவம் யாழில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் குளப்பிட்டி பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....

காணாமல் போனோருக்கான ஆணைக்குழுவின் காலஎல்லை நீடிப்பு

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி மேலும் மூன்று மாதங்களுக்கு, குறித்த ஆணைக்குழுவுக்கு செயற்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அதன் செயலாளர் எச்.டப்ளியூ.குணதாஸ குறிப்பிட்டுள்ளார். காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலஎல்லை இம் மாதம் 15ம் திகதியுடன் (நேற்றுடன்) நிறைவடைகின்றது. இந்தநிலையில் இதன்...

Google’s balloon அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வந்தது!!

Project Loon என அழைக்கப்படும் அதிவேக இன்ரநெட் வழங்கும் கூகிள் பலூன் Google’s balloon ஒன்று நேற்றைய தினம் அமெரிக்காவினால் வான்வெளியில் செலுத்தப்பட்டு இலங்கைக்கு வந்துள்ளது. இதையடுத்து நேற்றைய தினம் பரிசோதனைகள் மேற்சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் மேலும் மூன்று பலூன்கள் சில வாரங்களில் இலங்கையை நோக்கி வரும் எனவும் ICTA (nformation and Communication Technology Agency...

விரைவில் கிராம அலுவலர்கள் சமாதான நீதவானாக நியமிக்கப்படுவர்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் கொள்கைக்கு அமைவாக கிராம அலுவலர் சேவையின் வினைதிறனை விரிவுபடுத்துமுகமாக நாடு பூராக சேவையற்றும் கிராம அலுவலர்கள் சமாதான நீதவானாக நீதி அமைச்சினால் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர். பிரதேச செயலர் பிரிவு ரீதியாக இதற்கான தகவல்கள் திரட்டப்படுவதாக தெரியவருகின்றது. கிராம அலுவலர்களின் பெயர் விவரம், கடமைப்பிரிவு, நியமனக்காலம், சேவைக்காலம், பதவியை உறுதிப்படுத்தல், ஒழுக்காற்று, நடவடிக்கைகள்...

இறைமை பகிரப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி முன்மொழிவு

புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. யாழ். மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூடத்தில் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான மக்கள் அபிப்பிராயம் பெறும் குழு அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலதரப்பட்டோரிடமிருந்தும் முன்மொழிவுகளைப் பெற்று வருகின்றனர். அந்தவகையில் நேற்றய தினம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால்...

மீண்டும் தலைதூக்குகின்றது வாள்வெட்டு கலாச்சாரம்!!

வாள், கோடரிகளுடன் ஆயுதக்குழு ஒன்று, வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ் தரை துரத்தித் துரத்தி தாக்கியமையால் நேற்றிரவு தாவடியில் பதற்ற நிலை காணப்பட்டது. குறித்த குடும்பஸ்தர் காயத்துடன் அந்தப் பகுதியிலுள்ள வீடொன்றின் மதில் பாய்ந்து ஓடித்தப்பித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் குறித்த வீட்டுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த அடாவடிக் குழு, அவரைத்தேடி அடாவடித்தனத்தில்...

தமிழீழத்தை பெற்றுக் கொடுக்கவே ரெஜினோல்ட் குரேக்கு ஆளுநர் பதவி!

நாட்டை இரண்டாக பிளவுபடுத்தி தமிழீழத்தை அடைவதற்கான நல்லாட்சி அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை பளிஹக்கார முன்னெடுக்காததன் விளைவாகவே வடக்குக்கான புதிய ஆளுநர் நியமனம் இடம்பெற்றுள்ளது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே...

மின்சார நாற்காலியை விட கொடுமையான அழுத்தங்களை அனுபவிக்கிறேன்! – மஹிந்த

மின்சார நாற்காலியில் இருந்து தப்பினாலும் அதனை விட மோசமான அழுத்தங்களுக்கு தான் உள்ளாகி இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நேற்று உடற்பயிற்சியில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி ஊடகவியலாளர்களிடம் இதனை கூறியுள்ளார். மின்சார நாற்காலிக்கு அனுப்புவதை விட மனரீதியாக கொடுக்கப்படும் அழுத்தங்கள் அதிகமானது. மின்சார நாற்காலிக்கு கொண்டு சென்றது போல்தான்...

போக்குவரத்துக் குற்றங்கள் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகளில் யாழ். மேல் நீதிமன்றம் தலையிடாது! – நீதிபதி இளஞ்செழியன்

யாழ். குடாநாட்டின் நீதிபதிகளால் பிறப்பிக்கப்படும் போக்குவரத்து குற்றம் சம்பந்தமான தீர்ப்புக்களில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் அநாவசியமாகத் தலையிடாது என மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். போக்குவரத்துக் குற்றம் தொடர்பான வழக்கொன்றில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் தீர்ப்பு தொடர்பாக யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு மீதான விசாரணையின்போதே நீதிபதி இளஞ்செழியன் மேற்கண்டவாறு...

தமிழ் மக்களிடம் கருத்து கேட்பதை வரவேற்கிறோம் – சிவாஜிலிங்கம்

'போரினால் ஏற்பட்ட இழப்புக்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றுக்கு தீர்வு காணப்பட்ட பின்னர் தான் தேசிய நல்லிணக்கத்தை நோக்கி நகர முடியும்' என்று வடக்கு மாகாண சபை உறுப்பனர் எம்.கே.சிவாஜிலிங்கம், அரசியல் அமைப்பு சீர்திருத்த மக்கள் கருத்தறியும் குழுவிடம் தெரிவித்தார். 'கடந்த காலத்தில் நாட்டில் இருந்த அனைத்து அரசாங்களாலும் தமிழ் மக்களின் வேண்டுகோள்கள் மறுக்கப்பட்டன. தற்போது அரசியல் அமைப்பு...

அஸியில் இருந்து மேலும் ஐவர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டனர்!!

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற இலங்கை பிரஜைகள் ஐவர், நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள், அவுஸ்திரேலியா எஸ்.எக்டி 01 என்ற விசேட விமானத்தின் மூலமாக, நேற்று திங்கட்கிழமை நாடு திரும்பினர். இந்த குழுவினர், பேருவளை பிரதேசத்திலிருந்து வியங்க என்ற படகிலேறி ஜனவரி மாதம் 8ஆம் திகதியன்று அவுஸ்திரேலியா நோக்கி பயணமாகினர். அதன்பின்னர், அவுஸ்திரேலிய கடல் எல்லையில் வைத்து...

வடக்கு அபிவிருத்திக்கு 3,00,000 கோடி ரூபா தேவை! ரணிலிடம் கோரினார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினருக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று அலரி மாளிகையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. வட மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட தேவைகளை நிறைவு செய்வதற்காகவும் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவும் 3 லட்சம் கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்தும் வகையிலான மதிப்பீட்டு...

எமக்காக உயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூர புதிய அரசமைப்பில் வழி செய்ய வேண்டும்!

"எங்கள் இனத்துக்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்களை அவர்களின் நினைவிடங்களில் நினைவுகூர புதிய அரசமைப்பில் வழிசெய்ய வேண்டும்."- இவ்வாறு யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடந்த 'புதிய அரசமைப்பு தொடர்பில் பொதுமக்களின் யோசனைகளை அறியும் குழு'வுக்குத் தகவல் அளித்தார் பொதுமகன் ஒருவர். புதிய அரசமைப்பில் தமிழ் மக்களுக்கு சமஷ்டி மூலமான தீர்வே அவசியம்....

வாக்குறுதிக்கேற்ப வட மாகாணசபையுடன் இணைந்து செயற்படுவார் புதிய ஆளுநர்! – சம்பந்தன் நம்பிக்கை

"வடக்கு மாகாண புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே வழங்கியுள்ள வாக்குறுதிக்கேற்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையுடன் இணைந்து செயற்படுவார் என்று நாம் நம்புகின்றோம்.''- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் தான் அயராது பாடுபடுவார் என்று...

மலையக மாணவனின் புதிய கண்டுபிடிப்பு

நுவரெலியா - ராகலை - சென்லியநாட்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் 10ம் தரத்தில் கல்வி பயின்று வரும் மாணவன் தருமசீலன் புதிய வகையிலான தலைகவசம் ஒன்றினை கண்டு பிடித்துள்ளார். முற்றிலும் சூரியகளத்தின் உதவியுடன் செயற்படும் இந்த தலை கவசம் முடி உதிர்தல், முடி நரைத்தல் போன்றவற்றில் இருந்து ஏற்படும் பின் விளைவுகளை தடுக்கின்றது. இந்த கண்டு...
Loading posts...

All posts loaded

No more posts