Ad Widget

மீண்டும் வருவேன் என்று புறப்பட்டார் ஹுஸைன்

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், மீண்டும் இலங்கைக்கு வருவேன் என்று கூறிவிட்டு, இன்று (10) அதிகாலை நாட்டை விட்டு வெளியேறினார்.

இன்று அதிகாலை 3 மணியளவில், கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அவர், டுபாய் நோக்கிப் புறப்பட்டார் என விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துரைத்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், “வெகு விரைவில் மீண்டும் இலங்கைக்கு வருவேன்” என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts