- Sunday
- August 9th, 2026
யாழில் பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்த சந்தேகநபர் ஒருவர் தப்பியோடியுள்ளார்.அண்மையில் யாழ். ஆணைக்கோட்டை - ஆறுகால்மடம் பகுதியிலுள்ள வீடொன்றில் மோட்டார் சைக்கிளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். கிளிநொச்சியில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை யாழ். பொலிஸாரினால் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இதனையடுத்து, பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர்களை சனிக்கிழமை, நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்துவதற்காக பொலிஸார் பொலிஸ்...
கிராமப்புற மக்களின் போசாக்கு மட்டம் மற்றும் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் நோக்கில் கோழிக்குஞ்சுகளை விநியோகிக்கும் திட்டத்தை வடமாகாண கால்நடை அமைச்சு முன்னெடுத்துள்ளது. இதனை வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி,கூட்டுறவு அபிவிருத்தி,உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கடந்த சனிக்கிழமை (16.04.2016) வேலணையில் தொடக்கி வைத்துள்ளார். வேலைணையில் கமநல சேவைகள்...
யாழில் முன்னெடுக்கப்பட்டு வரும் 65 ஆயிரம் வீட்டுத் திட்டங்களை மீள் பரிசீலணை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதிக்கு வலியுறுத்தி வருவதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பொது நிகழ்வுகளிலும் கலந்து...
லக்கல பொலிஸ் நிலையத்திலிருந்து கடந்த வியாழக்கிழமை (14) திருடப்பட்டிருந்த ரி-56 ரைபிளும் ஐந்து ரிவோல்வர்களும் லக்கலவிலுள்ள நீர்த்தாங்கியொன்றுக்கு அருகிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நேற்று காலை ஆறு மணியளவில் கிடைக்கப் பெற்ற தகவலொன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலிலேயே லக்கல பொலிஸ் நிலையத்திலிருந்து ஏறத்தாள ஐந்து கிலோமீற்றர் தொலைவில் உள்ள வெல்லேவெலவிலுள்ள சன்டகல விகாரையின் பகுதியில்...
அவள் அவளது கட்டளைகளில் மிகத் தெளிவானவள். அவள் மிகவும் தைரியமானவள். அவள் அனுப்பப்பட்ட இடங்களில் எல்லாம், போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் பற்றிய செய்தியினை ஊருக்கு அறிவிக்கவே விரும்பினாள். அவளது ஒரே நோக்கமும் அதுதான். அவளுக்கு தெரியும் இது அத்தனை எளிதான விடயம் இல்லை என்று. தன்னுடைய உயிரையே கொடுத்தவள் அவள். அவள் ஒரு சரித்திரம்;...
வடக்குக் கிழக்கு ஒன்றாக இணைக்கவேண்டும் என்ற தேவை முஸ்லிம் மக்களுக்கு இல்லையென விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சர் எச்.எம்.எம்.ஹாரிஸ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்முனைப் பகுதியில் அமைந்துள்ள சாஹிராக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையினரால் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்ட யோசனையானது முஸ்லிம் மக்களை ஒருபோதும் திருப்திப்படுத்தாது எனவும் குறிப்பிட்டுள்ளார். எனினும் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணும் விடயத்தில்...
நல்லாட்சி எனக்கூறும் இந்த அரசாங்கத்தில்கூட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கடந்த மாதம் மட்டும் இருபத்துமூன்றுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என மனித உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வடக்குக் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இதில் மூன்றுபேரைத் தவிர ஏனையவர்கள் அனைவரும் பூசா சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அண்மையில்...
ஈழத் தமிழர்கள் ஒரு தேசிய இனம் எனவும் சிறீலங்காவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழர் இன அழிப்பிற்கான அனைத்துலக விசாரணையைக் கோருவோமென்றும் கனேடிய பழமைவாதக் கட்சி அறிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று நடைபெற்ற உயர் மட்டச் சந்திப்பில் கனடியத் தமிழர் தேசிய அவையும்(NCCT) மற்றும் கனடாவில் தமிழர் பிரதேசங்களைப் பிரதி நிதித்துவப்படுத்தும் மார்க்கம், மிசிசாகா, பிராம்டன், ஆட்டாவாவைச் சேர்ந்த...
தமிழ் மக்களது காணிகள் விடுவிக்கப்படாது தொடர்ந்தும் அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில், மக்களைத் திரட்டி போராட்டங்களை நடத்தவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வடக்கில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என...
முல்லைத்தீவு கடற்கரை சிறுவர் பூங்காவுக்கு அருகே, வெயிலின் தாக்கம் காரணமாக உயிரிழந்த வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் முள்ளியவளை கணுக்கேணி மேற்கைச் சேர்ந்த 72 வயதான இளையதம்பி சுந்தரலிங்கம் என்பவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர், சிறுவர் பூங்கா பின் வீதியின் நடுவே மயங்கி விழுந்துள்ளதுடன், அவரை அருகே இழுத்துப்...
அரசியல் தீர்வு தொடர்பாக சில முக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த தீர்வு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள கூடியவகையில் அமைய வேண்டும். தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளாத தீர்வை, நாம் எச்சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். வட மாகாணசபை உறுப்பினர்களுக்கும், இரா. சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றிருந்தது. குறித்த...
இலங்கை கடற்படையின் நீச்சல் குழுவினரும் ஐக்கிய அமெரிக்க கடற்படையின் வெடிபொருட்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை செயலிழக்கச் செய்யும் மொபைல் பிரிவும் இணைந்து பயிற்சி நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது. கடற்படை நீச்சல்குழுவின் 22 பேர் இலங்கையை பிரிதிநிதித்துவப்படுத்தி இதில் பங்கேற்றுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. யுத்த காலத்தில் குளங்கள் மற்றும் ஏரி பகுதிகளில் விடுதலைப் புலிகளால் கைவிடப்பட்டு...
இந்த முறை புத்தாண்டிற்கான சுப நேரம் கணிக்கப்பட்டது அரசாங்கத்தின் தேவைக்கு ஏற்பவே என்று ஜோதிடர்கள் தன்னிடம் தெரிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். கண்டி மல்வத்து அஸ்கிரி பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷவிடம், புத்தாண்டு சுப நேரம் குறித்து ஊடகவியலாளர்கள் கருத்து கேட்ட போது மஹிந்த ராஜபக்ஷ...
பல்கலைக்கழக அனுமதிக்கு இணையம் ஊடாக விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இனிவரும் காலத்தில் இணையம் ஊடாக விண்ணப்பிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இணையம் ஊடாக விண்ணப்பிப்போருக்கு அவர்களின் கைபேசி இலக்கத்துக்கு குறுஞ்செய்தியாக தகவல் அனுப்பப்படும்.
சாவகச்சேரியில் வெள்ளை வானில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கடத்திச் செல்லப்பட்ட தமிழ் இளைஞனின் மனைவி யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் எழுத்துமூலம் முறைப்பாடு செய்துள்ளார். கடத்தப்பட்ட தமிழ் இளைஞனின் மனைவி சார்பில் அவரது தாயார் சட்டத்தரணியுடன் நேற்று முற்பகல் இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார். தனது கணவர் முன்னாள் போராளி என்றும், புனர்வாழ்வு பெற்று கடந்த 2011ஆம்...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படலாம் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. பணச்சலவை குற்றச்சாட்டு சம்பந்தமாக நிதி மோசடி விசாரணைப் பிரிவு நாமல் ராஜபக்சவுக்கு எதிராக விசாரணைகளை நடத்தி வருவதுடன் பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் மரணம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை நடத்தி வருகிறது. இந்த...
யாழ்ப்பாணம் வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், நேற்று மாலை, வடமாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போது பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தலைமையிலான 16 ஆளுங்கட்சி உறுப்பினர்களின் அமைச்சரவை மாற்றத்திற்கான கோரிக்கையினை சம்பந்தர் நிராகரித்தார். அமைச்சர்களும் முதலமைச்சரும் திறமையானவர்கள் . வினைத்திறனின்மைக்கு அரசியலமைப்பின் 13 ம்...
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் தமிழ் இளைஞர்கள் தொடர்ந்து கடத்தப்படுவதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு துணை நிற்கின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதன் பின்னணியில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் கைதாகியுள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு...
பிரித்தானியாவில் வாழும் இலங்கையர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கை மக்களுக்கும் தமிழ், சிங்கள புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இலட்சக்கணக்கான மக்கள் புத்தாண்டு பிறப்பை கொண்டாடும் வகையில் அவர்களின் அனைத்து உறவினர்களையும் சந்தித்துக் கொள்வதன் பெறுமதியை தான் அறிந்து கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இலங்கையில் மனித உரிமையை உறுதிப்படுத்துவதற்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும்...
கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் முடிவுகள் அண்மையில் வெளியாகியுள்ள நிலையில், தேசிய தரப்படுத்தல் ரீதியில்இதில் வடக்கு மாகாணம் கடைசி இடத்தைப் பெற்றிருப்பது வேதனை தருவதாக உள்ளதென ஈழ மக்கள் ஜனநாய கக்கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார் இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம்அவர்கள், கடந்த காலங்களில் வடக்கின் கல்வி...
Loading posts...
All posts loaded
No more posts
