Ad Widget

புதிய அரசிடமிருந்து எமக்குஅழைப்பில்லை – சம்பந்தன்

தேசிய அரசியலில் இணைவதற்கு புதிய அரசு தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய எமக்கு அழைப்பு விடுக்கவில்லை என தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்று அமைச்சர்கள் 60 பேர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏம்.ஏ.சுமந்திரனுக்கு மொழிகள், சமூக ஒன்றிணைவு, மீள்குடியேற்றம் மற்றும் சமாதானத்துக்கான அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே...

தீர்வுக்கு புதிய அத்திபாரம் மைத்திரி – வடக்கு முதல்வர்

பெரும்பான்மையினரும் சிறுபான்பான்மையினரும் இணைந்து நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுத்துள்ளோம். நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை எட்டுவதற்கு சிறந்த அத்திவாரம் மைத்திரிபால சிறிசேன என, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாக தெரிவாகிய நிலையில் வடக்கு முதலமைச்சர் விடுத்த ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்....
Ad Widget

மீண்டுமொருமுறை ஜனாதிபதியாகும் எண்ணம் இல்லை: பதவி ஏற்பின் போது மைத்திரி

உயர்நீதிமன்ற நீதியரசர் ஸ்ரீபவன் முன்னிலையில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 06.21 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமித்துள்ளார்.ரணில் விக்கிரமசிங்கவும் அங்கு பதவி பிரமாணம் செய்துகொண்டார். இதன் பின்னர் நாட்டு...

இலங்கை மக்களுக்கு மைத்திரி நன்றி

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்ததற்காக இலங்கை மக்களுக்கு பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவித்திருக்கிறார். தனது அதிகாரபூர்வ இணைய தளத்தில் தேர்தல் முடிவு குறித்து கருத்தை வெளியிட்டிருக்கும் மைத்திரிபால சிறிசேன, " என்மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாக்களித்த அனைத்து இலங்கை மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத்...

மைத்திரிக்கு மோடி வாழ்த்து

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமைதியான மற்றும் ஜனநாயகமான தேர்தலை முன்னெடுப்பதற்காக ஒத்துழைத்த இலங்கை மக்களுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை அவசரமாகக் கூடுகிறது! நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்?

தேர்தல் முடிவுகளில் அரச தரப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அமைச்சரவையை அவசரமாக அழைத்துள்ளார். அடுத்த ஒரு மணிநேரத்தில் - விடிகாலை 4.30 அல்லது 5 மணியளவில் - அமைச்சரவை கொழும்பில் கூடுகிறது. நாடாளுமன்றக் கலைப்புக் குறித்து அப்போது ஜனாதிபதி ஆராய்வார் என கொழும்பு வட்டாரங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்படுகின்றது

அல்வாயில் வாக்களிப்பு நிலையத்திற்கு அருகாமையில் கைக்குண்டு தாக்குதல்

யாழ்.பருத்தித்துறை அல்வாய் ஸ்ரீலங்கா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு அருகிலுள்ள காணிக்குள் இன்று வியாழக்கிழமை (08) காலையில் கைக்குண்டு வீசப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் பிரிவு - 2 இன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.யவ்பர் தெரிவித்தார். மோட்டார் சைக்கிளில் வந்திருந்த இருவரே இவ்வாறு கைக்குண்டை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, வாக்களிப்பு நிலையத்துக்கான பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக...

5 குடும்பங்களுக்கு காணி சுவீகரிப்பு கடிதங்கள் அனுப்பிவைப்பு

யாழ். மாவட்டத்தின், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஜே - 133 கிராம அலுவலர் பிரிவை (கூழாவடி) சேர்ந்த 5 பேரின் 0.3492 ஹெக்டேயர் காணிகள், ஸ்ரீலங்கா இராணுவத்தின் 11 ஆவது சிங்க ரெஜிமென் 'பி' அணிக்கான நிலையத்தை அமைப்பதற்காக சுவீகரிக்கப்படவுள்ளதாக காணி உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரால் அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதத்தில், எதிர்வரும்...

கள்ளவாக்கு போட முயற்சித்தால் தலையில் சுடவும் – மஹிந்த தேசப்பிரிய

வாக்களிப்பு ஒருவருடைய விருப்பமாகும் அந்த விருப்பத்தை பலவந்தமாகவோ அல்லது களவாகவோ அபகரிக்க முடியாது என்று தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, கள்ளவாக்கு போடுவதற்கு யாராவது வந்தால் அவருடைய தலையில் சுடுமாறு பொலிஸாருக்கு தான் பணித்துள்ளதாக அவர் தெரிவித்தார். தேர்தல்கள் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு...

போலியான துண்டுப்பிரசுரங்களை நம்பி ஏமாறாமல் துணிச்சலுடன் வாக்களிக்கவும் – மாவை

தமிழர்களாகிய நாங்கள் மகிந்தவையும், மைத்திரியையும் நிராகரிப்போம்.தேர்தலைப் பகிஸ்கரிப்போம்.வாக்களிப்பை தவிர்ப்போம்.அல்லது எமது வாக்குகளைச் செல்லுபடியற்றதாக ஆக்கிவிடுவோம். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயகப் பிரிவு என்று உரிமை கோரப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் யாழ்.குடாநாட்டில் பலபாகங்களில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜாவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, இவ்வாறான துண்டுப்பிரசுரங்கள்...

வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களும் வாக்களிக்கலாம்

வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களும் தகுந்த ஆவணங்களுடன் சென்று வாக்களிக்க முடியும் என யாழ்.மாவட்டச் செயலாளரும் தெரிவத்தாட்சகருமான சுந்தரம் அருமைநாயகம் செவ்வாய்க்கிழமை (6) தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 'ஜனாதிபதித் தேர்தலுக்கு கடந்த மாதம் 20 ஆம் திகதியில் இருந்து வாக்குச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையாளரின் வேண்டுகோளுக்கு அமைவாக டிசெம்பர் 3ஆம் திகதி வரை...

சமுர்த்தி பயனாளிகள் நிர்ப்பந்திக்கப்பட்டதாக முறைப்பாடு – கபே

தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு சமுர்த்தி பயனாளிகள் நிர்ப்பந்திக்கப்பட்டதாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இடங்களில் இருந்து அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கபே அமைப்பு தெரிவித்தது. ஜனாதிபதி தேர்தல் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள நிலையில் பிரசாரக்கூட்டங்களுக்கு சமுர்த்தி பயனாளிகள் அழைக்கப்பட்டிருந்தனர். தேர்தல் கூட்டங்களுக்கு சமுர்த்தி பயனாளிகள் வராவிட்டால் எதிர்காலத்தில் சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்படமாட்டாது எனக்கூறி அழைத்தமை தொடர்பில்...

போலிப் பிரசாரங்களை நம்பாதீர்கள்! அன்னச் சின்னத்துக்கு வாக்களியுங்கள்!!

"ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபாலவின் சின்னம் 'அன்னம்' ஆகும். எனவே, மஹிந்த அரசின் போலிப் பிரசாரங்களை நம்பாது நாளை மறுதினம் 8 ஆம் திகதி மைத்திரியின் 'அன்னம்' சின்னத்திற்கு அனைத்து தமிழ் பேசும் வாக்காளர்களும் தமது பொன்னான வாக்குகளை அளித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

வன்முறைகள் கட்டுமீறிப் போகுமிடங்களில் மீள் வாக்கெடுப்பு

தேர்தல் வன்முறைகள் கட்டுமீறிப் போகுமிடங்களில் மீள் வாக்கெடுப்பு நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, நேற்று திங்கட்கிழமை (05) தெரிவித்தார். நேற்று அவசரமாகக் கூட்டப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய அவர், 'கடந்த இரண்டு நாட்களில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் தேர்தல் வன்முறைகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டன. இந்தப் போக்கை கண்டிப்பதுடன் இது மிகவும் மோசமான வன்முறையாகும்'...

அதிகார பரவலாக்கல் என்ற பேச்சுக்கு இப்போதைக்கு இடமில்லை

'எனது நிர்வாகத்தின் ஆரம்பகட்ட வேலைகளில் அதிகார பரவலாக்கலுக்கு இடமில்லை. சமூக மற்றும் அரசியல் மீள்கட்டுமான நடவடிக்கைகளே எனது 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் முதலில் முன்னெடுக்கப்படவுள்ளன. எனது இந்த யோசனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது' என்று எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 'இந்த நாட்டை துண்டாக்கவோ அல்லது பகிர்ந்தளிக்கவோ நானும்...

படையினரின் அச்சுறுத்தலால் கிளிநொச்சியில் ஒரு குடும்பம் பீதியில்!

கிளிநொச்சி - பாரதிபுரம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் மீதும் சிறுவர்களின் மாமன் மீதும் படைச்சிப்பாய் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் குறித்த இரு சிறுவர்களும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் காயமடைந்த சிறுவர்களின் தயார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நேற்றைய தினம் மாலை 3.30 மணியளவில்...

தெளிவாக இருப்போம்: இந்த சிறிசேன அல்ல அந்த சிறிசேன!

எங்கள் பொது எதிரணியின் சின்னம், அன்னப்பறவை சின்னம். எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன போட்டியிடும் சின்னம், அன்னப்பறவை சின்னம். இதை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும். ஆர். ஏ. சிறிசேன என்ற ஒரு வேட்பாளரை தேடிப்பிடித்து, அவரை போட்டியிட வைத்து, அவருக்கு மைத்திரிபாலவை போல் ஆடை உடுத்தி,...

டாண் தொலைக்காட்சியில் விளம்பரம் -அனந்தி மறுப்பு

யாழ்ப்பாணத்தில் இயங்கும் டாண் தொலைக்காட்சியில் தேர்தலைப் பகிஸகரிக்குமாறு அனந்தி சசிதரனின் குரலில் வருவது போன்று கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் ஒளிபரப்பப்படுகிறது.. இந்த விளம்பரத்தை தான் கொடுக்கவில்லை என அனந்த சசிதரன் மறுத்துள்ளார். அந்த விளம்பரத்தினை  தந்தவர்களது விபரத்தினை தருமாறு அவர் கடிதமூலம் தொலைக்காட்சிக்கு கேட்டிருக்கின்றார்.

மைத்திரி அரசு அமைந்தால் அமைச்சுப் பதவிகளை ஏற்கோம்! – தமிழ் தேசிய கூட்டமைப்பு

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் ஓர் கட்சியாக செயற்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தை மாற்றியமைப்பதில் முக்கியமான பங்களிப்பு வழங்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில்...

த.தே.கூ உறுப்பினர்கள், ஆளுங்கட்சிக்கு தாவினர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சிக்குட்பட்ட வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்கள் இருவர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு கட்சி தாவியுள்ளனர். உறுப்பினர்களான ஜெ.ஜெயராஜா, எம்.மயூரன் ஆகியோரே இவ்வாறு கட்சி தாவியுள்ளனர்.
Loading posts...

All posts loaded

No more posts