முல்லைத்தீவு கோட்டாபய முகாம் குறித்து விளக்கமளிக்கக் கோரிக்கை

தெஹிவளையில் 2008 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணியளவில் மூன்று தமிழ் இளைஞர்களும் அவர்களது நண்பர்களான இரண்டு முஸ்லிம் இளைஞர்களும் அவர்கள் பயணம் செய்த வாகனத்தோடு கடத்தப்பட்டனர். கடற்படையினரால் கடத்தப்பட்ட ஜந்து.மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் கடத்தப்பட்டு காணாமல்போன மாணவர்களின் பெற்றோர்களை மனுதாரர்களாக பெயர் குறிப்பிட்டு சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி...

‘அழுது அழுது கண்ணீர் வற்றிவிட்டது’ கதறியழுத உறவுகள்

பாதுகாப்பு படைகளால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டு காணாமற்போனவர்களின் உறவுகள் தமக்கு நீதிகோரி யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக இன்று புதன்கிழமை (04) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தை காணாமற்போனோர் பாதுகாவலர் சங்கம் ஏற்பாடு செய்தது. கடந்த 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படைகளால் கைது செய்யப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று அறியாத...
Ad Widget

தாயைப் பார்க்க இலங்கை வந்த பகீரதி தடுப்புக்காவலில்

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து 15 ஆண்டுகளுக்கு முன்னர் விலகியிருந்த முருகேசு பகீரதி என்ற தாய் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றார். 2005-ம் ஆண்டில் பிரான்ஸ் சென்றிருந்த பகீரதி, தனது 8 வயது மகளுடன் இலங்கை வந்து கிளிநொச்சியிலுள்ள அவரது பெற்றோருடன் ஒருமாத விடுமுறையை கழித்துவிட்டு, பிரான்ஸ் திரும்பும் வழியிலேயே நேற்று முன்தினம் திங்கட்கிழமை...

வடக்கு, கிழக்கு,தெற்கு மக்களை உள்ளங்களால் ஒன்று சேர்க்க நடவடிக்கை எடுப்பேன்- ஜனாதிபதி

இங்குள்ள பிரச்சினைகள் அனைத்தையும் நான் அறிவேன். அதனைத் தீர்க்கும் அவசியம் எனக்கு உள்ளது. அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும்...

காணாமற்போனவர்களின் உறவினர்கள் நாளை யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

காணாமற்போனவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து நாளை புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்றை யாழ். அரச செயலகம் முன்பாக நடத்தவுள்ளனர். அத்துடன் ஜனாதிபதியிடம் மனு ஒன்றையும் தாம் கையளிக்கவுள்ளனர் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களையும், காணாமற் போனவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த அனைவரையும் பங்கேற்குமாறும் குறித்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை வடபகுதியில் இச்சங்கத்தினால்...

அனந்தி – சுரேஸ் – மற்றும் லண்டன் புலம்பெயர் அமைப்பினருக்கு தமிழரசுக்கட்சி மத்தியகுழு கண்டனம்

வவுனியாவில் ஞாயிறன்று(1.3.2015) காலை கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு அந்தக் கட்சியின் மகளிர் அணி துணைச்செயலாளரும் வட மாகாணசபை உறுப்பினருமாகிய அனந்தி சசிதரன் மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவப் பொம்மை எரிக்கப்பட்ட சம்பவத்திற்குத் துணை...

100 நாள் வேலைத்திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது அரசு!

தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 100 நாள் வேலைத் திட்டம் மற்றும் அதன் முன்னேற்றம் சம்பந்தமாக பொது மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக விசேட பொறிமுறையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- பொதுமக்கள் பங்கேற்புடன் மிகவும் பயன்மிக்க, வினைத்திறன் மிக்க மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வகையில் இந்த...

வலி.வடக்கில் 1000 ஏக்கர் நிலங்களை மூன்று கிழமைகளில் விடுவிக்க நடவடிக்கை

வலி.வடக்குப் பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளில் ஆயிரம் ஏக்கரை நிலச்சொந்தக்காரர்களிடமே கையளிக்க 3 கிழமைகளில் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன். வலி.வடக்குப் பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் இன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக்...

இரு பிரதேச சபைத்தேர்தலுக்கு இடைக்கால தடை

நாளை சனிக்கிழமை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய இரண்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தினால் இன்று வெள்ளிக்கிழமை இடைக்காலை தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கடலில் இந்திய மீனவர்கள் அட்டூழியம்

வடக்கு கடற்பரப்பில் புதன்கிழமை (25) இரவு அத்துமீறி நுழைந்துள்ள இந்திய மீனவர்களின் றோலர் படகுகள், இலங்கை மீனவர்களின் வலைகளை அறுத்து பாரிய சேதத்தை விளைவித்துள்ளன என்று கடற்றொழிலாளர் சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த மீனவர்களில் 150க்கும் மேற்பட்டவர்களின் வலைகளை றோலர்களில் வருகை தந்த இந்திய மீனவர்கள், நாசம் செய்தனர் என்று வடமராட்சி...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்.வருகின்றார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில், அவரது தலைமையில் வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது.அதில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் பங்கேற்பதுடன் வடக்கு அமைச்சரவையும் பங்கெடுக்கவுள்ளது. ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், முதன் முதலாக வடக்கு மாகாணத்துக்கு-யாழ்.மாவட்டத்துக்கு மைத்திரிபால சிறிசேன வரவுள்ளார். அவரின் தலைமையில் இடம்பெறும்...

யாழ்.ரயில் நிலையத்தில் Wifi இணைய வசதி.

யாழ் ரயில் நிலையத்தில் பயணிகள் பயன்படுத்துவதற்காக நேற்று முதல் இணையத்தள வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.யாழ் ரயில் நிலையத்தில் வைபை வசதியை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரயில் திணைக்களத்தின் வணிக அத்தியட்சகர் டி.டப்ளியூ. சிசிர குமார தெரிவித்துள்ளார். இணையத்தள வசதிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிங்க சிறிசேன கலந்து...

சர்வதேச விசாரணை வெளிவருவதில் பயன் எதுவும் இல்லை. அது அறிக்கை மாத்திரமே! – சுமந்திரன் பா.உ.

பொதுத் தேர்தலின் பின்னர் உருவாக்கப்படும் தேசிய அரசாங்கத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வை இரு வருடங்களில் காண முடியுமென தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், இந்த விடயத்தில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதால் நிச்சயமாக இது சாத்தியப்படும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். அதிகூடிய அதிகாரப் பகிர்வின் மூலம் இனப்பிரச்சினைக்கு...

உண்மையைக் கூறுவது ஒருபோதும் இனவாதமாகாது : பிரதமர் ரணிலுக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பதில்

உண்மை வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும் எனக் கோரு­வது ஒரு­போதும் இன­வா­த­மாக முடி­யாது. உண்­மையை முதலில் அறிந்தால் தான் நல்­லெண்ணம் பிறக்க வழிவகுக்­கலாம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட­மா­காண சபையில் அண்­மையில் நிறை­வேற்­றப்­பட்ட இனப்­ப­டு­கொலை தீர்­மானம் குறித்து, "நல்­லாட்­சி­மிக்க அர­சாங்­கத்­துடன் விளை­யாட வேண்டாம். இதுவே இன­வா­தி­க­ளுக்­கான எனது இறுதி எச்­ச­ரிக்கை" என பிர­தமர் ரணில்...

சுமந்திரன் வார்த்தை ஜாலம் காட்டுகிறார் -சுரேஸ் பதிலடி

இலங்கையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு, தமிழ் கட்சியினர் செல்வது இல்லை. இது கடந்த 33 வருடங்களாக இருந்து வருகிறது. ஆனால் அதனை சுமந்திரனும் சபந்தர் ஐயாவும் உடைத்துவிட்டார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள இதர உறுப்பினர்கள் போகவேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்தும் அதனையும் மீறி சுமந்திரனும் சம்பந்தரும் சென்றுள்ளார்கள். இதனை நியாயப்படுத்த முற்பட்டுள்ளார் சுமந்திரன்....

உள்ளக விசாரணையில் எமக்கு நம்பிக்கை இல்லை அது இன்னும் காலதாமதத்தை ஏற்படுத்தும்: மாவை

உள்ளக விசாரணையில் எமக்கு நம்பிக்கை இல்லை. அது இன்னும் காலதாமதத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே தெரிவித்ததை போன்று மார்ச் மாதம் ஐ.நா அறிக்கை வெளியிடப்படவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்’ என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள்...

உணர்வு எழுச்சியுடன் பல்கலைக்கழக சமூகம் முன்னெடுத்த அமைதிப்பேரணி! நீதி வழங்க கோரிக்கை!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள்  மற்றும்  மனித உரிமை மீறல்கள்  தொடர்பிலான ஐ.நா விசாரணை அறிக்கையை வெளியிடுமாறும் அதற்கு நீதி வழங்குமாறும்  வலியுறுத்தி கவனயீர்ப்புப் பேரணி போராட்டம்  நடைபெற்றது. பல்கலைக்கழக சமூகம் மற்றும் பொது ஜன அமைப்புக்களும் இணைந்து  ஏற்பாடு செய்துள்ள போராட்டம்  இன்று காலை 10 மணிக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகி பலாலி வீதி...

ஐ.நா.விசாரணை அறிக்கையை விரைவில் வெளியிடக் கோரி பல்கலை. சமூகத்தின் ஏற்பாட்டில் யாழில் இன்று மாபெரும் பேரணி!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கையை விரைவில் வெளியிடுமாறு வலியுறுத்தியும், இறுதிப் போரில் அரச படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கோரியும் யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி நடைபெறவுள்ளது. யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தப் பேரணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,...

ஏனைய கடமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு பேரணிக்கு ஆதரவு வழங்குங்கள்; த.தே.கூ

ஐ.நா சபையின் விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும் என கோரி பல்கலைக்கழக சமூகத்தினால் மேற்கொள்ளவுள்ள மாபெரும் பேரணிக்கு தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா சபையில் விசாரணை அறிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட இருந்தநிலையில் மேலும் 6 மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. எனவே விசாரணை அறிக்கையை...

நியாயமான எமது போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரளுங்கள் – பல்கலைக்கழக சமூகம்

ஐ.நா விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டு ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக சமூகம் மற்றும் பொது ஜன அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு அனைவரும் ஆதரவு தெரிவித்து இணைந்து கொள்ள வேண்டும் என பல்கலைக்கழக சமூகம் அழைப்பு விடுத்துள்ளது. பேரணி தொடர்பிலான இறுதித் தீர்மானம் எடுக்கும் கலந்துரையாடல் நேற்று யாழ்....
Loading posts...

All posts loaded

No more posts