- Tuesday
- December 30th, 2025
காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமானநிலையம் மற்றும் திருகோணமலை எண்ணெக்குதம் போன்ற அரசாங்கச் சொத்துக்களை தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுவருவதாக கூட்டு எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர். இது தொடர்பாக அக்கட்சியின் நடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவிக்கையில், விலைமனுக்கோரலின்றி எந்தவிதக் கொடுக்கல் வாங்கல்களும் இடம்பெறாது எனக் கூறியே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது....
பாவனைக்குதவாத வகையிலான ஜெலியை விற்பனை செய்த நிறுவனத்திற்கு கால அவகாசத்துடன் தண்டம் விதித்து தீர்ப்பளித்தார் பருத்தித்துறை நீதவான் சிவகுமார். யாழ்ப்பாணத்தில் தூசு, இறந்த நிலையிலுள்ள பூச்சிகள் கலந்த ஜெலிகளை விற்பனை செய்த நிறுவனத்திற்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பாவனையாளர் அதிகார சபையால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையிலேயே நேற்றயதினம் நீதவான் தண்டம் விதித்ததுடன் அந்த...
குரும்பசிட்டி கிழக்கு, தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியொருவர் காணாமல் போயுள்ளார் என்று, அவரது பெற்றோரால், தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சிறுமி, கடந்த 12ஆம் திகதி திங்கட்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. மகேந்திரன் வினித்தா என்ற மேற்படி சிறுமி, கடந்த 12ஆம் திகதி மாலை வேளையில், வீட்டில் இருந்த போதே,...
அரசியல் சாசனம் அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தெரிவித்துள்ளது. இலங்கையின் அரசியல் சாசனம் அமைக்கும் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பு குறிப்பாக இந்தியாவின் பங்களிப்பு அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து திகதிகள் எதனையும் நிர்ணயம்...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் 30ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி...
முல்லைத்தீவு மாவட்டத்தில் கூடிய விரைவில் தமிழ் மக்கள் சிறுபான்மை இனமாக மாறும் நிலை ஏற்படும் என வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களை சிறுபான்மையாக்குவதற்கான அடித்தளங்கள் இடப்பட்டு வருகின்றன. மக்களிருக்கும் நிலங்களை...
பொது மக்களுக்குச் சொந்தமான ஓமந்தை சோதனைச் சாவடி காணியை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். குறித்த காணிக்கு மாற்றீடாக வேறு 6 ஏக்கர் காணியை இராணுவத்தினருக்கு வழங்கவும் மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று ஓமந்தைச்...
ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டும் சரணடைந்த நிலையிலும் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு, விஷ ஊசி ஏற்றியிருக்கின்றார்கள் என்ற சந்தேகம் தொடர்ந்தும் வலுப்பெற்று வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா அச்சம் வெளியிட்டுள்ளார். புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சமூகத்துடன் இணைக்கப்பட்ட நிலையில், காய்ச்சல் காரணமாக...
ஒற்றையாட்சி மூலம் சமஷ்டி பண்புகளை பெறமுடியாதென்றும் அதனை ஏற்றுக்கொள்ள தயாரில்லையென்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பானது சமஷ்டி என்ற சொல்லில் தங்கியிருக்கக் கூடாதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் மாவை மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார். அத்தோடு, 13ஆவது திருத்தச்...
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பாற்றுவதற்காக அமெரிக்கா மற்றும் நோர்வே போன்ற நாடுகள் எடுத்த முயற்சிகளுக்கு இந்தியா தனது எதிர்ப்பை வெளியிட்டதாக இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலரும், பாதுகாப்புச் செயலருமான சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்பகுதி தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலம் சிங்களக் குடியேற்றங்களுக்கு அபகரிக்கப்பட்டு அங்கு வாழும் தமிழ் மக்கள் அச்சுறுத்தல் காரணமாக தமது சொந்த நிலங்களை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், அண்மைக்காலமாக கொக்குளாய் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில் பிக்கு ஒருவர் அடாத்தாக விகாரை அமைத்து வருகின்றார். இதற்குரிய காணியை முல்லைத்தீவு மாவட்ட...
யாழ். கோப்பாய் பகுதியில் வாள் மற்றும் கஞ்சாவுடன் ஆறு இளைஞர்களை கைதுசெய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் நிலைய பொறுப்பதிகாரி சுபாஷ் மஞ்சுள காந்தோல தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், கோப்பாய் பகுதியில் கஞ்சா புகைத்து விட்டு குழப்பத்தை தோற்றுவிக்கும் கும்பல் ஒன்று தொடர்பாக மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நேற்றய தினம் அதிகாலை பொலிஸார்...
வடக்கில் புத்தர் சிலைகளை அமைக்க இடமளிக்கக்கூடாது என வடமாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் முற்றிலும் தவறானது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பௌத்தர்கள் வாழாத இடத்தில், சட்டவிரோதமான முறையில் பலாத்காரமாக புத்தர் சிலைகளைத் தனியார் காணிகளில் இராணுவத்தினரின் துணையுடன் அமைப்பதையே வடமாகாண சபை கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நீதியமைச்சர்...
வடக்குக் கிழக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறு அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருகின்றபோதிலும், அங்குள்ள பொதுமக்கள் இராணுவத்தினரின் பிரசன்னத்தையே விரும்புகின்றனர் என பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, பூநகரிப் பிரதேசங்களில் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் திட்டத்தின்கீழ் சூரியசக்தியினால் இயங்கும் இயந்திரங்கள் கையளிக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றையதினம்...
வடக்குக் கிழக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் 80 வீதமான வீடுகளை செங்கல்லினால் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும் வீட்டுத் திட்ட இழுபறி நிலமை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் ஒன்றை நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் வடக்கு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிவைப்பதில் தமக்கு எந்தப் பிரச்சனையுமில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்....
புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில் புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக, மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவைப் பெறுவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலின்போது சிறீலங்கா அரசாங்கம்...
வடபகுதி கடற்பரப்பில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் உதவியுடன் அத்துமீறும் தென்னிலங்கை இழுவைப் படகுகளை விரட்டியடிப்பதற்கு ஆயுதம் ஏந்துவதை தவிர வேறு எந்த வழியும் இல்லை என்று வடமாகாண கடற்தொழில் சமூகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அட்டகாசங்களை விட கடலுடன் எவ்வித தொடர்பும் இல்லாத இராணுவத்தின் அட்டீழியங்கள் அதிகரித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட வடபகுதி மீனவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். வடமாகாண கடற்தொழிலாளர் இணையம்,...
தமிழர் தரப்பினால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் மற்றும் அநியாயச் செயல்களுக்காக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடக பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து...
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது 2001 ஆம் ஆண்டு தாக்குதல் நடாத்தியமை தொடர்பான வழக்கில் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ள நெப்போலியன் எனும் நபர் பிரபல ஊடகவியலாளரான மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர் ஆவார். கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி இரவு 8 மணியளவில் நிமலராஜன் வீட்டில்...
கடந்த அரசாங்கமானது முன்னாள் போராளிகளுக்கு முறையான ரீதியில் புனர்வாழ்வளிக்காமல் விடுவித்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அதனால் வடக்கிலிருந்து எக்காரணம் கொண்டும் இராணுவத்தை வெளியேற்ற முடியாதென குறிப்பிட்டுள்ளார். நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் செலவீனங்கள் தொடர்பான குழுநிலை விவாதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தினால் புனரவாழ்வளிக்கப்பட்டவர்கள் எங்கு உள்ளனர் என தெரியாத...
Loading posts...
All posts loaded
No more posts
