- Monday
- June 9th, 2025

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளை உயர் தரப் பரீட்சைக்கு இடையூறு ஏற்படாத வகையில் முன்னெடுக்குமாறு தேர்தல்கள் செயலகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது தேர்தல்கள் ஆணையாளர் இது தொடர்பிலான ஆலோசனைகளை வழங்கியதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தேர்தல் பரப்புரைப் பணிகளால் அசௌகரியம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பரீட்சார்த்திகள்,...

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரங்களை நடத்தும் கட்சிகள் இந்தியாவின் தேர்தல் பிரசாரங்களைப் பின்பற்றி, இசைக் கச்சேரிகள் நடத்தி தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 31ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்;ப்பாணம் வருகை தந்த போது, ஐக்கிய தேசியக் கட்சியால் ஒழுங்கு செய்யப்பட்ட தேர்தல் பிரசார நிகழ்வில், இந்தியாவில் பிரசித்திபெற்ற சுப்பர்...

வருமானத்துக்காக இனமானதையும் தன் மானத்தையும் விற்பதற்கு தமிழர் விடுதலை கூட்டணி ஒரு போதும் தயாராக இல்லை என்பதை இந்த வேளையில் தெரிய படுத்தி கொள்கின்றேன் என கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் தமிழர் விடுதலை கூட்டணி வேட்பாளர் நாகேந்திரன் டர்ஷன் தெரிவித்துள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் வேறு ஒரு மாவட்டத்தில் போட்டியிட்டு தோற்றதன் பின்னர் தேசிய பட்டியலில்...

த.தே.ம.முன்னணி வேட்பாளர் கோகிலவாணி விஞ்ஞாபன நிகழ்வில் ஆற்றிய உரையில் இது முடிவு செய்ய வேண்டிய நேரம். நாங்கள் ஒரு திருப்புமுனைக் காலகட்டத்தில் இருக்கின்றோம் என தெரிவித்தார் அவரது உரை முழுமையாக.... பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய எம் தாயக உறவுகளே, உங்களுக்கு என் வணக்கம்! காலத்துயர் சுமந்தவர்களாக் கண்களில் வெறும் நம்பிக்கைகளை மட்டுமே தேக்கி வைத்துக் கொண்டு இங்கே...

தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படுவதற்கு நிலப்பரப்பு, தனித்துவமான மொழி, கலாசாரம் மற்றும் பொருளாதாரம் என்ற 4 விடயங்கள் அடிப்படையாக இருக்க வேண்டும். ஆனால் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போதும், போர் நிறைவடைந்த பின்னரும் எங்கள் தேசத்தின் அங்கீகாரத்தை சிதைப்பதற்காக, தேசத்தின் அங்கீ காரத்திற்கு அடிப்படையான விடயங்கள் மீதான கட்டமைப்புசார் இன அழிப்பு நன்கு திட்டமிட்டவகையில்...

ஆசிரியர், பொலிஸ் அதிகாரிகளுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது. அதன்படி, பொலிஸ் நிலையங்களிலும் வலய அல்லது கோட்டக் கல்வி அலுவலகங்களிலும் இன்று தபால்மூல வாக்கெடுப்பு நடைபெறுகின்றது. குறித்த தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. தபால் மூல வாக்காளர்களின் அடையாளம் இடப்பட்ட வாக்குச்சீட்டை எவரும் பார்க்க முடியாத வகையில்...

தபால் மூல வாக்களிப்பு இன்று நடைபெற்று வரும் நிலையில், வாக்களிப்பு நிலையத்தினருகில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நேர்ந்தால், வாக்காளர்கள் அச்சுறுத்தப்பட்டு அல்லது வற்புறுத்தப்பட்டால் குறித்த இடத்தின் வாக்கெடுப்பு உடன் ரத்துச் செய்யப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வாக்களிப்பு நிலையத்திற்கு அருகில் வேட்பாளர்களின் பதாதைகளை காட்சிப்படுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் தேர்தல் சட்ட விதிகளை மீறும்...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் - 2015 - தேர்தல் விஞ்ஞாபனம் பின்னணியும் அறிமுகமும் தமிழர் தேசத்தின் இறைமை காலனித்துவவாதிகளிடம் எமது இறைமையை இழக்கும் வரை, தமிழர் தேசம் இறைமையும் ஆட்சி உரிமையும் கொண்ட தனியான தாயகத்தை இலங்கைத்தீவில் வரலாற்றுரீதியாகக் கொண்டிருந்தது. முழு இலங்கைத்தீவும் 1833 இல் ஆங்கிலேய...

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசில் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)யின் முதலாவது மாபெரும் பொதுக்கூட்டம் வரலாறு புகழ்மிக்க வல்வை மண்ணில் நடை பெற்று கொண்டு உள்ளது. கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவுவிடம் மற்றும் மூத்த தளபதிகள் லெப் கேணல் குமரப்பா, லெப் கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் நினைவுவிடம் அமைந்துள்ள தீருவிலில்...

தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக விஷேட குழுவொன்றை அனுப்பி வைக்க தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளது. இம்முறை பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை இடம்பெறவுள்ளதோடு எதிர்வரும் 5ம் மற்றும் 6ம் திகதிகளிலும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நாளையதினம் கல்வி திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளதாக...

எமக்கெதிராக பெரும்பான்னை அரசு தொடுக்கின்ற அடக்குமுறைகளை நாம் தடுக்க வேண்டுமானால் எமது தேசம் அங்கிகரிக்கப்பட்டால் மாத்திரமே அது நடைமுறைச்சாத்தியம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ் முகாமையாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தேர்தல் கேள்வி நேரம் எனும் நிகழ்வில் தமது கட்சியின்...

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஈழத்தமிழர்கள் மத்தியில் பிரபலமான பாடகர்கள் சிலரும் பங்கேற்றிருந்தது, புலம் பெயர் தமிழர்கள் மற்றும், ஈழத்தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் காலூன்ற முனையும் சிங்களப் பேரினவாதக் கட்சி ஒன்றுக்கு ஆதரவான பிரசாரக் கூட்டத்தில் சூப்பர் சிங்கர்...

1981 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் சட்டம் வீட்டிற்கு வீடு சென்று வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்வதை தடுக்கின்றது (ஆதரவாளர்களுக்கு பிரச்சாரம் செய்ய தடை இல்லை). அத்தோடு பொது இடங்களிலும் பிரச்சாரம் செய்வதை தடுக்கின்றது. ஆனால் அண்மையில் கட்சிகள் யாவற்றினதும் சம்மதத்துடன் மக்களுக்கு இடையூறு இல்லாமல் பொது இடங்களில் பிரச்சாரம் செய்வதை அனுமதிக்கும் அறிவித்தலை தேர்தல் ஆணையாளர்...

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம், இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கென தேர்தல்கள் செயலகத்திடமிருந்து நேற்றைய தினம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள், தபால் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. இன்று ஆரம்பிக்கப்படும் இவ் விநியோக நடவடிக்கையானது, எதிர்வரும் 10ஆம் திகதியுடன் நிறைவடையுமென தபால் மா அதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்துள்ளார். குறிப்பாக...

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று ஜூனியன்குளம் அக்கராயனில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் யாழ் மாவட்டத்தில் இலக்கம் 10 இல் போட்டியிடும் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் நடை பெற்றது. இக் கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் கிளிநொச்சியை பிரதிநிதிப்படுதும் இலக்கம் 9 இல் பேட்டியிடும் முன்னை நாள் போராளியும்...

கட்சி எல்லைகளிற்கப்பால் பெண்போராளியென்ற வகையிலும் தனது இரண்டு சகோதரர்களையும் மாவீரர்களாக மண்ணிற்கு கொடுத்த சகோதரியென்ற வகையிலும் கோகிலவாணிக்கு தனது ஆதரவையும் வரவேற்பினையும் வடமாகாணசபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். எவ்வாறு வடமாகாணசபை உறுப்பினரான அனந்தியால் ஜெனீவர் வரை சென்று உரையாற்ற முடிந்ததோ அதே போன்று கோகுலவாணியாலும் முடியுமெனவும் அவர் தெரிவித்தார். இணையத்தளமொன்றுக்கு வழங்கிய...

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாதவர்களோ, தேசியப் பட்டியலில் பெயரிடப்படாதவர்களோ, நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படமாட்டார்கள் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேசியப் பட்டியலில் அந்தந்த கட்சிகளினால் பெயரிட்டு வெளியிடப்பட்டுள்ள உறுப்பினர்களைத் தவிர்ந்த வேறு எவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேசியப் பட்டியல் ஊடாக பதவி வகிக்க இம்முறை அனுமதிக்கப்படாது. தேர்தல் சட்டத்திற்கு அமைய இந்த விடயம்...

ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக, தனியார் கம்பனிகளில் தொழில் புரிவோருக்கு கடமை நேர விடுமுறை வழங்கப்படல் வேண்டும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. கடமை நேர விடுமுறையானது தூரம் மற்றும் தேர்தல் நேரம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு வழங்கப்படவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான விஞ்ஞாபனம், யாழ். மருதனார்மடம் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொதுச்சந்தை வளாகத்தில் சனிக்கிழமை (25) மாலை வெளியடப்பட்டது. இதில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்த் தேசியக்...

அடுத்த மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 566,823 பேர் தகுதி பெற்றுள்ளனர். நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 628,925 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 566,823 பேர் தகுதிபெற் றுள்ளனரென பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். அந்தவகையில் அதில் 62,102 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதேவேளை தபால் மூலம் வாக்களிப்பதற்கான...

All posts loaded
No more posts