Ad Widget

உயர்தர பரீட்சைக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேர்தல் பரப்புரைகளை முன்னெடுக்குமாறு தேர்தல்கள் செயலகம் அறிவுறுத்தல்

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளை உயர் தரப் பரீட்சைக்கு இடையூறு ஏற்படாத வகையில் முன்னெடுக்குமாறு தேர்தல்கள் செயலகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது தேர்தல்கள் ஆணையாளர் இது தொடர்பிலான ஆலோசனைகளை வழங்கியதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தேர்தல் பரப்புரைப் பணிகளால் அசௌகரியம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பரீட்சார்த்திகள், பரீட்சை நிலையங்களின் பொறுப்பதிகாரிகளிடம் முறையிட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் உயர் தரப் பரீட்சைக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேர்தல் பரப்புரைப் பணிகளை முன்னெடுக்குமாறு தேர்தல் கண்காணிப்பாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் காலத்தில் இசைக் கச்சேரி மூலம் தேர்தல் பிரசாரம்!!

Related Posts