- Monday
- June 9th, 2025

யாழ்ப்பாணம் தேர்தல் அதிகார பிரதேசத்துக்குள் மட்டும் போட்டியிடுவதற்காக சமர்ப்பித்த தங்களுடைய வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளும்வரை, பொதுத்தேர்தல் நடத்துவதை இடைநிறுத்திவைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடத்தவிருந்த தேர்தலையே இடைநிறுத்துவதற்கான உத்தரவை தேர்தல்கள் ஆணையாளர் உள்ளிட்ட குழுவினருக்கு பிறப்பிக்குமாறு அந்த மனுவில்...

தேல்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 115 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதேவேளை தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பான முறைப்பாடுகள் இதுவரை 92 பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தேர்தல் முறைப்பாட்டு பிரிவு தெரிவிக்கின்றது. இதுதவிர தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 506 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் திணைக்களத்தின் தேர்தல் முறைப்பாட்டு...

தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்டு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்கள் வாழ வேண்டும் என்பதற்காக நாங்கள்செயற்படுகின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் வியாழக்கிழமை (23) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்அறிமுகமும் ஊடகவியலாளர்சந்திப்பும் நடைபெற்றது. அவ் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத்தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், தேர்தல்...

சிறிலங்காவின் பொதுத்தேர்தலில் தமது கொள்கை நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி அவற்றின்படி சொல்லிலும் செயலிலும் இயங்குபவர்களை அடையாளம் கண்டு மக்கள் தமது பிரதநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டுகின்றோம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல் விடுத்துள்ளார். இத் தேர்தலில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய ஐந்து கொள்கை நிலைப்பாடுகள் சிலவற்றை மக்கள்...

கோகிலவாணி ஆயுதப் போராட்டத்தில் நேரடியாக பங்கெடுத்தவர். 16 வயதில் போராட்டத்தில் இணைந்து கொண்டவர். ஐக்கிய அமெரிக்கா நாடுகளின் சர்வதேச வருகையாளர் தலைமைத்துவ செயற்திட்டதில் (International Visitor Leadership Programme) பங்குபற்றியவர். 2014 நவம்பரில் இருந்து USAIDஇன் நிதி வசதியுடன் மீள் சுழற்சி காகித தொழிற்சாலை ஒன்றை அமைக்கும் பணியில் இணைந்து கொண்டுள்ளவர். தற்போது தமிழ்த்தேசயி மக்கள் முன்னணியில்...

கொழும்பு வாழ் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு மட்டுமல்லாது நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்குமாக தமிழர் விடுதலை கூட்டணி குரல் கொடுக்கும். நாட்டின் இன்றைய சூழ்நிலையில் தலைநகர் கொழும்பில் தொன்மையான தமிழ் கட்சி என்றவகையில் பாராளுமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். இன்று பேரினவாத கட்சிகளோடு இணைந்து மற்றவர்கள் போட்டியிடுகின்ற நிலையில் நாம் தமிழ் கட்சியும்...

தேர்தல் விதிமுறைகளுக்கு அமைவாக கட்சிகளையும் சுயேட்சைக் குழுக்களையும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு யாழ். மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் நா.வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் நீதியானதும், சமாதானமான முறையிலும் நடைபெற ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமென அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் தலைவர்களுடன் நேற்று புதன்கிழமை கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. சட்டவிரோதமான...

தமிழ் மக்களின் உரிமைகளையும், தேவைகளையும் போராடி பெற்றுக் கொண்டதாக வரலாறு எமக்கு கற்பிக்கின்றது. தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சிந்தனையும் அதுவே மக்கள் மயப்படுத்தப்பட்ட இயக்கமாக நாம் உரிமைகளையும், எங்கள் தேவைகளையும் பெற்றுக் கொள்வோம் என்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்கிழமை மாலை யாழ்.மணியந்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பின்போதே...

இந்த நாட்டை ஆள மீண்டும் மஹிந்தவுக்கு வாய்ப்பளிக்கக்கூடாது என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்:- நாங்கள் இந்த நாட்டு மக்களின் அபிலாஷைகளை வெற்றிகொள்வதற்காகவே ஒன்றிணைந்துள்ளோம். கடந்த ஜனவரி 8ஆம் திகதி வெற்றிகொண்ட ஜனநாயகத்தைத் தொடர்ந்து கொண்டுசெல்லவேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள 5 இலட்சத்து 29ஆயிரத்து 239பேருக்காக 621 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆரம்ப கட்ட வேலைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. வாக்கெடுப்பு நிலையங்கள் , வாக்கெண்ணும் நிலையங்களுக்கான பாதுகாப்பு முன்னெற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன....

சர்வதேச ரீதியான நெருக்கடியில் இருந்து இலங்கை அரசாங்கத்தினை முழுமையாக பாதுகாக்கும் வகையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டுவருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளருமான எஸ்.கஜேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் கோவிந்தன் வீதியில் சனிக்கிழமை அகில இலங்கை தமிழ்காங்கிரசின் அலுவலகத்தினை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், கிழக்கு...

தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளுக்காக மதவழிபாட்டுத்தலங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் அவ்வாறு பயன்படுத்தினால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்கள் மதவழிபாட்டு தலங்களை துஷ்பிரயோகம் செய்து வருவதாக தெரியவருகின்றது. ஓருவர் 1981ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின்படி இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் ஓருவர் குற்றவாளி...

நீதியானதும் - சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். அரச நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்குச் சொந்தமான சொத்துகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தக்கூடாது என்றும், ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி செயலாளர் பி.பீ.அபயகோனுக்கே இந்த ஆலோசனையை ஜனாதிபதி மைத்திரிபால வழங்கியுள்ளார் என ஜனாதிபதி செயலக அலுவலகம்...

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்துள்ள முன்னாள் பிரதிஅமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின மத்திய குழு உறுப்பினருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், ராஜபக்சக்களை கடுமையாக சாடியிருக்கிறார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நாடாளுமன்றத் தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில்,“கடந்த அதிபர் தேர்தலில்...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பான விரிவான விளக்கத்தை தேசிய அமைப்பளர் திரு விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.தமிழ்த்தேசம் தனது உரிமை தொடர்பான பேச்சுவார்த்தைகள் சிங்களதேசதேசத்துடன் நடத்துவதற்கு முன்பாக வடகிழக்கு பகுதிகளை உள்ளடக்கி தமிழ்த்தேசிய அவை ஒன்று நிறுவப்படும். அவ்விதம் நிறுவப்படும் தமிழ்த்தேசிய அவையானது சிங்களதேசத்துடன் வலுச்சமநிலையில் இருந்தவாறு பேச்சுவாத்தைகளைத் முன்னெடுக்கும்.என அவர்...

பொதுத் தேர்தல் தொடர்பில் 304 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. சட்டவிரோதமாக வழங்கப்பட்ட நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பில் அதிகப்படியான 118 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது. இதனைத் தவிர சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் காட்சிபடுத்தப்பட்டமை குறித்து 44 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக முறைப்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. பொருட்கள்...

யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 15 ஆயிரம் பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஓகஸ்ட் 03 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு கடந்த 14 ஆம் திகதி வரை கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் தபால்...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட நடுவப்பணியகம் சனிக்கி்ழமை (18) திறந்துவைக்கப்பட்டதோடு திருகோணமலை மாவட்ட வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வும் நடைபெற்றது.திருகோணமலை திருஞானசம்பந்தன் வீதியில் அமைந்துள்ள நடுவப்பணியகத்தை தமிழ்த்தேசியக் மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், திருமலை மாவட்டமுதன்மை வேட்பாளர் இரா ஸ்ரீ ஞானேஸ்வரன் மற்றும் திருமலை லட்சுமி நாராணயன் கோயில்உரிமையாளர் ராதாகிஸ்ணன் ஆகியோர்...

தமிழ்த்தேசிய வழியில் நிற்கும் வேட்பாளர்களை தமிழ்மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் – சி.கஜேந்திரகுமார்
தமிழ்மக்களின் நலன்களில் அக்கறையுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்களை தமிழ் மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் என அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.கஜேந்திரகுமார் தெரிவித்தார். கட்சியின் ஆதரவாளர்களிடையே தொடர்ந்து பேசுகையில் தமிழ்த்தேசிய வழியில் நிற்கும் ஒரே கட்சி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மட்டுமே...

"பாராளுமன்றத் தேர்தல்களில் தமிழர் பங்குபற்றுவதானது வெறுமனே கட்சியரசியலில் ஈடுபடுவதற்காக மட்டுமன்று. பாராளுமன்ற அரசியல் எமக்கு கடந்த காலத்தில் விடுதலையைப் பெற்றுத் தரவில்லை. அதனால் தான் நமது இனம் ஆயுதம் தாங்கி போராட்டம் ஒன்றை நடாத்தியது. இன்றைய சூழலிலும் பாராளுமன்ற அரசியல் மூலம் - பாராளுமன்றத்தில் ஆசனங்களை அதிகமாக்கிக் கொள்வதன் மூலம் மட்டும் - தீர்வைப் பெற்றுக்...

All posts loaded
No more posts