- Friday
- June 20th, 2025

நாடளுமன்றத் தேர்தலில் இடம்பெறும் வன்முறைகள் குறித்து தேர்தல் ஆணையாளருக்கு உடனடியாக அறிவிக்கும் விதத்தில் 'ஆணையாளருக்கு கூறுங்கள்' எனும் பெயரில் முகப்புத்தகக் கணக்கு (Facebook Account) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முகப்புத்தகத்தின் மூலம் செய்திகள் வேகமாகப் பரவுகின்றமையும், அதன் தாக்கம் அதிகரித்து இருப்பதனாலுமே 'ஆணையாளருக்குக் கூறுங்கள்' என்ற முகப்புத்தகப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் வன்முறைகளை இலகுவாகவும் விரைவாகவும்...

தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாட்ட வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் வெளியாகிஉள்ளன. வாக்காளர்கள் சைக்கிள் சின்னத்தின் முன்னாலும் பின்னர் விரு்ம்பிய 2 வேட்பாளர்கள் முன்னாலும் வாக்களிக்க முடியும் (1) விரிவுரையாளர் அமிர்தலிங்கம் இராசகுமாரன் (யாழ் பல்கலைக்கழக முன்னாள் ஆசிரியர் சங்க தலைவர்) (2) சி.ஆனந்தி (ஓய்வுபெற்ற அதிபர்- இராமநாதன்...

இன்று கொழும்புமாவட்டத்தில் ஆனந்த சங்கரியின் தலைமையில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது.அதில் கருத்து தெரிவித்த தமிழர் விடுதலை கூட்டணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் நாகேந்திரன் டர்ஷன் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் உள்ள மூவின மக்களையும் ஒருங்கிணைத்து யாதி பேதங்களையும் கடந்த கால கசப்பான அனுபவங்களையும் மறந்து தமிழர் விடுதலைக்கூட்டணி ஜனநாயக கட்சியோடு...

தேர்தல் காலத்தில் அபேட்சகர்களும் ஊடக நிறுவனங்களும் முன்னெடுக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று விளக்கமளித்துள்ளார். தேர்தல்கள் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். தேர்தல் காலத்தில் வேட்பாளர்களுக்கு வீடுவீடாகச் சென்று பிரசார நடவடிக்கையில் ஈடுபட முடியாது என பொலிஸார் ஊடகங்களில்...

நடைபெற உள்ள இலங்கை பாராளுமன்றத்தேர்தல் தொடர்பில் தமிழ்மக்களின் முன் முக்கிய போட்டித்தெரிவுகளாக வீட்டுச்சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் இருக்கின்றன. வழமைபோல இணையத்தளங்கள் தேர்தல் கருத்துக்கணிப்புக்களை மேற்கொண்டவண்ணம் உள்ளன. இன்று ஒவ்வொருவரும் எதோ ஒரு வகையில் இணையத்துடன் இணைந்துள்ள நிலையில் சமூகவலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களின் கருத்துக்கள் வாக்காளர்களிள் எண்ணங்களை பிரதிபலிப்பவையாக...

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அந்தவகையில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கும் அவர்களுக்கான இலக்கங்கள் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான இலக்கங்களும் வருமாறு, அருந்தவபாலன் கந்தையா- 01 , ஆனந்தராஜ் நடராஜா-02, ஆபிரகாம் சுமந்திரன் மதியாபரணம்-03, ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன்-04, ஈஸ்வரபாதம் சரவணபவன்-05,...

சட்டவிரோத தேர்தல் செயற்பாடுகளை வீடியோ செய்து மின்னஞ்சல் மூலம் முறைப்பாடு செய்யும் புதிய முறையொன்றை பொலிஸ் திணைக்களம் அறிமுகம் செய்துள்ளது. வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்தல், வாக்கு பெறுவதற்காக அன்பளிப்புகள் வழங்குதல், ஊர்வலம் நடத்துதல் அடங்கலான சட்டவிரோத தேர்தல் நடவடிக்கைகளை வீடியோ செய்து அறிவிக்குமாறு பொதுமக்களை கோருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர...

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பிரச்சாரக்கூட்டம் தமிழர்களின் தலைநகரான திருகோணமலையில் வருகின்ற 18.7.2015 வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளது. முன்னதாக வேட்புமனுத்தாக்கலை அம்பாறையில் ஆரம்பித்து வன்னியில் முடித்தது. தற்போது பிரச்சாரக்கூட்டத்தினை தமிழர்களின் கோட்டை எனப்படும் கோணமலையில் ஆரம்பிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினம் திருகோணமலையில் முன்னணியின் தலைமைச்செயலகமும் ஆரம்பித்துவைக்கப்பட உள்ளது. மக்களை திரண்டுவந்து தமிழ்தேசிய அரசியல் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கான...

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் சைக்கிள் சின்னத்தில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று காலை யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையிடமும், நல்லை ஆதீன குருமகா சந்நிதானம் அவர்களிடமும், சமூக சேவையாளரும் இந்து மத பெரியாருமான ஆறுதிருமுருகன் அவர்களிடமும் ஆசீர்வாதத்தினை...

இலங்கைத் தமிழரசுக்கட்சி தேசியப்பட்டியல் விபரம்.. 01. திரு.சி.க.சிற்றம்பலம் 02. திரு.சொலமன் சிறில் 03. திரு.மயில்வாகனம் தேவராஜ் 04. திரு.சூ.செ.குலநாயகம் 05. திரு.வி.கனகநமநாதன் 06. திரு.அ.குணபாலசிங்கம் 07. திருமதி.நாச்சியார் செல்வநாயகம் 08. திரு.அந்தோனிப்பிள்ளை மேரியம்மா 09. திருமதி.மேரிகமலா குணசீலன்

நாம் கடந்த 5 வருடங்களாக என்ன செய்தோம் என்று கேட்பவர்கள் உண்டு. தமிழர் தாயகத்தில் பல்வேறு பட்ட பிரச்சனைகளுக்கு போராட்ட களத்தினை திறந்து வைத்தவர்கள் நாமே. முல்லைத்தீவு கேப்பாபிலவில் முழுக் கிராமம் பறி போன போது தமிழரின் ஏக பிரதிநிதிகள் தாமே என்று சொல்லிக் கொண்டோர் மௌனமாக இருந்தனர். நாமே அம்மக்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தினோம்...

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களது ஆதரவாளர்கள் சட்டத்தை மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், பொதுமக்களுக்கு தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது குறித்த முறைப்பாடுகளை தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் அறிவிக்க முடியும் என, பொலிஸ் தலைமையகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வேட்புமனு வழங்கிய தினத்தில் இருந்து தேர்தல்...

225 பேர் கொண்ட பாராளுமன்றத்தில் 196 பிரதிநிதிகளை நேரடியாக தெரிவு செய்வதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கென 6,151 வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் கையளித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இவர்களில் அரசியல் கட்சிகள் சார்பாக 3,653 வேட்பாளர்களும், சுயேச்சை குழுக்கள் சார்பாக 2,498 வேட்பாளர்களும்...

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் சிவபாதம் கஜேந்திரகுமார் தலைமையில் வன்னியில் வேட்புமனுவை கையளித்தனர். இதில் வவுனியா நகரசபையின் முன்னாள் தலைவர் எஸ்.என்.ஜீ.நாதன், சிவரதி ராஜ்குமார், வீ.திகாஸ் விக்னேஸ்வரன், இந்திராணி விவேகானந்தன், செ.பாலசுப்பிரமணியம், க.பார்த்தீபன், ப.ஜனன், முன்னாள் போராளியான இ.பிரபாகரன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். ஊடகங்களுக்கு கருத்துத்...

இலங்கை தமிழரசுக் கட்சி திருந்த வேண்டும் என்பதே எனது நோக்கம் என அனந்தி சசிதரன் கூறியுள்ளார் இதுதொடர்பிலான ஊடக அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது நான் பாராளுமன்ற அரசியலுக்குள் நுழைய என்றுமே விரும்பியதில்லை. எனது கணவர் மற்றும் அவரைப் போன்று காணாமல் ஆக்கச் செய்யப்பட்டோரைக் கண்டறிவதற்கான முயற்சிகளிலேயே நான் முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்தேன். கடந்த வருடங்களில் தமிழ்த தேசியக் கூட்டமைப...

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலை வர் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் கொழு ம்பு மாவட்டத்தில் களமிறங்கியுள்ள வேட்பாளர் பட்டியலில் ஜனநாயகக் கட்சியின் மேல்மாகாண சபை உறுப்பினர் சுசில் ஹிந்தல்பிட்டியவும் இடம்பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் கூட்டணியின் நிர்வாகச் செயலாளர் இரா.சங்கையா, நாகேந்திரன் தர்ஷன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். கூட்டணியின் பட்டியலில் உள்ள ஏனைய வேட்பாளர்களின் விபரம் வருமாறு வீரசிங்கம் ஆனந்தசங்கரி,...

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியை அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்தும் வற்புறுத்தி வந்தபோதும் அவரது உடல் நிலையை காரணம் காட்டி அவரிற்கு இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை அதனால் தனது சார்பாக இன்னும் ஒரு சட்டத்தரணிக்கு வேட்பாளர் நியமனம் வழங்குமாறு தமிழ் தேசிய...

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்திற்குள் த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் சுமந்திரன் தொலைபேசியில் உரையாடியமை ஊடாக தேர்தல் திணைக்களத்திற்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் தொடர்புகள் உள்ளதாகவும், முறைகேடுகள் நடைபெறும் எனவும் ஈ.பி.டி.பி சுமத்திய குற்றச்சாட்டை கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. இன்றைய தினம் வேட்புமனுத் தாக்கல் செய்ததன் பின்னர் வேட்புமனுக்கள் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்கும் நேரத்தில், தேர்தல் திணைக்களத்திலிருந்து...

யாழ்மாவட்ட தேர்தலில் கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் ஒரே பார்வையில் இலங்கை தமிழரசு கட்சி 1.மாவை சேனாதிராஜா 2.மதியாபரணம் சுமந்திரன் 3.கந்தையா பிரேமசந்திரன் 4.தர்மலிங்கம் சித்தார்த்தன் 5.சிவஞானம் சிறிதரன் 6.ஈஸ்வரபாதம் சரவணபவன் 7.அருந்தவபாலன் கந்தையா 8.மதினி நெல்சன் 9.ஆணந்தராஜ் நடராஜா 10. கந்தர் நல்லதம்பி ஸ்ரீகாந்தா அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1.கஜேந்திரகுமார் காங்கேயர் பொன்னம்பலம் 2.செல்வராசா...

கறைபடியாத கைகளுடன் நாங்கள் இளம் கல்விமான்களுடன் களத்தில் இறங்கியுள்ளோம்.என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதம வேட்பாளரான அங்கஜன் ராமநாதன் தெரிவித்தார். அனைவரும் மாற்றம் தேவை என்பர். நாம் கேட்கும் மாற்றம் வித்தியாசமானது.ஆனால் நாம் கேட்கும் மாற்றம் எங்களை போன்ற சாதாரண அரசியல் பின்புலம் இல்லாத கறைபடியாத கைகளுடன் யாழ்.மாவட்டத்தைச்...

All posts loaded
No more posts