Ad Widget

தேர்தல் வன்முறைகளை முகப்புத்தகம் மூலம் முறையிடலாம்!

நாடளுமன்றத் தேர்தலில் இடம்பெறும் வன்முறைகள் குறித்து தேர்தல் ஆணையாளருக்கு உடனடியாக அறிவிக்கும் விதத்தில் ‘ஆணையாளருக்கு கூறுங்கள்’ எனும் பெயரில் முகப்புத்தகக் கணக்கு (Facebook Account) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முகப்புத்தகத்தின் மூலம் செய்திகள் வேகமாகப் பரவுகின்றமையும், அதன் தாக்கம் அதிகரித்து இருப்பதனாலுமே ‘ஆணையாளருக்குக் கூறுங்கள்’ என்ற முகப்புத்தகப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தேர்தல் வன்முறைகளை இலகுவாகவும் விரைவாகவும் கட்டுப்படுத்தலாம் என்று தேர்தல்கள் திணைக்களம் நம்புகிறது.

முகநூல் முகவரி:- https://www.facebook.com/groups/tellcommissioner/?fref=ts

Related Posts