Ad Widget

தபால் மூல வாக்களிப்பு யாழில் தீவிரம்

ஆசிரியர், பொலிஸ் அதிகாரிகளுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது.

அதன்படி, பொலிஸ் நிலையங்களிலும் வலய அல்லது கோட்டக் கல்வி அலுவலகங்களிலும் இன்று தபால்மூல வாக்கெடுப்பு நடைபெறுகின்றது.

குறித்த தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.

தபால் மூல வாக்காளர்களின் அடையாளம் இடப்பட்ட வாக்குச்சீட்டை எவரும் பார்க்க முடியாத வகையில் சுதந்திரமாகவும் இரகசியமாகவும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் வாக்காளர்கள் தமக்குரிய வாக்களிப்பு நிலையத்திற்கு அலுவலக நேரத்திற்குள் சென்று அச்சமின்றி வாக்களிக்கின்றார்கள்.

இதேவேளை , தபால்மூல வாக்களிப்பு சுமூகமாக நடைபெறுவதற்கு தடைகளை ஏற்படுத்துவதற்கோ அல்லது வாக்காளர்களை வற்புறுத்தவோ முயற்சித்தால் அவ்விடத்தில் வாக்கெடுப்பு உடனடியாக ரத்துச் செய்யப்படுமெனவும் தேர்தல்கள் ஆணையாளர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts