Ad Widget

நடமாடும் சேவை!

யாழ்.ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 28 ஆண்டு கால மனித நேய சேவை நிறைவை முன்னிட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமை காலை 09 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பூநகரி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள முழங்காவில் ஆதார வைத்தியசாலை வளாகத்தில் விசேட நடமாடும் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் போது மருத்துவ உபகரணங்கள்...

 மாணவிகள் மூவரைக் காணவில்லை என முறைப்பாடு

கிளிநொச்சி பகுதியில் பாடசாலை மாணவிகள் மூவரை காணவில்லை என திங்கட்கிழமை (06) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சியில் பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் சாதாரண தர மாணவிகள் மூவரும் திங்கட்கிழமை (06) மாலை வீட்டிலிருந்து வெளியில் சென்று பின்னர் வீடு திரும்பவில்லை என்று அவர்களுடைய பெற்றோர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு...
Ad Widget

56 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து ஆபாசப்படம் எடுத்தவருக்கு வலைவீச்சு!

முல்லைத்தீவின் துணுக்காயில் 56 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுடன், ஆபாசப்படங்கள் எடுத்த ஒருவர் தொடர்பாகத் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார் என்றும் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர். பெண்களை துஷ்பிரயோகம் செய்த குறித்த நபர் அரசியல் கட்சி...

கிளிநொச்சி சிறுமி விற்பனை? அல்லது சிறுமியை காட்டேரி கடத்தியிருக்கலாம்!!!

கடந்த மே மாதம் 21ஆம் திகதி மாலை 4 மணியிலிருந்து காணாமற்போன கிளிநொச்சி, சத்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் யர்ஷிகா (வயது 03) என்ற சிறுமியை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பது குறித்து கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று இரணைமடு தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி காரியாலயத்தில் புதன்கிழமை (01) நடைபெற்றது. மேலும், கிளிநொச்சி மாவட்டச்...

கே.பி. என்பவரை தவறாக புரிந்துகொண்டேன் – சுவாமிநாதன்

தன்னை தவறாக புரிந்துகொண்டிருந்ததாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்திருந்தார் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்தார். நேற்று புதன்கிழமை, முல்லைத்தீவிலுள்ள பாரதி இல்லத்துக்கு அமைச்சர் சுவாமிநாதன் சென்றிருந்தார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஒரு முகாமாகவே இந்த பாரதி இல்லத்தினை கே.பி. நடத்தி வருகிறார்....

கிளிநொச்சி மாவட்டத்தில் காணிகளை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் அவற்றை விடுவித்து மீள்குடியேறுவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடனான சந்திப்பொன்று யாழ். மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (01) நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துக் கூறுகையிலேயே மாவட்டச் செயலாளர்...

குடும்பப் பெண்ணைக் காணவில்லையென முறைப்பாடு

முல்லைத்தீவு விசுவமடுப் பகுதியைச் சேர்ந்த சுரேஸ் தேவிகா (வயது 22) என்ற ஒரு பிள்ளையின் தாயை கடந்த 23 ஆம் திகதியிலிருந்து காணவில்லையென அவரது கணவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை (29) முறைப்பாடு செய்துள்ளார். கடந்த 23 ஆம் திகதி வங்கியில் பணம் வைப்பிலிடச் சென்ற மனைவி, இதுவரையில் வீடு திரும்பவில்லையெனவும், கடந்த 7...

23 மில்லியன் ரூபா செலவில் ஏற்று நீர்ப்பாசனத் திட்டம் :முல்லை விநாயகபுரம் விவசாயிகளிடம் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கையளிப்பு

முல்லைத்தீவு விநாயகபுரத்தில் 22.7 மில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்ட ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் நேற்று வியாழக்கிழமை (25.06.2015) திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண விவசாய அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் திறந்து வைத்து, அதனை இத்திட்டத்தின் பயனாளிகளான விநாயகபுரம் விவசாயிகளிடம் கையளித்துள்ளார். போரினால் இடம்பெயர்ந்த விநாயகபுரம் மக்கள் மீளக்குடியேறியதன் பின்னர் நீர்ப்பாசன வசதிகள்...

இராணுவ வாகனம் மோதி வயோதிபர் படுகாயம்

முல்லைத்தீவு விசுவமடு ஏ-35 வீதியில் வெள்ளிக்கிழமை (26) காலை துவிச்சக்கரவண்டியில் சென்ற வயோதிபரை இராணுவ ஜீப் வாகனம் மோதியதில் படுகாயமடைந்த முதியவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். முல்லைத்தீவு விசுவமடுவைச் சேர்ந்த செல்லையா பரராஜசேகரம் (வயது 70) என்பவரே படுகாயமடைந்தார். புதுக்குடியிருப்பிலிருந்து விசுவமடு நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனம் 12ஆம் கட்டையை...

கிளிநொச்சியில் காணாமற்போன குழந்தையை தேடி களுத்துறையில் வேட்டை!

கிளிநொச்சி, உருத்திரபுரம் எள்ளுக்காடு பிரதேசத்தில் காணாமல் போன மூன்று வயது குழந்தை உதயகுமார் யர்சிகா பணத்திற்காக விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கும் நிலையில் அவரைத் தேடும் வேட்டை நேற்று தென்பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டது. பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று காலை முதல் களுத்துறைப் பகுதியில் குழந்தையைத் தேடி பூரண தேடுதல் நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டதாகவும்,...

பாதுகாப்பற்ற புகையிர கடவையால் உயிர் ஆபத்து: மக்கள் விசனம்

கிளிநொச்சி பகுதியில் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள புகையிரத பாதையை குறுக்கறுத்துச் செல்லும் வீதிகளுக்கு பாதுகாப்புக் கடவை அமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருமுறிகண்டி முதல் ஆனையிறவு வரைக்குமான பகுதிகளில் ஏ-9 வீதியில் இருந்து புகையிரத வீதியை குறுக்கறுத்துச் செல்லும் குறிப்பிட்ட சில பாதைகள் தவிர சுமார் 23 பாதைகள் புகையிரத...

 4 ஆவது நாளாகவும் சிறுமி தொடர்பில் தகவல் இல்லை

கிளிநொச்சியிலிருந்து கடந்த 21ஆம் திகதி காணாமல் போன 3வயது சிறுமி தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என கிளிநொச்சி பொலிஸார் நேற்று (24) நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். அத்துடன், சிறுமி காணமல் போன விவகாரம் தொடர்பில் கண்டறிவதற்காக நீதிமன்ற அனுமதிகள் சில பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். உருத்திரபுரம், எள்ளுக்காடு, சத்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த...

மீள்குடியேற்ற அமைச்சருடன் கூட்டமைப்பு பேச்சு

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தால் விடுவிக்கப்படாத மக்களின் காணிகளை விடுவித்து, மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பாக, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவொன்று கொழும்பில் புதன்கிழமை (24) பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், இரா.செல்வராசா, சீ.யோகேஸ்வரன்,...

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளம் பெண் சாவு!

கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் இன்று புதன்கிழமை 9.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம்பெண் ஒருவர் பலியானார். முல்லைத்தீவிலிருந்து வவுனியாநோக்கி சென்ற தனியார் பஸ், இ.போ.ச. பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்டபோது கிளிநொச்சியில் இருந்து பரந்தன் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த இந்தப் பெண்ணை தனியார் பஸ் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி...

பற்றைக்காட்டிற்குள் வளர்ந்த சிறுமிகள்!

பற்றைகளால் சூழப்பட்ட பூட்டப்பட்ட வீடு ஒன்றின் முற்றத்தில் தனிமையில் படுத்திருந்த இரண்டு சிறுமிகள் வவுனியா ஊடகவியலாளர்களால் மீட்கப்பட்டு வவுனியா வடக்கு சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம்நேற்று நடந்துள்ளது. வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதிக்கு வவுனியா ஊடகவியலாளர்கள் மூவர் நேற்று மதியம் சென்றிருந்தனர்.அப்போது, பூட்டப்பட்ட வீடு ஒன்றின் வெளி முற்றப் பகுதியில் தனிமையில்...

உருத்திரபுரத்தில் காணாமற்போன சிறுமியை கண்டுபிடிக்க மூன்றாவது நாளாகத் தேடுதல்!

கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுகாடு பகுதியில் காணாமல்போன 3 வயது சிறுமியை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கை நேற்றும் தொடர்ந்தது. குறித்த சிறுமியை தேடும் நடவடிக்கையில் பொலிஸார், கடற்படையினருடன் இணைந்து கிராம மக்களும் தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் தேடுதல் நடவடிக்கையில், இதுவரை சிறுமி தொடர்பிலான எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என...

வன்னிப் பெண்கள் சாமானியர்கள் அல்லர் அவர்கள் மீளவும் சாதித்துக் காட்டுவார்கள் – அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

வன்னிப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கென முன்மாதிரியாக அவர்களைத் தொழில் முனைவோர்களாகக் கொண்டு பயணிகள் ஓய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்குவதற்கு உதவி வழங்கும் நிறுவனங்கள் செலவிட்டுள்ள பணத்தில் ஒரு டொலரேனும் வீண் போகாது. வன்னிப் பெண்கள் சாமானியர்கள் அல்லர். அவர்கள் மீளவும் சாதித்துக் காட்டுவார்கள் என்று அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். பெண்களைப் பங்குதாரர்களாகக் கொண்ட வன்னிவள சுய...

அமைச்சர் ஹக்கீமின் அறிவிப்பால் இரணைமடு விவசாயிகள் அதிர்ச்சி!

இரணைமடு குடுநீர் விநியோகத் திட்டத்தை இரண்டு ஆண்டு இரண்டு ஆண்டுகளில் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உத்தரவிட்டிருப்பதாக நீர் வழங்கல் துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருக்கிறார். இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வழங்குவதற்காக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. இரணைமடு குடிநீர்த் திட்டத்தை முன்னெடுப்பதற்காக யாழ்ப்பாணம் பண்ணைப்...

தடையுத்தரவையும் மீறி கொக்கிளாயில் விகாரை அமைக்கும் பணி தொடர்கிறதாம்!

தடையுத்தரவை மீறி கொக்கிளாயில் விகாரை அமைக்கும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகிறது என வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் , காணிப் பிணக்குகளை தீர்க்கும் பொருட்டு முல்லைத்தீவில் இடம்பெற்ற காணி அமைச்சின் உயர் அதிகாரிகளின் நடமாடும் சேவையில் மேற்படி விகாரை அமைப்பதற்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ் மக்களின் காணிகளில்...

மஹிந்தவின் நகைகள் கறுத்ததாக புகார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகளுக்கு திருமணம் செய்து வைத்து பரிசளிக்கப்பட்ட தங்க நகைகள் கறுத்துவிட்டதாக, வட மாகாண அமைச்சரொருவருக்கு முன்னாள் போராளியொருவர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். வடமாகாண சபையும் முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் இணைந்து மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் நடத்தும்...
Loading posts...

All posts loaded

No more posts