Ad Widget

தொண்டர் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் தாக்கல்

வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர ஆசிரிய நியமனம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 100 தொண்டர் ஆசிரியர் வடமாகாண சபையின் முன்பாக வியாழக்கிழமை (08) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

பல ஆண்டுகளாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றும் தங்களுக்கு இன்னமும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லையெனவும் விரைந்து நியமனம் வழங்குமாறு கோரி இவர்கள் போராட்டம் செய்தனர்.

அவர்களைச் சந்தித்த முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோர், 6 மாதங்களுக்குள் தீர்வைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்தனர்.

Related Posts