‘கடைக்குச் சென்ற என் அம்மா எங்கே?’

முல்லைத்தீவு மாவட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்புப் போராட்டம், நேற்று (14) 69ஆவது நாளாகவும் தொடர்ந்தது. வடக்கில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போதும் அதற்கு பின்னரும் இராணுவத்திடம் சரணடைந்த நிலையிலும், மற்றும் கடத்தப்பட்டும் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது....

வரட்சியால் நெருக்கடி ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வரட்சியால் குடிநீர் நெருக்கடி ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று, ஒட்டுசுட்டான், மாந்தைகிழக்கு ஆகிய பகுதிகளில் குடிநீர் நெருக்கடி நிலவுவதன் காரணமாக குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதாகவும் குடிநீர் நெருக்கடி தொடர்பாக கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் பிரதேச சபைகள்,...
Ad Widget

கிளிநொச்சியில் 83வது நாளை எட்டியுள்ளது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம்!

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை 83வது நாளாகவும் தீர்வின்றி தொடர்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த பெப்ரவரி 20 ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டமே...

கிளிநொச்சியில் முறையற்ற அதிபர் நியமனம்

கிளிநொச்சி வட்டக்கச்சி மகா வித்தியாலயத்தின் அதிபர் நியமனத்தில் எந்த வித சட்ட திட்டங்களோ நடைமுறைகளோ பின்பற்றப்படாது தகுதியானவர்கள் இருக்கின்ற போது முறையற்ற வகையில் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கல்விச் சமூகம் குற்றம் சுமத்தியுள்ளது. 1 ஏபி பாடசாலையான கிளிநொச்சி வட்டக்கச்சி மகா வித்தியாலயத்தில் கடமையில் இருந்த அதிபர் தரம் இரண்டைச் சேர்ந்த அதிபரை 1...

தமிழ் பிரதேசங்களில் பணிக்கமர்த்தப்படும் பெரும்பான்மையின இளைஞர்கள்!

வடக்கு கிழக்கில் வேலையற்ற நிலையில் பல இளைஞர்கள் வாழ்ந்துவரும் நிலையில், அங்குள்ள அலுவலகங்களுக்கு பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பணிக்கமர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, கிளிநொச்சியில் உள்ள மத்திய அரசின் திணைக்களங்களில் நிரந்தர அலுவலக உதவியாளர்களாக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது, அங்குள்ள வேலையற்ற இளைஞர்களை மட்டுமன்றி, குறித்த அலுவலகங்களில் பல வருட காலமாக...

இரணைமாதா நகர் போராட்டத்தில் 5வது நாளாக த,தே.ம.முன்னணி பங்கேற்பு

இரணைதீவு மக்கள் தமது சொந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என கோரி இரணைமாதா நகரில் கடற்கரை ஓரமாக தகரக் கொட்டகைக்குள்ளிருந்து போராட்டம் நடாத்திவருகின்றனர். வீதியோரம் சமைத்து உண்டவாறு இரவுபகலாக தங்கியிருந்து போராடுகின்றனர். அவர்களது போராட்டத்திற்கு ஆரம்பித்த நாள் முதல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நேரில் சென்று கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 5வது...

வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டமையால் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்

இரணைத் தீவுக்கு இரண்டு வாரத்தில் செல்லலாம், இரண்டு மாதத்தில் செல்லலாம் அனுமதியை பெறுவதற்கான முயற்சியில் இருக்கின்றோம் என அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்குறுதிகளை வழங்கினார்கள். ஆனால், அந்த வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டுவிட்டோம். இதனாலேயே போராட்டத்தில் ஈடுப்பட்டிருக்கிறோம் என இரணைத்தீவு மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை ஜந்தாவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஊடகங்களுக்கு கருத்து...

தமிழ் பொலிஸ் இல்லாத காரணத்தால் அவசர முறைபாடுகளை பதிவு செய்வதில் சிரமம்

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் போதிய தமிழ் பொலிஸார் இல்லாத காரணத்தால் அவசர முறைபாடுகளை பதிவு செய்வது சிரமமாக காணப்படுகிறது என பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இது தொடர்பில் பொது மக்கள் தெரிவிக்கையில், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் போதிய தமிழ் பொலிஸார் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதனால் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு செல்கின்ற பொதுமக்கள்...

வெடிபொருள் சந்தேகத்தின் பேரில் குளப்பகுதி அகழ்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு தேவிபுரம் – நடனமிட்டான் குளப்பகுதி மற்றும் ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், குளப்பகுதி அகழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.ஷம்சுதீன் முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) இவ் அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது. எனினும் குறித்த பகுதியிருந்து வெடிபொருட்கள் எவையும் மீட்கப்படாததால், அகழ்வுப் பணி கைவிடப்பட்டது. அகழ்வு...

புதுக்குடியிருப்பில் படையெனத் திரண்ட கூட்டுறவாளர்கள்

புதுக்குடியிருப்பு நகரமே அதிர்ந்தது என்று குறிப்பிடும் அளவுக்கு நேற்று திங்கட்கிழமை (01.05.2017) புதுக்குடியிருப்பில் நடைபெற்ற கூட்டுறவாளர்களின் மேதினப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான கூட்டுறவாளர்கள் கலந்து கொண்டிருந்ததோடு நூற்றுக்கணக்கான ஊர்திகளும் பங்கேற்றிருந்தன. வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கொடி அசைத்துத் தொடக்கி வைக்க புதுக்குடியிப்பு சிவன்கோவில் முன்றலில் இருந்து பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பித்த மேதினப் பேரணியில் வடக்கு மாகாணத்தின்...

விடுதலைப்புலிகளின் கனவுகளில் ஒன்று நிறைவேறியிருக்கிறது : ஐங்கரநேசன்

விடுதலைப்புலிகள் யுத்தத்தில் மாத்திரம் ஈடுபடவில்லை. கல்வி வளர்ச்சியிலும் கூடுதல் அக்கறை காட்டினார்கள். இதனாலேயே பல்கலைக்கழகம் ஒன்றுக்குரிய கட்டுமானங்களை உருவாக்கும் நோக்கில் அறிவியல் நகரை உருவாக்கி கட்டிட நிர்மாணப் பணிகளையும் முன்னெடுத்திருந்தார்கள். இப்போது அறிவியல் நகரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாயபீடம் இயங்கி வருகிறது. நாங்களும் பண்ணையாளர்களுக்கும், எமது கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் அறிவூட்டும் நோக்கில் பிராந்திய கால்நடை...

கடற்படையினர் வசமிருந்த முள்ளிக்குளம் மக்கள் காணிகள் விடுவிக்கப்பட்டன

கடற்படையினர் வசமிருந்த முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு காணிகள் இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கடற்படையின் கட்டளைத் தளபதி தலைமையில் முள்ளிக்குளம் கடற்படை முகாமில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற காணி விடுவிப்பு குறித்த உயர்மட்ட கலந்துரையாடலை தொடர்ந்து கருத்து...

முல்லைத்தீவில் இராணுவ பஸ் மீது கல் வீச்சுத் தாக்குதல்?

முல்லைத்தீவு பகுதியில் இராணுவ பஸ் மீது கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹர்த்தால் இடம்பெற்ற போது இவ்வாறு கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு பகுதியை கடந்த போது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் குறித்து முல்லைத்தீவு காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினர் எனது பிள்ளையை பேருந்தில் ஏற்றியதைக் கண்டேன்”: தாயொருவர் சாட்சியம்

“அரசாங்கத்தை நம்பி இராணுவத்திடம் ஒப்படைத்த எமது பிள்ளைகளைப் பற்றிய தகவல்களை விரைவில் வழங்கவேண்டும்” என கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 68ஆவது நாளாக (வெள்ளிக்கிழமை) தீர்வின்றி தொடர்ந்து வருகின்ற நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாயொருவரே இவ்வாறு...

A9 வீதியை வழி மறித்து போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், ஏ-9 வீதியை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “காணாமல் ஆக்கப்பட்டோரின் விவரங்களை வெளியிட வேண்டும்” என, தெரிவித்து உறவினர்களால் குறித்த போராட்டம் கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலய முன்றலில் 67ஆவது நாளாக நேற்றம் முன்னெடுக்கப்பட்டது. 67 நாட்கள் ஆகியும் அரசாங்கம் தீர்வு எதனையும் வழங்காத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் ஏ-9 வீதியை வழி...

ஹர்த்தாலிற்கு ஒத்துழைத்து போராட்டத்தை பலமடையச் செய்யுங்கள்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

எதிர்வரும் 27ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தாலிற்கு ஒத்துழைப்பு வழங்கி போராட்டத்தினை பலமடையச் செய்யுமாறு, கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்தராஜா லீலாதேவி தெரிவித்துள்ளார். நேற்றயதினம் (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில் எங்களுடைய...

முன்னாள் போராளி ஒருவர் உட்பட இருவர் சுட்டுப்படுகொலை!

வெளிநாட்டு முகவர் ஒருவரினால் புலம்பெயர்ந்து சென்ற முன்னாள் போராளி ஒருவர் உட்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் ஈரான் எல்லைப்பகுதியில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கிறது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு செல்லும் நோக்கில் முல்லைத்தீவு செம்மலை மற்றும் உடுப்புக்குளம் பகுதிகளைச் சேர்ந்த இருவர் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புறப்பட்டிருக்கின்றனர். வெவ்வேறு...

கேப்பாப்புலவில் 189 ஏக்கர் தனியார் காணி 6 வாரங்களில் விடுவிக்கப்படும்

முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் 189 ஏக்கர் விஸ்தீரனமான தனியார் காணிகள் நிதிஒதுக்கீடுகள் கிடைத்ததன் பின்னர், 6 வாரங்களில் விடுவிக்கப்படும் என்று, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா உறுதி அளித்துள்ளார். அதேபோல், முள்ளிக்குளம் மக்களுக்குச் சொந்தமான விவசாயக் காணிகளை, தேசிய காணி விடுவிப்பதற்கான நடைமுறையின் கீழ் விடுவிக்க கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர...

முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த கால்பந்து சுற்றுப் போட்டி : அக்கினி சிறகுகளிடம் ரி.ஐ.டி விசாரணை?

அக்கினிச் சிறகுகள் அமைப்பைச் சேர்ந்த சிலரிடம், பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ”நொக் அவுட்” முறையிலான கால்பந்து சுற்றுப் போட்டியை, அக்கினிச் சிறகுகள் அமைப்பு, கிளிநொச்சியில் நடத்திவருகிறது. இதில், வடக்கு, கிழக்கிலுள்ள விளையாட்டு சங்கங்கள் பங்குபற்றுகின்றன. முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த தினத்தை அடிப்படையாக கொண்டே, இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மே18...

எங்களுக்கு எமது பிள்ளைகள் கிடைக்காவிட்டால் இவ்விடத்திலேயே செத்துவிடுவோம்

“இறுதி யுத்தத்தில் நந்திக்கடல் பகுதியில் காணாமல் போன எனது 17 வயதான பெண்பிள்ளை குறித்த தகவல்கள் எதுவுமே தெரியாது. இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்ததைக் கண்டதாக எமது உறவினர்கள் கூறினார்கள். எங்களுக்கு எமது பிள்ளைகள் கிடைக்கவேண்டும், இல்லையெனில் இவ்விடத்திலேயே செத்து விடுவோம்” என கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவான தாயொருவர்...
Loading posts...

All posts loaded

No more posts